என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் யானைகள் திருவிழா
- அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பில் நடைபெற்றது
- யானைகள்- வழித்தடத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது.
இதில் வால்பாறையில் உள்ள என்.சி.எப் யானைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சங்கரராமன் கணேஷ் வனத்துறை ஏ.சி.எப் செல்வம், வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி, துணை தலைவர் செந்தில் 4-வது வார்டு உறுப்பினர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம், டிவி புகழ் விஜயகுமார் கலந்து கொண்டனர்.
இதில் யானைகளை பற்றி யானைகள் இயல்பான வாழ்கை முறைகளையும் யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காடுகள் வளர யானைகள் முக்கியமான பங்கை கொண்டது.
இதில் யானை வழித்தடம் பாதுகாக்க வேண்டும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவருக்கு தெரி வித்தனர்.
Next Story






