search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exhibition"

    • மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி தொடங்குகிறது.
    • பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண் காட்சி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவி டத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 6-ந்தேதி வரை நடை பெற உள்ளது.

    இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளால் தயாரிக்கப்பட்ட பனை ஓலை பொருட்கள், கடல் சிப்பி அலங்கார பொருட்கள், மசாலா பொருட்கள், சணல் பைகள், வீட்டு உபயோக பொருட்கள், சிறு தானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள், சேலைகள், நைட்டிகள், வயர் கூடைகள், உணவு பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள், மண்பானைப்பொருட்கள், பனங்கருப்பட்டிகள், அப்பளம், வடகம், சோப் ஆயில், பினாயில் மற்றும் பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் இநத கண்காட்சியை பார்வை யிட்டு மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துமாறு கேட்்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • அறிவியல் செயல்திட்டம், சிறுதானிய பயன்பாடு குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சி க .சு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான வானவில் மன்றம்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள பன்னாள் ஆயக்காரன்புலம்பஞ்சநதிக்குளம் தகட்டூர் புஷ்பவனம் கோடியக்காடுஉள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி அறிவியல் நாடகம் அறிவியல் செயல் திட்டம் சிறுதானிய பயன்பாடு குறித்துகண்காட்சி வைத்திருந்தனர் நிகழ்ச்சியின் நடுவர்களாக அறிவியல் ஆசிரியர் சிவகுமார் செந்தில்குமார் ராஜ்குமார் ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் படைப்புகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • துணைவேந்தர் குர்மீத்சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நூலகர் விஜயகுமார் வரவேற்றார்.
    • நிர்வாக பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக ஆனந்தரங்கப்பிள்ளை நூலகத்தில் ஜி-20 நாடுகளின் கொடி கண்காட்சி நடந்தது.

    துணைவேந்தர் குர்மீத்சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நூலகர் விஜயகுமார் வரவேற்றார்.

    கண்காட்சியில் ஜி-20 நாட்களின் தேசிய கொடிகள் மட்டுமின்றி, அவற்றின் தனித்துவமான வடிவமைப்புகள், வரலாற்று முக்கியத்துவம், கலாசாரம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குனர் ராஜீவ்ஜெயின், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • இயக்குனர் சாய்‌.இளங்கோவன் பார்வையிட்டார்
    • கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், ஆடைகள் ,நகைகள், ஆகியவற்றை பார்வையிட்டு பழங்குடி மக்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து வெகுவாக பாராட்டினார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் புதுவை கடற்கரை காந்தி திடலில் ஆடி பஜார் என்ற பெயரில் கைவினை கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிலையில், பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். மேலும்,நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், ஆடைகள் ,நகைகள், ஆகியவற்றை பார்வையிட்டு பழங்குடி மக்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து வெகுவாக பாராட்டினார்.

    மேலும், அடுத்த மாதம் 4-ந் தேதி புதுடெல்லியில் நடைபெறும் பழங்குடியினர் கைவினை கண்காட்சியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 2 பேர் முதல் 8 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் அவர்களுக்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்க உள்ளதாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனரிடம் கண்காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ராஜேஷ் கண்ணா,ராஜா,சாக்ரடீஸ்,வித்யாவதி,பண்டக காப்பாளர் அமிர்தலிங்கம் மற்றும் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்பட கேமிரா, திரைப்பட கருவி கண்காட்சி நடைபெற்றது
    • பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதல்புகைப்படக்கருவி மற்றும் திரைப்படக்கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்பமாற்றம்நிகழ்த்திய கருவிகளை சேகரித்து பாதுகாத்து வரும் நா. முகமதுஅப்சர்என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் காட்சிப்படுத்தியிருந்தார். முதல்சினிமா கருவியோடு உலகத் திரைப்பட தினத்தை முன்னிட்டு சினிமாதொழில் நுட்பம் வளர்ந்த வரலாறுகளை மாணவன் விளக்கிக் கூறினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவனைப் பாராட்டி பரிசு வழங்கினார். துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் பலர்கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் அருகே தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் கள், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை 200 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏளாளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • திருக்கோகர்ணத்தில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
    • வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடந்த கண்காட்சியினை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவிதங்கம்மூர்த்தி தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசிய போது,இந்தக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களைப் பார்க்கின்ற போது நமக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிடுகின்றன. மரத்தாலான பொருட்கள், பீங்கான்பொருட்கள், போன்ற அரியவகை பொருட்களை இந்தத்தலைமுறை அறிந்து கொள்ள இந்தக்கண்காட்சி பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.நெகிழிப்பயன்பாடுகளை தவிர்க்கவேண்டிய கட்டயாத்திலிருக்கின்ற இந்தக்காலத்தில் இதுபோன்ற பழையபுராதன பொருட்கள் மறுபடி பயன்பாட்டுக்கு வந்தால் இயற்கையை பாதுகாக்கலாம் காண்போரை வியக்கவைத்தது கண்காட்சி என்று தெரிவித்தார்.இந்தகண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திய முற்போக்குஎழுத்தாளர் சங்கத்தின் நகரத்தலைவர், தொல்லியல்துறை மாவட்டப் பொறுப்பாளர் கவிஞர் சு.பீர்முகமது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்களுக்கு விளக்கினார்.விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதிப்பிள்ளை ஆசிரியர்கள் கணியன்செல்வராஜ், உதயகுமார், கவிஞர்கள் சுரேஷ் மான்யா, புதுகைப்புதல்வன், ஈழபாரதி. பேராசிரியர் ராமன், மற்றும் ஏராளமானபொதுமக்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    • 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.
    • இந்த பொருட்காட்சியானது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படு த்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டது.

    இந்த பொருட்காட்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் 40க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.

    தொடர்ந்து 2-வது ஆண்டுகளாக இந்த பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த பொருட்காட்சி ஆனது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த வருடம் ரூ. 2.5 லட்சம் அளவில் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அதனை தாண்டி விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி மாவட்ட வளங்கள் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், நிதியாளர் ராஜாராமன், தாசில்தார் சக்திவேல், கல்லூரியின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

    கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முத்தமிழ் திருமகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது
    • திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    திண்டுக்கல்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. சிறுதானிய உணவுகள், ஜெல்லி மிட்டாய், தரை விரிப்புகள், டெரகோட்டா வெண்பொம்மைகள், கீ செயின், சின்னாளபட்டி சுங்குடி மற்றும் பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான பொருட்களை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், மேலாளர் வேல்முருகன், கல்லூரி முதல்வர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் உமா பேசியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் நெச வாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்க ளுக்கு முத்ரா கடன் உதவி களும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவா ளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நெசவுத் தொழில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டி கள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன.

    நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் பழனி குமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவ லர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினையும் கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    • பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை மேயர் பார்வையிட்டார்.
    • ரூ.75 முதல் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார் .

    தொடர்ந்து அவர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டார். கலைத்தட்டுக்களில் நுணுக்கமான முறையில் கருணாநிதி உருவம் பதிக்கப்பட்டதை பார்வையிட்டார். இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் கலைத்தட்டுக்கள், சுவாமி மலையில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட கடவுளின் சிலைகள், நாச்சியார் கோவில், மதுரை, வாகைக்குளத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகள், காகிதக்கூழ் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நவரத்தின கற்கள், கருங்காலி மாலைகள், ஸ்படிக மாலைகள், சந்தற மாலைகள், வாசனை திரவியங்கள், வெள்ளை மரம் , செம்மர கூலினால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், காட்டன் புடவைகள் உள்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

    இக்கண்காட்சியில் ரூ. 75 முதல் ரூ. 2,00,000 வரை மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன. வருகிற 19ஆம் தேதி வரை இந்த சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் திறந்து வைத்தார்
    • கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது

    திருச்சி 

    1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. 8-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2023 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி மத்திய பஸ்நிலையம் அருகே கலையரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த கண்காட்சி 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கண்காட்சியை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்து மலரை வெளியிட்டார். கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஸ்ரீமதி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நவீன் குமார்,

    திருச்சி கிரடாய் அமைப்பு சேர்மன் கோபிநாதன், அவங்கதலைவர் ரவி, பேர்ப்ரோ கமிட்டி தலைவர் மோகன் சீனிவாசன்.

    அகில இந்திய கிரடாய் துணைத்தலைவர் (தெற்கு) ஸ்ரீதரன், தமிழ்நாடு கிரடாய் தலைவர் இளங்கோ, செயலாளர் ஆனந்த்,

    கிரடாய் செயலாளர் மனோகரன், பொருளாளர் முகமதுஇப்ராகிம், ஃபேர் ப்ரோ செயலாளர் நசுருதீன், ஆலோசகர் ஷாஜகான்

    உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால் என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெறுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட படைப்புகளை 24 கட்டுமான நிறுவனத்தினர்களும், 6 வங்கிகள் மற்றும் வீடுகளுக்கான கதவுகள், டைல்ஸ், உள்அலங்காரம், எலக்ட்ரிகல் போன்ற 8 நிறுவனங்களுடன் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு வெவ்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகிறது. இங்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. கண்காட்சியினை பார்வையிடுவதற்கு அனுமதி இலவசம் ஆகும்.

    ×