search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
    X

    மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

    • மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி தொடங்குகிறது.
    • பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண் காட்சி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவி டத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 6-ந்தேதி வரை நடை பெற உள்ளது.

    இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளால் தயாரிக்கப்பட்ட பனை ஓலை பொருட்கள், கடல் சிப்பி அலங்கார பொருட்கள், மசாலா பொருட்கள், சணல் பைகள், வீட்டு உபயோக பொருட்கள், சிறு தானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள், சேலைகள், நைட்டிகள், வயர் கூடைகள், உணவு பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள், மண்பானைப்பொருட்கள், பனங்கருப்பட்டிகள், அப்பளம், வடகம், சோப் ஆயில், பினாயில் மற்றும் பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் இநத கண்காட்சியை பார்வை யிட்டு மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துமாறு கேட்்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    Next Story
    ×