என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
- ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.
- அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாக இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாகவும், அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாகவும் இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
Next Story