என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 44.56 சதவீத வாக்குகள் பதிவு
- ஈரோட்டில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 6 மணிநேரம் 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. அனைத்து ஓட்டு சாவடிகளிலும் காலை 6 மணி முதலே மக்கள் அதிக அளவில் திரண்டு தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தயாராக காத்து இருந்தனர்.
ஓட்டுப்பதிவு தொடங்கியதும் அவர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் அதிக அளவில் வரிசையில் காத்து இருக்கின்றனர்.
ஈரோட்டில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 6 மணிநேரம் 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர். இது 44.56 சதவீதம் ஆகும்.
Next Story






