search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gift"

    • தாசிம்பீவி மகளிர் கல்லுாரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    • சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், கிரியேட் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் நடைபெற்றது, கல்லூரி ஊட்டச்சத்து துறை தலைவர் முத்துமாரி ஈஸ்வரி வரவேற்றார்.

    நஞ்சில்லா இயற்கை உணவு பற்றியும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கமாக பாரம்பரிய பண்பாட்டு உணவில் உள்ள மருத்துவ குணங்கள், ஊட்டச் சத்துக்கள் மற்றும்சமைக்கும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி கல்லூரி மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப் பட்டது. அதில் கேழ்வரகு மிக்ஸர், கேழ்வரகு கூழ், வரகு டோங்கா, உளுந்து களி போன்ற வித விதமான பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து அசத்தினர். சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்புல்லாணி ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சித் திட்டம் சார்பில் சிறு குறு தானியங்களில் திண்பண்ட சத்துப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டது.

    கிரியேட் தொண்டு நிறுவன தலைவர் துரைசிங்கம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை டாக்டர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாராயணன், திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் கலா, கீழக்கரை நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், பாக்கர் அலி, இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார். ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத் கான், துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    என் குப்பை எனது பொறுப்பு (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், மேற்பார்வையாளர்கள், பரப்பு ரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோல்டு’.
    • இப்படத்தை ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் 'நெஞ்சுக்கு நீதி', 'வீட்ல விஷேசம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    அல்போன்ஸ் புத்திரன் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'கிஃப்ட்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




    • திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கபடும்
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கிராமங்கள் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் திருக்குறள் பெயர் பலகை வைப்பது, கூட்டமைப்பை வலுவப்படுத்துவது, சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வழியில் நடத்துவது, 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் பரிசு வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் நாகமுத்து தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தர்ராஜன்,மண்டலத் தலைவர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் இளங்கோ, துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அரசு வழக்குரைஞருமான சாந்தி, ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டியன், துணைச் செயலர் செவ்வேல், கொள்கை பரப்புச் செயலர் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாக அமைப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    • தபால் துறையில் மகளிர் மதிப்பு திட்ட பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

    பெரம்பலூர்,

    சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைத்து அஞ்சலகங்களிலும் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் மற்றும் 50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்த வாடிக்கையாளர்களில் 15 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி, பூலாம்பாடியை சேர்ந்த சீதாலட்சுமி, நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    • என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கோவை எம்.பி, பி.ஆர்.நடராஜன் தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசு வழங்கினார். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
    • 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    கடலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களுக்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 77 ஆயிரத்து 339 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 41 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டி நடத்தி, அதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022 வரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 6,952 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளில் 491 பேர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதையடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.
    • 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலையில் அமைந்துள்ள ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்தில் கோயம்புத்தூர் ஸ்போர்பி இவெண்ட்ஸ் என்ற நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிளான "அக்வா சாலஞ்" நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெ ல்வேலி, விருதுநகர், சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.

    இப்போட்டியினை தஞ்சாவூர் நீச்சல் சங்கம் செயலாளர் ராஜேந்திரன்,

    ஸ்போர்பி இவெண்ட்ஸ் தலைவர் ரகு மற்றும் ஷியாம், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர்கள் மார்டின், ஜோன்ஸ், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை நீச்சல் பயிற்றுனர் சார்லஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்போட்டியில் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.

    நீச்சலில் ஆறு வகைகளில் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிக ளுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் ஸ்போர்பி இவெண்ட்ஸ் சார்பாக வழங்கபட்டது.

    • கருகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஸ்ரீ வெள்ளச்சி ஸ்ரீ மலையரசி ஸ்ரீ சோனை கருப்பர் ஸ்ரீ ஓட்டத்திடல் காளியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப் ஏற்பாட்டில் முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா பெரும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.

    • என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு.
    • மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார்.

    விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற பிரித்திப்ராஜ், பீர்ஆரிஸ், நவீனா, துர்க்காதேவி, அன்பரசி, கனிகாஸ்ரீ, பவீனா, தீபதர்ஷினி ஆகிய 8 மாணவ- மாணவிகளுக்கும், மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற புத்தக திருவிழா கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப் பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பட்டதாரி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.

    • மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
    • எல்கை பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ செல்வ விநாயகர் குரூப்ஸ் நண்பர்கள் சார்பில், மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

    போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு–மொத்த பரிசாக ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது.

    எல்கைப் பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

    பந்தயங்களை செல்வவிநாயகபுரம், ஆண்டவன்கோவில், ஆத்தாளூர், தென்னங்குடி, கொன்றைக்காடு, காலகம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை பேராவூரணி போலீசார் செய்திருந்தனர்.

    • நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் ஆகியவன சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

    ×