search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director's Study in"

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.
    • அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

    அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகப்ப டுத்தவும் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டமானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் சரளமாக எழுதவும், படிக்கவும் வைப்பது இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இதற்காக பள்ளி கல்வித் துறையின் மூலம் 2-ம் கட்ட பயிற்சியானது தொட க்கநிலை வகுப்புகளைகையாளும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.

    அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    மேலும் மாணவர்க ளிடையே ஏற்படும் கற்றல் இடைவெளியை குறைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்கள் அனைவரும் ஆடல், பாடல் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாக பாடங்களை போதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நாராயணன், விரிவுரை யாளர் முருகேசன், ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் சிவானந்தம், வனிதாராணி, சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

    ×