search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை
    X

    தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை

    • 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுகின்றனர்.
    • வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாக கே.எஸ்.தென்னரசு குற்றம்சாட்டினார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கள்ளுப்பிள்ளையார்கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்களித்தார்.

    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.தென்னரசு, தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது என்றார்.

    முன்னதாக, வாக்கை செலுத்தி விட்டு மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை கே.எஸ். தென்னரசு கண்காணித்தார். கிருஷ்ணாபாளையம் 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுவதாகவும் வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    Next Story
    ×