search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FREE COACHING CLASS"

    • இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.
    • இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வங்கிப் பணி உள்ளிட்ட அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர மே 20 -ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பணியாளா் தோ்வாணையம், ெரயில்வே பணியாளா் தோ்வாணையம் மற்றும் வங்கிப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவற்றின் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் வெற்றி பெற உதவிடும் வகையில் மாவட்டந்தோறும் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.

    பயிற்சிக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    எனவே, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி மையத்தில் சேர மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்கள் நேரடியாக இணையதளம் வாயிலாக மே 20 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94990-55944 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது.
    • போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    போலீஸ் தேர்வு

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 615 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஆயிரத்து 599 போலீஸ்காரர்கள் பணியிடங்களுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் விவரங்கள் மற்றும் தேர்வு குறித்து tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. மேலும் இந்த போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இலவச பயிற்சி

    எனவே இந்த போட்டித் தேர்வுக்கு தயாராக உள்ள தேர்வர்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Thoothukudi Employment Office Telegram channel-ல் பகிரப்பட்டுள்ள Google Forms -ஐ பூர்த்தி செய்தும் இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்யலாம். போலீஸ் துறை பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போட்டித்தேர்வுகள் எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடங்குகிறது
    • வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்க உள்ளது.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய விவரங்களை இன்று மாலைக்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும் போட்டித்தேர்வு விண்ணப்பித்தற்கான நகல், ஆதார் கார்டு, புகைப்படங்கள் ஆகியவற்றை பயிற்சி வகுப்புக்கு வரும் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

    • குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
    • வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 2 ஆம் நிலைக் காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 2 ஆம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடத்துக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

    ஆக. 3 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது விவரங்களை வரும் 2-ந் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்.

    இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நகல், ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்.

    • மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இணையவழியில் (https://www.tnusrb.tn.gov.in/) வருகிற 15.8.2022 வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (29-ந்தேதி) தொடங்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்களுக்காகவே 20.3.2022 அன்று தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சியின் மூலமாக பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாகும்.

    தொலை தூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனை பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×