search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Chief Minister"

    காவலர் தேர்வு வயதை தளர்த்த கவர்னருக்கு அதிகாரம் இருந்தும் மறுத்து வருவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை காவல்துறை தேர்வில் வயது வரம்பை 24 ஆக உயர்த்த 3 தடவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோப்பினை திருப்பி அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகம் வயது வரம்பில் தளர்வு கூடாது என பரிந்துரைத்திருப்பதாக கூறுகின்றனர் பரிந்துரை என்பது சட்டமாகாது.

    அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வயது வரம்பு தளர்த்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை இந்தியா முழுமைக்குமானது என்றால் அண்டை மாநிலமான தமிழகத்தில் வயது வரம்பு தளர்வு ஏன் அளிக்கப்படுகிறது.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, வயது வரம்பு 24 ஆக இருப்பது ஏன்? மத்திய அரசே இதனை கடைப்பிடிக்கவில்லை. காவலர் பணியிடங்களை குரூப் ‘சி’ பிரிவில் தான் வருகிறது. வயது வரம்பை தளர்த்துவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது. பணி நியமன விதிகளில் வயதை தளர்த்திக் கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு மத்திய அரசுவரை கவர்னர் கிரண்பேடி செல்ல வைத்து விட்டார்.

    புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வது, தேர்வு செய்யப்பட்ட அரசின் கடமை. இதற்காகத் தான் மத்திய உள்துறை வரை போராடி வருகிறோம்.

    எல்லாவற்றிலும் தனக்குத் தான் அதிகாரம் என அடிக்கடி கூறி வரும் கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என கூறுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #KiranBedi
    ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய ராகுல்காந்தி ஒப்புக்கொண்டாலும் எனக்கு உடன்பாடு இல்லை என புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார். #RajivGandhiCase #Narayanasamy
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் கடந்த 4 நாட்களாக மாற்று திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 ஆண்டுகால மோடியின் ஆட்சியால் நாடு முன்னேறவில்லை. நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி பணத்தை மாற்றினால் கருப்பு பணத்தை ஒழித்துவிடலாம் என்றார். ஆனால் கருப்பு பணம் ஒழிந்தபாடில்லை. புதிதாக நோட்டு அச்சடிக்கப்பட்டதால் ரூ.20 ஆயிரம் கோடி செலவானதுதான் மிச்சம். ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

    நானும் ஊழல் செய்யமாட்டேன். வேறு யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என வீராப்பு பேசி மோடி சவால் விட்டார். ஆனால் இப்போது ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது பூதாகரமாக கிளம்பி உள்ளது. இந்த ஊழல் குறித்து ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லாமல் திணறி கொண்டிருக்கிறார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை மன்னித்து விடுதலை செய்ய தலைவர் ராகுல்காந்தி ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.

    எனினும் தலைவர் ராகுல்காந்தி கூறியதால் நானும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெயருக்குதான் அ.தி.மு.க. அரசு. ஆனால் அரசை இயக்கி வருபவர் பிரதமர் மோடி தான். பாரதிய ஜனதாவின் டீம்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை மோடி ஆட்டிப்படைக்க அதன்படி இங்குள்ள ஆட்சியாளர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Rajivgandhi #RajivGandhiCase #PuducherryCM #Narayanasamy #PMModi
    கவர்னருக்கு உள்ள அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று வெளியிட்ட தீர்ப்பை ஏற்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவதை நிறுத்திகொள்ள வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி உள்ளார். #DelhiPowerTussle
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது, அது இந்திய அரசியல் அமைப்பு அமர்வு 5 நீதிபதிகள் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, முழு தீர்ப்பை நான் படிக்கவில்லை.

    முக்கிய அம்சங்களை நான் கூற விரும்புகிறேன், புதுவைக்கு 100-க்கு 110 சதவீதம் இந்த தீர்ப்பு பொருந்தும். கவர்னர் அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என தொடர்ந்து 2 ஆண்டுகளாக அறிவுறுத்தி உள்ளேன். 19 முறை கடிதம் எழுதியுள்ளேன், அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போட அதிகாரம் இல்லை என கூறியுள்ளேன்.

    பல பகுதிகளுக்கு சென்று பார்க்க உரிமை உண்டு. ஆனால், தனியாக உத்தரவு போட அதிகாரம் இல்லை என பல பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பக் கூடாது.

    முக்கிய கொள்கை முடிவுகளை மட்டுமே அனுப்ப வேண்டும். நான் கூறிய அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. துணை நிலை ஆளுனர் மக்கள் நல திட்டங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும்போது தடையாக இருக்க கூடாது.

    கவர்னர் முட்டுக்கட்டை போட அதிகாரம் இல்லை என நான் கூறியது தீர்ப்பிலேயே வந்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவில் கை வைக்க அதிகாரம் இல்லை என நான் கூறியதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    கேபினட் முடிவு அனுப்பினால் அதில் கை வைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. டெல்லியில் நிலம் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம், நிதி ஆகியவற்றில் உரிமை இல்லை. ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதால், அனைத்து அதிகாரமும் சட்டசபைக்கு உண்டு.

    கோப்புகள் அனுப்பும் போது காரணங்கள் கூறி கோப்புகளை திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் மிக தெளிவாக கூறியிருப்பது கவர்னருக்கு எந்த முடிவெடுக்கவும் தனி அதிகாரம் இல்லை.

    முழு அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே உண்டு. இது சம்பந்தமாக நான் தொடர்ந்து 2 ஆண்டுகளாக கவர்னர், பிரதமர், உள்துறைக்கு கடிதம் எழுதியும் எனக்கு சரியான பதில் கூறவில்லை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. மக்களுக்கு எங்களது அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் எங்களை எதிர்பார்க்கிறார்கள்.


    நாங்கள் நிறைவேற்றும் போது கோப்புகளை காலம் கடத்தி நிறைவேற்ற முடியாமல் தேவையில்லா காரணங்களை சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்ள அதிகாரங்களை நியமிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தீர்ப்பு புதுவை மாநிலத்திற்கு பொருந்தும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர் அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு அதிகாரம் கிடையாது. தேவைப்பட்டால் கோப்பில் விளக்கம் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரை அழைத்து பேசலாம். அவரும்கூட சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து பேச வேண்டும் என தெரிவித்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

    அதிகாரிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த உத்தரவை நான் போட்டிருக்கிறேன். யார் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறினாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு போட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தொடருவேன்.

    2 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள மரியாதையை குறைக்கும் வகையில் அதிகாரிகளை அழைத்து பேசி தன்னிச்சையாக செயல்பட வைத்ததை இனி நிறுத்தி கொள்வார்கள் என நினைக்கிறேன். கவர்னரை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மக்களாட்சி தத்துவத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமைச்சரவைக்கு உள்ள உரிமையில் அவர் தலையிட்டதால் தான் பிரச்சினை வந்தது. அதிகார போட்டி இதில் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DelhiPowerTussle #PuducherryCM #Narayanasamy
    ×