search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "festival"

    • கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

    பொன்னமராவதி, 

    கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 51-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாள் அம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் நாள் மீனாட்சி அலங்காரத்திலும், 3ம் நாள் சிவலிங்க பூஜை அலங்காரத்திலும் என அம்மனுக்கு தினம்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விழாவையொட்டி நாள்தோறும் பக்தி இன்னிசை கச்சேரி நடை பெற்றது. விஜயதசமி நாளை யொட்டி அம்பு போடுதல் நிகழ்வு நடை பெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று புதன்கிழமை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்திற்குப்பின் அம்மன் மலர்களா லும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி காட்சியளித்தார். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா வையொட்டி நாதஸ்வர கச்சேரி நடை பெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

    • நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
    • சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் 23-ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைள் நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும்.

    அதனை தொடர்ந்து தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.

    தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் ,.அலுவலர் அசோக்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் கண்காட்சியை பார்வையிட்டார்
    • மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி புத்தகத்திருவிழா நேற்று தொடங்கியது. இது வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. நீலகிரி புத்தகத்திருவிழாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். முன்னதாக தேசிய விருதுபெற்ற கவிஞர் சீனு ராமசாமியின் புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தம் வகையில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை சார்பில் புத்தகத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு புத்தகங்கள் அடங்கிய தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு புத்தகம் எழுத வேண்டுமெனில் பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டும். அதேபோல மாணவ-மாணவிகள் எண்ணிய இலக்கை அடைய வேண்டுமெனில் தொடர்மு யற்சிகளை மேற்கொண்டு போராடி முன்னேற வேண்டும். ஒரு நல்ல புத்தகம் மனிதனின் வழிகாட்டியாக அமையும். எனவே வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

    நீலகிரி புத்தகத்திருவிழா வில் சமூகநலன், தோட்டக் கலை, ஆதிதிராவிடர்-பழங்குடியினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.

    மேலும் நீலகிரி புத்தகத்திருவிழாவில் தினமும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலைநி கழ்ச்சி, இலக்கிய சொற்பொ ழிவு நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே புத்தக திருவிழா வெற்றி பெற அனைவரும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி எம்.எல்.ஏ ஆர்.கணேஷ், மாவட்ட வனஅதிகாரி கவுதம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்க உறுப்பி னர் அருண்மாதவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், நகர்மன்ற தலை வர்கள் வாணீஸ்வரி (ஊட்டி), பரிமளா (கூடலூர்), ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (ஊட்டி), கீர்த்தனா (கூடலூர்), ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷோபனா, முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாவட்ட சமூகநல அதிகாரி பிரவீணாதேவி, மாவட்ட நூலக அதிகாரி வசந்தமல்லிகா, ஊட்டி தாசில்தார் சரவணகுமார், வட்ட வழங்கல் அதிகாரி மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
    • முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுக்கூர் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.

    இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், அரசு பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் வட்டார அளவிலான மாணவிகளின் கலைநிகழ்ச்சிி நடைபெற்றது.

    இதில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்,கல்வியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வருவது எனவும் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குகிறது என்றும் பள்ளியின் பற்றி எடுத்து கூறினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர் ஷீலா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தங்கம் நன்றி கூறினார்.

    • இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு அமைக்கப்பட்டிருந்தது.
    • பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.

    திருப்பூர்:

    பெண் தெய்வங்களைக் கொண்டாடும் விழாவான நவராத்திரி பண்டிகை திருப்பூர் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறையில் கொலுப் படிக்கட்டுகளை அமைத்து அவற்றில் பல்வேறு கடவுள் மற்றும் அவதார புருஷர்களின் பொம்மைகளை வைத்து, பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் ஒவ்வொரு வகுப்பும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கொலுப்படிக்கட்டுகளை அமைத்திருந்தனர்.

    குறிப்பாக இந்த ஆண்டு இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு, ஷேக்ஸ்பியரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வாழ்வின் ஏழு படிநிலைகள், இந்தியப் பேரரசர்களின் சாம்ராஜ்யம், விளையாட்டுத் துறையில் இந்தியாவின் பெருமைகள் தொடர்பான கொலு ஆகியவை காண்போரை வெகுவாக கவர்ந்தன.

    விழாவில் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியின் தலைவர் மோகன் கே. கார்த்திக், பள்ளியின் இயக்குநர் ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், செயலாளர் நிவேதிகா மற்றும் பள்ளியின் முதல்வர் தீபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உத்தப்புரத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்க கோரி வழக்கு டி.எஸ்.பி. பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உத்தப் புரத்தை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் பேரை யூர் அருகே உள்ள உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் வருகிற 24 முதல் 26-ந்தேதி வரை திருவிழா நடத்த திட்டமிட்டு, விழாக் குழு தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே ஏற் பட்ட பிரச்சினை காரண மாக இந்தகோவிலில் திரு விழா நடைபெறவில்லை.

    மேலும் மற்றொரு சமூ கத்தை சேர்ந்த நபர்கள் சிலர், கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு, கோவிலில் திருவிழா நடக்க விடாமல் செய்தனர். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சம ரசம் செய்யப்பட்டது.

    சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு அக் டோபர் 24 முதல் 26-ந்தேதி வரை முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி கோரி உயர் அதிகாரிக ளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி அளித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப் போது வழக்கு குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி. பதி லளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    முசிறி கூட்டுறவு வங்கியில்அரசு பள்ளி மாணவிகளுக்கான பயிற்சி நிறைவு விழா

    முசிறி,  

    முசிறி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியில் அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பயிலும் தொழில் கல்வி பிரிவு மாணவிகளுக்கு முசிறி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியில் உள்ளுறை பயிற்சி அளிக்க ப்பட்டு அதன் நிறைவு விழா நடைபெற்றது.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ தலைமை தாங்கினார் .தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சபாபதி சிறப்புரையாற்றி னார். பள்ளி முதுகலை ஆசிரியர்கள் வெண்ணிலா, குமாரத்தி, ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, தீபா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாணவி ஸ்ரீ ஜோதி கிரண் அனைவரை யும் வரவேற்றார்.

    பயிற்சியில் சங்கம் தோற் றம், வங்கியில் பயன்படுத்த ப்படும் ஆவணங்கள், கண க்கீடுகள் சான்று சீட்டுகள், கடன் வழங்கும் வழிமுறை கள், நகை கடன், பயிர் கடன் பற்றி தெளிவுரைகள், கடன் திரும்ப செலுத்தப்படுவதற்கு காலம், வட்டி கணக்கிடும் முறைகள், கணக்குகள் எவ்வாறு தணிக்கை செய்ய ப்படுகின்றன.

    கணினி மூலமாக கணக்கு ப்பதிவு செய்யும் முறை போன்ற அனைத்து விவர ங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயி ற்சியில் மாணவிகள் பயி ற்சி நிறைவு விழாவில் வங்கி செயலாட்சியர்கள் ஜெயந்தி, அனுசுயா ஆகியோர் மாண விகளுக்கு பாராட்டு சான்றி தழ் வழங்கினர்.

    நிகழ்ச்சி நிறைவில் மாணவி ஜெரினா பேகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பில் நடைபெற்றது
    • யானைகள்- வழித்தடத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது.

    இதில் வால்பாறையில் உள்ள என்.சி.எப் யானைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சங்கரராமன் கணேஷ் வனத்துறை ஏ.சி.எப் செல்வம், வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி, துணை தலைவர் செந்தில் 4-வது வார்டு உறுப்பினர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம், டிவி புகழ் விஜயகுமார் கலந்து கொண்டனர்.

    இதில் யானைகளை பற்றி யானைகள் இயல்பான வாழ்கை முறைகளையும் யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காடுகள் வளர யானைகள் முக்கியமான பங்கை கொண்டது.

    இதில் யானை வழித்தடம் பாதுகாக்க வேண்டும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவருக்கு தெரி வித்தனர்.

    • முன்னாள் அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
    • அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    அரியலூர்,  

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா வினை முன்னிட்டு அரிய லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முன்னாள் அரசுதலைமை கொறடாவும் மாவட்ட செயலாளருமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமை யில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவ ட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட இணை செயலாளர் பவானி வெள்ளைசாமி, மாவட்ட கலைபிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு, இணைச்செயலாளர் உதய சூரியன், காந்திர் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, சக்திவேல், இளங்கோவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சங்கர், இணை செயலாளர் பிரேம்குமார், சிவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட மகளிரணி ஜீவா அரங்கநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் முல்லை அகிலன், அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கர்,

    வக்கில் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடாஜல பதி, இணை செயலாளர் ராமகோவிந்தராஜ், சண்மு கம், எட்மன்ட் அறிவழகன், கோபாலகிருஷ்ணன், சுகுமார், சிவஞானம், முன் னாள் அரசுசிறப்பு வக்கில் சாந்தி, ஊராட்சி

    மன்ற தலைவர்கள் சிவா, செங்கமலை, நகரசெயலா ளர் செந்தில், முன்னாள் நகராட்சி தலைவர் கண் ணன், மேலத்தெரு தளபதி கணேசன், நாகராஜன், பழணியாண்டி, கருணாநிதி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • 350-க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான 350க்கு மேற்பட்டோர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.

    விழாவிற்கு மதுக்கூர் வட்டாரக்கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    ஓய்வு பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் வட்டார வள மையமேற்பா ர்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரகாஷ், வீரப்பரா ஜனும்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    விழாவின் நடுவர்களாக கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி, மன்னங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வினோத், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னத்துரை கலந்து கொண்டு போட்டியா ளர்களில் சிறப்பாக காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளை தேர்வு செய்தனர்.

    முதல் இடத்தை ஜெயபாரதியும், 2-வது இடத்தை கௌதமியும், 3-வது இடத்தை லதாவும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிவேலு பரிசுகள் வழங்கினார்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் செல்வராணி , உதவி ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர். மேலும் இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள், ஆசிரி யைகள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமா தேவி ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
    • ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் பிரை யோன் ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    அரிச்சுவடி மனநல மையம் சார்பில் உலக மனநல மாத விழிப்புணர்வு விழா காந்தி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தின ராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனநலம் மற்றும் மன அழுத்தம் பற்றி விழிப்பு ணர்வு குறித்து சிறப்புரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று மனநல விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    மேலும் அரிச்சுவடி மனநல மையத்தில் உள்ள மன நோயாளிகள் பங்கேற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அரிச்சுவடி மனநல மையத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கினார். வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கேரம் மற்றும் சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ரோஜா மற்றும் துளசி செடிகளை வழங்கினார்.

    ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் பிரை யோன் ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார். மனநல மருத்துவர் சத்திய மூர்த்தி சிறப்புரையாற்றி விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக ளுக்கு பரிசு வழங்கினார். டாக்டர் அசோகன் இசை நாற்காலி போட்டியை தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் வைத்தியநாதன் பாரத நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

    ஜோதி கண் மருத்துவ மனை டாக்டர் வனஜா வைத்திய நாதன், ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் திருமாறன், ரோட்டரி கிளப் பிரெஞ்சி சிட்டி தலைவர் சீனிவாசன், செயலாளர் ராமசந்திரன், முன்னாள் துணை கவர்னர் செந்தாமரை கண்ணன், முன்னாள் தலைவர்கள் சதீஷ்குமார், சாதிக், தேவராஜ், கோதை சதீஷ்குமார், கார்த்திகேயன், ஜெயக்குமார், பிரசாந்த், டாக்டர்கள் சாய்தர்ஷினி, அரவிந்தன், ஓமியோபதி மருத்துவர் கலையரசி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக ளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.

    இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நவசக்தி நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் அனை வரையும் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.

    அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமா தேவி ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளளர் டாக்டர் சத்திய வண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மகாளயபட்சம் முன்னோர் சாபம் நீக்கும் பொருட்டு சிறப்பு யாகம்
    • 2000 பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

    சாய்பாபாகாலனி,

    சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரி புஷ்கரணி பாலாறு சங்கமத்தில் காவிரி ஆரத்தி விழா உலக நலன் வேண்டி, நல்ல மழை வளம் பெற்று விவசாயம் உணவு தானியங்கள் வளர்ச்சி அடையவும் காவேரியில் சீக்கிரம் தண்ணீர் திறந்து விடவும் மகாலய பட்சம் முன்னோர் சாபம் நீக்கும் பொருட்டு சிறப்பு யாகம் காவிரி நதிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது. இதில் 2000 பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த பூஜையானது கோவை ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் தவத்திரு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் பண்ணவாடி ஆதீனம் வெங்கடேஸ்வர சுவாமிகள் மண்டல ஜீயர் சுவாமிகளும் கலந்து கொண்டனர்.

    ×