search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி அருகே லாரியில் கடத்திய ரூ.1.81 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
    X

    திருப்பதி அருகே லாரியில் கடத்திய ரூ.1.81 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

    • லாரி முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
    • விசாரணையில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிகரெட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த தொரவாரி சமுத்திரம் , கொல்கத்தா சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திருப்பதி விஜிலென்ஸ் போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    லாரி முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கன்டெய்னர் லாரியுடன் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிகரெட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் களின் மதிப்பு ரூ. 1. கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×