search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East By Poll"

    • ஈரோட்டில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 6 மணிநேரம் 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
    • பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. அனைத்து ஓட்டு சாவடிகளிலும் காலை 6 மணி முதலே மக்கள் அதிக அளவில் திரண்டு தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தயாராக காத்து இருந்தனர்.

    ஓட்டுப்பதிவு தொடங்கியதும் அவர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் அதிக அளவில் வரிசையில் காத்து இருக்கின்றனர்.

    ஈரோட்டில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 6 மணிநேரம் 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர். இது 44.56 சதவீதம் ஆகும்.

    • காலை 7 மணி முதல் 11 மணிவரை 4 மணிநேரத்தில் 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காலை 7 மணி முதல் 11 மணிவரை 4 மணிநேரத்தில் 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர்.

    • ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.
    • அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாக இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

    ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாகவும், அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாகவும் இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

    • 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுகின்றனர்.
    • வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாக கே.எஸ்.தென்னரசு குற்றம்சாட்டினார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கள்ளுப்பிள்ளையார்கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்களித்தார்.

    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.தென்னரசு, தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது என்றார்.

    முன்னதாக, வாக்கை செலுத்தி விட்டு மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை கே.எஸ். தென்னரசு கண்காணித்தார். கிருஷ்ணாபாளையம் 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுவதாகவும் வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    • பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள் , 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது தபால் வாக்கினை ஏற்கனவே பதிவு செய்து விட்டனர். இதேப்போல் போலீசாரும் தங்களது தபால் ஓட்டினை பதிவு செய்துவிட்டனர்.

    பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 2 மணிநேரமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
    • இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறைவேற்றினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.
    • மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.

    * மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு செல்லப்படும். அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    தேர்தலில் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியாது என அலுவலர் தெரிவித்ததால் அக்ரஹாரம் வாக்குச்சாவடியில் சலசலப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
    • சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மேனகா, தேமுதிக சார்பாக போட்டியிடும் ஆனந்த் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

    இதனிடையே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

    மேலும், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

    இதனிடையே வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்தனர்.

    • 80 சதவீத மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வந்ததை கேட்டு நான் வேதனை அடைந்தேன்.
    • அதிகாரிகளிடம் பற்றி பேசி முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தினோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சம்பத் நகரில் பிரசாரம் செய்தார்.

    சொல்லின் செல்வன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் மகனுக்கு கலைஞரின் மகன் ஓட்டு கேட்டு வந்து இருக்கிறேன்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தம்பி திருமகன் ஈவெராவை வெற்றி பெற வைத்தீர்கள். 46 வயதே ஆன அவர் தீவிரமாக மக்கள் பணி, கட்சி பணி ஆற்றி வந்தார். திடீரென அகால மரணம் அடைந்தார். தந்தை இறந்த அந்த இடத்தை பூர்த்தி செய்ய மகன் வருவார். ஆனால் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை மகன் இருந்த இடத்தை பூர்த்தி செய்ய அவரது தந்தை வந்து உள்ளார். எனவே அவருக்கு மாபெரும் வெற்றியை தர வேண்டும்.

    தி.மு.க. 2 ஆண்டுகால சாதனைகளை மிகப்பெரிய பட்டியலாக சொல்லலாம். அதற்கு குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் சொல்கிறேன்.

    தி.மு.க.வை பொறுத்தவரை 5 முறை கலைஞர் ஆட்சி செய்து உள்ளார். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது கலைஞர் 2 முக்கியமான விசயத்தை சொல்வார். சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்பார். அதை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

    அவரது மகன் ஆகிய நான் சொல்வதை செய்வேன். செய்வதை சொல்வேன். சொல்லாததையும் செய்வேன். மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். நான் ஆட்சி பொறுப்பேற்ற உடன் 5 கையெழுத்து இட்டேன்.

    அதில் ஒன்று மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், உறவினர் வீட்டுக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சியாக செல்கிறார்கள். இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வேறு குடும்ப செலவு செய்கிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது.

    அடுத்ததாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம். நான் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது மாணவர்கள் சோர்வாக இருந்தனர். அவர்களிடம் கேட்ட போது காலை உணவு சாப்பிடவில்லை என்றனர்.

    80 சதவீத மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வந்ததை கேட்டு நான் வேதனை அடைந்தேன். இதையடுத்து அதிகாரிகளிடம் இது பற்றி பேசி முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தினோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.

    அடுத்ததாக விவசாய மக்களுக்கு உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். எதற்காக என்றால் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டி, அதுவும் ஒரு பைசா குறைக்க வேண்டி. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து 1989-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது சட்டமன்றத்தில் யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் நீங்கள் ஒரு பைசா குறைக்க வேண்டி போராடி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பைசா கூட தரவேண்டாம். உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார். அதனை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி இருக்கிறோம்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகத்திலே இல்லாத அளவிற்கு சென்னையில் நடத்தினோம். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கோரிக்கை பெற்று அதை நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

    இன்னுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் பெயரில் சமத்துவபுரம் திட்டம், உழவர் சந்தை, அரசின் முன்மாதிரி பள்ளி, பத்திரிகையாளர் நல வாரியம், எழுத்தாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் பெயரில் பள்ளிகள் மேம்பாட்டு திட்டம், காமராஜா் பெயரில் கல்லூரிகள் மேம்பாட்டு திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாட அறிவிப்பு, அதே நாளில் உறுதிமொழி எடுக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து நிறைவேற்றி வருகின்றோம். வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்திருக்கின்றோம். அன்னை தமிழில் அர்ச்சனை, பெரியார் நினைத்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை திராவிட மாடல் ஆட்சி நீக்கி இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கின்றேன்.

    நீட் விலக்கு பெற்றே தீர்வோம் என்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யவில்லை என சொல்லி வருகிறார். அவருக்கு தெரியவில்லை என்றால் கண் மருத்துவரை பார்த்து பரிசோதிக்க வேண்டும். அல்லது பேசிய பேச்சையாவது கேட்டு பார்க்க வேண்டும்.

    உண்மையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். 85 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கின்றோம். மீதமுள்ள வாக்குறுதிகளை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன்.

    பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை நிதிநிலை ஒழுங்காக இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி இருப்போம். கஜானாவை காலியாக மட்டுமல்லாமல் கடன் வைத்து சென்றார்கள். அதனை சரி செய்து வருகின்றோம். அவை சரி செய்யப்பட்டவுடன் உறுதியாக வருகிற மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையில் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு எப்பொழுது வழங்கப்படும் என்பதை அறிவிக்க இருக்கின்றோம்.

    இது எடப்பாடிக்காக சொல்லும் வார்த்தை அல்ல. ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் சொன்னதை செய்வோம், செய்ததை சொல்வோம். சொல்லாததையும் செய்வோம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

    இந்த இடைத்தேர்தல் ஒரு எடை தேர்தலாக பார்க்க வேண்டும். இந்த ஆட்சி எப்படி இருக்கிறது? என்ன செய்திருக்கிறது? தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்திருக்கிறார்களா? முறையாக இந்த ஆட்சி நடக்கிறதா என்பதை எடை போட்டு நீங்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு வழங்க தயாராக இருக்கிறீர்கள்.

    திருமகன் ஈவேரா கடந்த தேர்தலில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், உதயநிதி ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டு சென்றார், ஆனால் நான் கேட்கிறேன். அ.தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு தேவை. அந்த வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும். சத்தியமாக, உறுதியாக, நிச்சயமாக இதை நீங்கள் செய்வீர்களா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம்.
    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களின் காவல் அரணாக தி.மு.க. அரசு செயல்படுகிறது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்தது அ.தி.மு.க. தான். ஆனால் தேர்தல் வந்த உடன் பொய்களை சொல்லிக் கொண்டு வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது பா.ஜனதா கட்சி. அந்த சட்டத்தை கொண்டு வந்த போது ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்ட கட்சி அ.தி.மு.க. தான். மாநிலங்களவையில் அ.தி.மு.க.வினர் 10 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தான் குடியுரிமை சட்டம் நிறைவேறியது.

    ஆனால் அதே நேரத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர். உங்களுக்கு நன்றாக தெரியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி குடியரசு தலைவருக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம்.

    அருந்ததியர் மக்களுக்காக 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் கலைஞர் தான். அந்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சமயத்தில் கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு முதுகில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் ஓய்வுபெற்று வந்தார். இந்நிலையில் துணை முதலமைச்சராக இருந்த என்னை தலைவர் கலைஞர் கூப்பிட்டு இன்று சட்டமன்றத்தில் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. என்னிடத்தில் இருந்து நீ தான் நிறைவேற்றி தரவேண்டும் என்றார். அதன் அடிப்படையில் நான் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அருந்ததியருக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

    ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள், கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வரப்போகிறது.

    அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன். அத்தனை பேரையும் பிடித்து ஜெயிலில் போடுவோம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு அந்த அம்மா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று பேசினார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள்.

    குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை, அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

    ×