search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police exam"

    • எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
    • தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது.

    உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 17ம் தேதி மற்றும் 18ம் தேதி நடைபெற்ற காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

    தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் வெளியான நிலையில் உ.பி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • 26-ந் தேதி தொடங்குகிறது
    • இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் காலியாக உள்ள 253 போலீஸ் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.

    இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 4-ந் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கோரிமேடு 26-ந் தேதி தொடங்குகிறது

    பிறப்பு, கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி ஆகிய சான்றுகள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 26-ந் தேதி 112 பேர், 27-ம் தேதி 112 பேர், 28-ம் தேதி 26 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார். 

    • பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது.
    • போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    போலீஸ் தேர்வு

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 615 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஆயிரத்து 599 போலீஸ்காரர்கள் பணியிடங்களுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் விவரங்கள் மற்றும் தேர்வு குறித்து tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. மேலும் இந்த போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இலவச பயிற்சி

    எனவே இந்த போட்டித் தேர்வுக்கு தயாராக உள்ள தேர்வர்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Thoothukudi Employment Office Telegram channel-ல் பகிரப்பட்டுள்ள Google Forms -ஐ பூர்த்தி செய்தும் இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்யலாம். போலீஸ் துறை பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    காவலர் தேர்வு வயதை தளர்த்த கவர்னருக்கு அதிகாரம் இருந்தும் மறுத்து வருவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை காவல்துறை தேர்வில் வயது வரம்பை 24 ஆக உயர்த்த 3 தடவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோப்பினை திருப்பி அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகம் வயது வரம்பில் தளர்வு கூடாது என பரிந்துரைத்திருப்பதாக கூறுகின்றனர் பரிந்துரை என்பது சட்டமாகாது.

    அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வயது வரம்பு தளர்த்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை இந்தியா முழுமைக்குமானது என்றால் அண்டை மாநிலமான தமிழகத்தில் வயது வரம்பு தளர்வு ஏன் அளிக்கப்படுகிறது.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, வயது வரம்பு 24 ஆக இருப்பது ஏன்? மத்திய அரசே இதனை கடைப்பிடிக்கவில்லை. காவலர் பணியிடங்களை குரூப் ‘சி’ பிரிவில் தான் வருகிறது. வயது வரம்பை தளர்த்துவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது. பணி நியமன விதிகளில் வயதை தளர்த்திக் கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு மத்திய அரசுவரை கவர்னர் கிரண்பேடி செல்ல வைத்து விட்டார்.

    புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வது, தேர்வு செய்யப்பட்ட அரசின் கடமை. இதற்காகத் தான் மத்திய உள்துறை வரை போராடி வருகிறோம்.

    எல்லாவற்றிலும் தனக்குத் தான் அதிகாரம் என அடிக்கடி கூறி வரும் கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என கூறுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #KiranBedi
    ×