என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ED officer"
- லாரி முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
- விசாரணையில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிகரெட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த தொரவாரி சமுத்திரம் , கொல்கத்தா சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திருப்பதி விஜிலென்ஸ் போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரி முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கன்டெய்னர் லாரியுடன் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிகரெட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் களின் மதிப்பு ரூ. 1. கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது.
- காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. மழை, வெள்ளம் வருவதும் அதனை பார்வையிட வேட்டியை மடித்துக்கொண்டு முன்பு கலைஞர், பின்பு ஸ்டாலின், அதன் பின்பு தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், இனி அவரது மகன் இதே போல பார்வையிட செல்வார். இதற்கு நிரந்தர தீர்வு காண அவர்களிடம் எந்த ஒரு தீர்வும் கிடையாது.
சென்னையில் மழை வெள்ளத்தோடு வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்கிறது. மக்கள் மிகப்பெரிய அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். உலக அளவிலான நிபுணர்களை வரவழைத்து இதற்கு தீர்வு காண வேண்டும். முன்பு ஜெனிவாவில் இது போன்ற நிலை இருந்தது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் கடைசியாக நடைபெற்றுள்ளது. தற்போது இங்கு நடைபெற்றுள்ளது. இது முதலும் முடிவும் அல்ல, அந்தத் துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல.
இதுபோல காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் காவல்துறை முழுமையாக தவறு என்று கூற முடியுமா? காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் முதிர்ச்சி இன்றி பேசி வருகின்றனர்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர உள்ளது. தெலுங்கானாவில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற நிலையில் இந்த முறை இரட்டை இலக்கங்களில் பா.ஜ.க. வெற்றி பெற உள்ளது. மிசோராமில் அந்த மாநில கட்சி வெற்றி பெரும் சூழல் உள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அங்கு துடைத்து எறியப்படும் நிலையில் உள்ளது.
சத்தீஸ்கரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறினார்கள். அரசியலுக்கு வரவழைக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ஆகமாட்டார் என்றார்கள். எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டார், அமைச்சராக மாட்டார் என்றார்கள். அமைச்சராக்கப்பட்டார். அதுபோல துணை முதல்வர் ஆக மாட்டார் என்று கூறினால் ஆவார் என்று அர்த்தம். அது அவர்கள் விருப்பம். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி, நெல்லையில் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.
மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அரசியல் சூழல் மாறி இருப்பதன் காரணமாக இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார்.
- மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை:
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் அங்கிட் திவாரி என்பவர், கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மறுநாளே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி அந்த அரசு ஊழியர் மதுரைக்கு சென்றபோது, அங்கிட் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார். பின்னர் மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டியுள்ளதால் முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தொடர்ந்து வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் மிரட்டியுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர் கடந்த மாதம் 30-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கிட் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கித் திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2-வது தவணையாக நேற்று காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். விசாரணையில் இவர், இதுபோல பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதுதொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இவர் மட்டுமன்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அங்கித் திவாரியின் வீடு, அவருக்கு தொடர்புடைய இதர இடங்கள் மட்டுமன்றி மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட விவகாரத்தில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் நேற்று இரவு சாஸ்திரி பவன் வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டது. மத்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் சாஸ்திரி பவன் வளாகம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
- மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
- வரும் 15-ம் தேதி வரை அங்கிட் திவாரியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஒரு கார் நேற்று காலை வந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.
காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது. இவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர்.
இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ 1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி.
இதனால் அச்சப்பட்ட டாக்டர் சுரேஷ் ஏற்கனவே ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டும் என்பதால் மேலும் ரூ.31 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கிட் திவாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபுவால் கொடுக்கப்பட்டது. இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் அங்கிட் திவாரி. அவரை விரட்டிச் சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்சப் பணம் ரூ.20 லட்சம் மொத்தமாக கைப்பற்றப்பட்டது தெரிய வந்தது.
அங்கிட் திவாரியின் கூட்டாளிகள் யார்? அங்கிட் திவாரி யாருக்கு எல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் என பல மணிநேரம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
மதுரையில் உள்ள அங்கிட் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது சி.ஆர்.பி.எப். போலீசார் இரவில் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால், பாதுகாப்புக்கு வந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருக்கு தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 5 மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச்சென்றனர்.
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில், தொடர்ந்து, வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணிநேரம் அதிரடி சோதனை நடத்தியதும் அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
- அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.
காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது. இவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர்.
இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு இட ங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அதில் டாக்டர் ஒருவரிடம் பெற்ற பணம் இந்த ரூ.20 லட்சம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேசம் மற்றும் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்