search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government schools"

    • அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வர நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
    • மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

    திருச்சி:

    அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கத் தயங்கும் இந்த காலகட்டத்தில் மேற்படிப்பை தொடர கல்லூரிகளில் அரசு கல்லூரி கிடைக்குமா என்ற ஏக்கம் நிறைந்து தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.

    ஆனாலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின் அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அரசு ஒரு புது யுத்தியை கையில் எடுத்திருக்கிறது.

    அரசு பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவிகளுடைய தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான புது முயற்சியாக கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை முதலில் பள்ளிகளில் நடைபெற்றது.

    அதன் பிறகு வட்டார அளவில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அந்த பள்ளியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ச்சியாக மாவட்டம், மாநிலம் என ஒவ்வொரு நிலைக்கும் வெற்றி பெற்றவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

    இந்த கலைத்திருவிழாவை பொறுத்தவரை மாணவர்கள் தங்களிடம் உள்ள எந்த திறமையாக இருந்தாலும் அதை மேடையில் வெளிப்படுத்தலாம். அதன்படி பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நடன போட்டி, இசை, நாடகம், ஊமை நாடகம், நாட்டியம் என மாணவர்கள் விரும்பியவாறு அவர்களின் திறமைகளை போட்டிகளில் காட்டலாம்.

    இப்படியாக நடைபெற்ற போட்டிகளில் அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாண,வ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டி உள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்களும் இவ்வளவு விஷயங்களை வைத்திருப்பவர்களா என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் அனைத்து போட்டிகளிலும் தங்களின் தனித்திறமையை வெகுவாகவே மெய்ப்படுத்திருக்கிறார்கள். அரசின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    படிப்பு மட்டுமின்றி மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை மேம்படுத்துவதற்கு அரசு பள்ளிகளில் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

    • கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்.
    • மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததற்கு காரணம் அதில் குறைந்த கல்வி கட்டணம் மட்டுமின்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முறை படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதும் முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அதனால் பல பேர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள்.

    இப்போது நடுத்தர குடும்பத்தினரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    மாநில அளவில் 37,636 அரசுப் பள்ளிகளில் 81 சதவீதம் கணினிகளை கொண்டிருந்தாலும் 79 சதவீத பள்ளிகளில்தான் அவை இயங்கும் நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.
    • அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

    அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகப்ப டுத்தவும் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டமானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் சரளமாக எழுதவும், படிக்கவும் வைப்பது இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இதற்காக பள்ளி கல்வித் துறையின் மூலம் 2-ம் கட்ட பயிற்சியானது தொட க்கநிலை வகுப்புகளைகையாளும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.

    அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    மேலும் மாணவர்க ளிடையே ஏற்படும் கற்றல் இடைவெளியை குறைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்கள் அனைவரும் ஆடல், பாடல் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாக பாடங்களை போதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நாராயணன், விரிவுரை யாளர் முருகேசன், ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் சிவானந்தம், வனிதாராணி, சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • மதுரையில் நேற்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு.

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மதுரை கீழ அண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்படவுள்ளது.
    • போதைப்பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    உடுமலை :

    உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், வரும் 19ந் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் செயல்படுத்தப்படுகிறது.அவ்வகையில் பல்வேறு அரசுத்துறையினருடன் இணைந்து, போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்படவுள்ளது.

    அதன்படி போதைப்பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை அறிவேன். ஒருபோதும் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாட்டிக்கு எதிரான தடுப்பு நடவடிகைக்கு துணை நிற்பேன்' என, மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார்.பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி, தலைமையாசிரியர் விஜயா, நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பழனிசாமி, தலைமை வகித்தார்.வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்வுக்கு, முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., தேன்மொழிவேல், 'போதை பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை' குறித்து பேசினார்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்உட்பட பலர் பங்கேற்றனர்.கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். முதல்வர் பிருந்தா, வரவேற்றார். டி.எஸ்.பி., டாக்டர் அன்பரசு, துணை முதல்வர் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.ஐ., நாகராஜன் கலந்து கொண்டார்.எஸ்.கே.பி., உள்ளிட்டபல பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    • தரம் உயர்த்தப்பட்ட லால்குடி உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் கூறுகையில், பல அரசு பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    திருச்சி:

    கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளில் குடிநீர் வசதி, போதிய கழிப்பிட வசதிகள் இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பூவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. கழிப்பிடம் கட்ட பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.

    இது பற்றி சமூக ஆர்வலர் உமா மகேஸ்வரி என்பவர் கூறும் போது, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு நிர்வாகம் தவறும் நிலையில் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழிக்க நேரிடுகிறது. அனைத்து தேவைகளையும் அவர்களால் பூர்த்தி செய்ய இயலாது. மாணவர்களுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

    அதே போன்று சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட லால்குடி உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். நடுநிலைப் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளிக்கூடம் கடந்த 2017-ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இதையடுத்து 450 ஆக இருந்த மாணவர் சேர்க்கை தற்போது 1,000 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் வகுப்பறைகளின் எண்ணிக்கை மாறவில்லை. போதிய வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் பள்ளி வராண்டா மற்றும் விளையாட்டு மைதானங்களிலும், மரத்தடியிலும் மாணவர்களை உட்கார வைத்துவிட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமாயி என்பவர் கூறும்போது, எனது மகனை இந்த பள்ளியில் முதலில் சேர்த்தேன். ஆனால் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் தற்போது வேறு பள்ளிக்கு மாற்றி விட்டேன். ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது என தெரிவித்தார்.

    லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கூறும்போது, இந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய வேண்டிய அவலம் நீடிப்பதாக வேதனை தெரிவித்தார்.

    இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் கூறுகையில், பல அரசு பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச்- டெஸ்க் பொன். கவுதமசிகாமணி எம்.பி. வழங்கினார்.
    • அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ள க்குறிச்சி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, நெடுமானூர் அரசு மேல்நிலை ப்பள்ளி, சங்க ராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பி னரிடம் கோரிக்கை விடுத்தனர். அ த ன்படி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ள க்குறிச்சி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகபிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அப்துல் கலீல், செயலாளர் கிரி ராசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ள க்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி கலந்து கொண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் 50 பெஞ்ச், டெஸ்க் வீதம் 4 பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் 200 பெஞ்ச், டெஸ்க் வழங்கினார். இதில் மாவட்ட தொ.மு.ச. துணைத் தலைவர் அன்பழகன், துணைச் செயலாளர் திராவிட மணி, வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்

    • அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    கொரோனாவால் 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனவே 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகளுக்காக எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செயல் மற்றும் விளையாட்டு வழியில் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாக பிரித்து பாடங்களை கற்று தருவதே இதன் அடிப்படை. பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடைபெறும்போது ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் பெற்றோரிடம் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்தும் மாணவர்களின் கற்றல் நிலை சார்ந்தும் பகிரப்பட வேண்டும்.வரும் 2025க்குள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு.

    இதன் மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று அந்த வாரத்தில் மாணவர்கள் அடைந்த கற்றல் விளைவு குறித்து அறிய வளரறி மதிப்பீடு மற்றும் இறுதியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.மேலும்எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்று கற்பதை பெற்றோர் அறியும் வகையில் வகுப்பறையை பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும். இதுகுறித்து பெற்றோர் கூட்டத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் செயல்பாடின்றி உள்ளது.உள்கட்டமைப்பு வசதி உட்பட எல்லா வகையிலும் அரசு பள்ளிகளை தன்னிறைவு பெறச்செய்ய தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்டமேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 89 அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளிகள், 76 உயர் நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 165 பள்ளிகளில் மேலாண்மை குழு பிரதிநிதிகள் பதவியேற்றனர்.இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,333 அரசு, நகராட்சி பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரம் ஒருமுறையாவது பள்ளியை பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கவேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு, தன்னார்வலர்கள், தங்களது சுய பங்களிப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    • தொ.மு.ச. சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து, உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட கொம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொ.மு.ச. சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பேனா, நோட்டு உள்ளிட்ட எழுதுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினார்.தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து, உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    பெரிய பேட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கழிப்பிட கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாக புகார் வந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா அப்பள்ளிக்கு சென்று சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைந்து சரி செய்யும் படி வலியுறுத்தினார்.

    அப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை எதிர்க்கட்சி தலைவர் சிவா சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் அங்காளன், கிளை செயலாளர் செல்வநாதன், தொகுதி இளைஞரணி அமைப்பா ளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • ஜூலை 1 முதல் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • 1,750 மாணவர்களுக்கு, 28 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஊரடங்குக்கு பிறகு முழுமையான கல்வியாண்டு துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை அதிகரித்தபோதும், போதிய ஆசிரியர்கள் இல்லாதது குறையாகவே உள்ளது.

    சமீபத்திய பொதுத்தேர்வு முடிவுகள் தேர்ச்சி விகிதம் குறைய இதுவும் முக்கிய காரணம்.இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்ப, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களைக் கொண்டு, வரும் ஜூலை 1 முதல் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 7 ஆயிரத்து500 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரமும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் 203 இடைநிலை ஆசிரியர், 54 பட்டதாரி ஆசிரியர், 89 முதுகலை ஆசிரியர் என 343 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,காலியிடங்கள் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்றவரை கொண்டே நிரப்பப்படும். முதுகலை ஆசிரியர் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலமாகவோ, நேரடி நியமனம் அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படும்போது, பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் ஆன ஆசிரியர் உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றனர்.

    15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி கூறியதாவது:-

    பணி மாறுதல், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள ஆசிரியர் பணியிடங்களே காலிப்பணியிடங்களாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதை நிரப்பவே சமீபத்தில் அரசாணையில் சொல்கிறது. இவற்றை தற்காலிகமாக நிரப்பினால் மட்டும் போதாது.மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. அவை புதிதாக உருவாக்கப்பட வேண்டும். எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பு வரை, 1,750 மாணவர்களுக்கு, 28 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளன.காலிப்பணியிடங்கள் போக மாணவர்களுக்கு கற்பிக்க 7 இடைநிலை, 8 பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. இதை நிரப்பவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

    காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலமும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் உள்ளதால் 8 மாதங்களுக்கு மட்டும் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக பணியிடத்தில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பதவி உயர்வு மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமோ நிரப்பபடும் பொழுது தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் எழுதி இருந்தனர்.
    • நெல்லையில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ைவ 43 அரசு பள்ளிகளில் இருந்து 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.45 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 53 பள்ளிகளில் இருந்து 3,363 மாணவர்கள், 4,063 மாணவிகள் என ெமாத்தம் 7,426 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 2,912 மாணவர்கள், 3,909 மாணவிகள் என 6,821 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.85 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 56 அரசு பள்ளிகளில் இருந்து 1,848 மாணவர்கள், 2,735 மாணவிகள் என மொத்தம் 4,583 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 1,650 மாணவர்கள், 2,637 மாணவிகள் என மொத்தம் 4,287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.54 சதவீத தேர்ச்சி ஆகும்.

    10-ம் வகுப்பு தேர்வை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் 84 அரசு பள்ளிகளில் இருந்து 6,152 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,211 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.70 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில் இருந்து 7,177 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6,059 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.42 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 86 அரசு பள்ளிகளில் இருந்து 5,103 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.71 சதவீத தேர்ச்சி ஆகும்.

    ×