search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில் தவறில்லை - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி
    X

    வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில் தவறில்லை - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி

    தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். எனவே வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப், டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வருகிறார்.

    வாட்ஸ்-அப், டுவிட்டர் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இதனால் வாட்ஸ்-அப், டுவிட்டரை பயன்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

    வாட்ஸ்-அப் உத்தரவுக்கு பணிந்து செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.



    இந்த நிலையில் வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவது தவறில்லை என்று கவர்னர் கிரண்பேடி கூறினார்.

    தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். இதனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. மேலும், அவசரமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சமூக வலை தளங்கள் வசதியாக உள்ளது. எனவே, வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp

    Next Story
    ×