search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு
    X

    கோப்பு படம்.

    போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

    • 26-ந் தேதி தொடங்குகிறது
    • இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் காலியாக உள்ள 253 போலீஸ் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.

    இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 4-ந் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கோரிமேடு 26-ந் தேதி தொடங்குகிறது

    பிறப்பு, கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி ஆகிய சான்றுகள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 26-ந் தேதி 112 பேர், 27-ம் தேதி 112 பேர், 28-ம் தேதி 26 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை போலீஸ்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவக்குமரன் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×