search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Shivakumar"

    • பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
    • கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."

    "விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.

    • பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு பதவி ஏற்பு விழா.
    • காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு

    கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.

    முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

    இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் அமைச்சர் ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

    அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர். இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    • ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி.
    • கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

    இதுவரை மந்திரிகளுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் மந்திரிசபையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் மந்திரி பதவி கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.

    இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியே டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    மாநிலத்தில் அரசியல் ரீதியாக மிக முக்கியமான சமூகமான லிங்காயத்துகள், காங்கிரஸ் வெற்றிக்கு தங்கள் பெரும் பங்களிப்பைக் காரணம் காட்டி, முதல்-மந்திரி பதவிக்கு உரிமை கோரினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்-மந்திரி ஆக்கியதை தொடர்ந்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கே அதிக மந்திரி பதவிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.

    முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மந்திரிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், டெல்லியில் 2 நாட்களாக முகாமிட்டுள்ளனர். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து, தங்கள் ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி தரும்படி கேட்டனர்.

    அவரோ, தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து, ஆலோசிக்கும்படி தெரிவித்து விட்டார். இதையடுத்து, வேணுகோபால் வீட்டில் நேற்று 3 கட்டமாக கூடி ஆலோசனை நடத்தினர். இருவருமே, தங்கள் ஆதரவாளர்கள் பட்டியலை தனித்தனியாக தயாரித்து எடுத்து வந்திருந்தனர். இதை வழங்கி, இவர்களால் கட்சி வளர்ச்சிக்கு லாபம் என விளக்கினர்.

    மற்றொரு பக்கம் டெல்லியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களுடன், நேற்று 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.,க்களும் இணைந்தனர். மொத்தம் இருப்பதே, 24 பதவிகள். ஆனால், 50-க்கும் அதிகமானோர் மந்திரி பதவி கேட்டு, தங்கள் ஆதரவு தலைவர்களை சந்தித்து பேசினர். யாரை மந்திரி ஆக்குவது, எதன் அடிப்படையில் வழங்குவது, அவர்களால் கட்சிக்கு என்ன லாபம், எந்தெந்த சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தருவது என, பல்வேறு கோணங்களில் ஆலோசிக்கப்பட்டது.

    அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேலிட தலைவர்கள், கார்கேவுக்கு பட்டியல் தயாரித்து அனுப்பினர். அவர் சிலரை மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளார். பின், பட்டியலை திருத்தி மீண்டும் அனுப்பி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் இன்று காலை சந்தித்து, மந்திரிகள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

    இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், நாளை காலை, 11:45 மணிக்கு புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா நடக்கும் என தெரிகிறது.

    இதில் தேஷ்பாண்டே, லட்சுமண் சவதி, ஹெச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், தினேஷ் குண்டுராவ், விஜயானந்த் காஷப்பனவர், அசோக் பட்டண், பசவராஜ் ராயரெட்டி, சிவராஜ் தங்கடகி, கிருஷ்ண பைரேகவுடா.'ஹரிபிரசாத், சரண பிரகாஷ் பாட்டீல், மஹாதேவப்பா, ஈஸ்வர் கன்ரே, புட்டரங்கஷெட்டி, நரேந்திர ஸ்வாமி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, சுதாகர், செலுவராயஸ்வாமி, வெங்கடேஷ் உட்பட மூத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும், 24 மந்திரி பதவிகளும் நிரப்பப்படும்' எனவும், காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம்.
    • நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க நான், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லி செல்கிறோம். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து முதல்கட்ட மந்திரிசபை அமைப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளோம். முதலில் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்போம். புதிய மந்திரிகள் யார் என்பதை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம். யூகங்களுக்கு இடம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். எங்களின் முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    எங்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். விழாவில் பங்கேற்க வருகிறவர்கள் விழாவுக்கு சற்று முன்னதாகவே வந்துவிட வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்காமல் இருக்கலாம். அதே போல் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

    உத்தரவார திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமா?, என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் முடிவு எடுத்ததும் அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம். ஆனால் நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    அவர் டெல்லி புறப்படும் முன்பு கன்டீரவா அரங்கத்திற்கு நேரில் வந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார்.

    • கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்க உள்ளார்.
    • துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்கிறார் என காங்கிரஸ் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

    கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    இதற்கிடையே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பினர். அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    தனக்கு ஆதரவளித்துள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அப்போது டி.கே.சிவகுமார் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.
    • கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார்.

    கர்நாடக காங்கிரசில் வலிமை மிக்க தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இவர் 1962-ம் ஆண்டு மே 15-ந்தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா, கவுரம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

    கர்நாடகாவில் 2-வது பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடாவை சேர்ந்த இவர் 1980-களில் மாணவர் பருவத்தில் காங்கிரசில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தமது 27 வயதில் 1989-ல் மைசூரு மாவட்டத்தின் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

    பின்னர் 1994, 1999, 2004 தேர்தல்களிலும் சாத்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வாகை சூடினார். 2008, 2013, 2018 மற்றும் தற்போதைய தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்து இருக்கிறார். கனகபுராவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றவர் டி.கே.சிவகுக்மார். காங்கிரஸ் மேலிடத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவர் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்குவது வழக்கம்.

    2002-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அரசாங்கத்தை காப்பாற்றிய பணியில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.

    கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது எம்.எல்.ஏக்களுக்காக மும்பையில் வீதியில் இறங்கி மல்லுக்கட்டியவர் இவர். அடுத்தடுத்த வழக்குகள், விசாரணைகள் என பாஜக அரசு அலைக்கழித்த போது ஒட்டுமொத்த ஒக்கலிகா கவுடா ஜாதியினரும் பெங்களூரு நகரை முற்றுகையிட்டு பிரம்மாண்டமாக நடத்திய பேரணி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 2020-ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்த முறை முதல்-மந்திரி பதவிக்காக முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு முட்டுக்கட்டையாக நிற்காமல் விலகிக் கொண்டு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 நாட்களாக இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த இவருக்கு துணை முதல்வர் பதவியோடு 2 முக்கிய துறைகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒன்று மின்சாரத்துறை. 2-வது துறை நீர்ப்பாசனத்துறையாகும்.

    கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார். அதன்பிறகு 2018 ல் அமைந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணியில் டி.கே. சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் இந்த 2 துறையை அவர் நிர்வகிக்க வாய்ப்புள்ளது.

    • இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுத்ததால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

    தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது.

    இன்று காலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தராமையா அடுத்த முதல்வர் என்றும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. டி.கே.சிவக்குமார் மாநில தலைவராகவும் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 5 நாட்களாக நிலவி வந்த மூட்டுக்கட்டை நீங்கியது.

    அடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியை பெற சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதற்கு எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
    • ராகுல் காந்தி ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு சித்தராமையாவிற்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இருவருமே முதல்-மந்திரி பதவியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர். இதனால் டெல்லியால் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் போனது.

    சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மல்லிகார்ஜூனா கார்கே உடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 48 மணி நேரமாக மாறி மாறி ஆலோசனைகள் செய்யப்பட்டன. சித்தராமையாவிற்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றால் அவர் கட்சியை உடைத்து விடுவார். தனியாக கூட கட்சி தொடங்கும் நிலைக்கு செல்வார்.

    அதனால் டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி இதில் ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சோனியா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டி.கே. சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். அதோடு டி.கே. சிவக்குமாருக்கு 4 பெரிய துறைகள் மொத்தமாக அமைச்சரவையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல், கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் பேசியும் இறங்கி வராத டி.கே. சிவக்குமார் சோனியா காந்தி பேசிய பின்பே இறங்கி வந்துள்ளார்.

    • ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம்.
    • தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதாவது முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவி வகிக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் கட்சியை நான் தான் வளர்த்துள்ளேன். இந்த தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற நான் தான் காரணம் என கூறி, முதல்-மந்திரி பதவியை தனக்கே வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

    கட்சி மேலிட உத்தரவின் பேரில் சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிட நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் டெல்லி செல்லாமல் புறக்கணித்தார். பின்னர் அவரை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருவில் வைத்து டி.கே.சிவக்குமாருடன் நேற்று காலை தனியாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் 50-50 பார்முலாவை ஏற்கும்படியும், ராகுல்காந்தி உத்தரவின் பேரில் உங்களுக்கு நிச்சயம் அடுத்த 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே இதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி டி.கே.சிவக்குமாரிடம் கூறினார்.

    ஆனால், டி.கே.சிவக்குமார், இவ்வாறு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக ராகுல்காந்தி கூறினார்.

    ஆனால் இதுவரை அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருக்கிறார். ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம். தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது. இதே நிலை எனக்கும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியதுடன், தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி நிர்வகிக்கும் முறை வேண்டாம். என்னை முதலில் முதல்-மந்திரி ஆக்குங்கள் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.
    • சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து" என்றார்.

    பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

    • சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    • உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தானது.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

    சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

    • ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது.
    • மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் தான்.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக எழுந்த ஊழல் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார்கள் ஒவ்வொன்றையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மிக சிறப்பாகவே செயல்பட்டனர். பா.ஜனதா அரசை இக்கட்டான நிலையில் சிக்க வைக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அந்த தலைவர்கள் நழுவ விடவில்லை. கடந்த ஓராண்டாகவே பா.ஜனதா அரசுக்கு எதிராக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதாவது ஒரு ஊழல் புகார் வெளிவந்தபடியே இருந்தது.

    இப்படி தொடர்ந்து பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது. இவற்றை சரியான முறையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் அறுவடை செய்தனர் என்றே சொல்லலாம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் காலியான 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள தொகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும் ராஜினாமா செய்தனர். அதில் தினேஷ் குண்டுராவின் ராஜினாமா ஏற்கப்பட்டது. ஆனால் சித்தராமையாவின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் நீடிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு கர்நாடக காங்கிரசுக்கு யாரை கட்சி தலைவராக நியமிக்கலாம் என்ற விவாதம் எழுந்தது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவதை சித்தராமையா எதிர்த்தார். தான் முதல்-மந்திரி ஆவதற்கு டி.கே.சிவக்குமார் தடையாக இருப்பார் என்று அவர் கருதினார். ஆனால் சித்தராமையாவின் எதிர்ப்பையும் மீறி கட்சி மேலிடம் டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவியை வழங்கியது.

    அதன் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆவார் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி கூட்டங்களில் கூறினர். அதற்கு டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் இரு தரப்புக்கும் கட்டளையிட்டது. அதன் பிறகு முதல்-மந்திரி பதவி குறித்து பேசுவதை இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற தொடங்கினர். கட்சி மேலிட தலைவர்கள், முதலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள், அதன் பிறகு முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று இரு தரப்புக்கும் உத்தரவிட்டனர். அதே போல் அவர்கள் 2 பேரும் ஒற்றுமையாகவும், பிறகு தனித்தனியாகவும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சித்தராமையா ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதல்-மந்திரி பதவி குறித்து தனது மனதில் இருந்ததை வெளிப்படுத்திவிட்டார். அதாவது, முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்து அடிப்படையில் தான் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறினார். ஏனெனில் எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

    ஆனால் டி.கே.சிவக்குமாரோ, முதல்-மந்திரி பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று கூறி வருகிறார். இந்த நிலையில் அக்கட்சி தலைவா்கள் நினைத்தபடி காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஏற்கனவே 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். ஆட்சியை திறம்பட நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது.

    கட்சியை வலுப்படுத்தும் திறன் இருப்பது போல் ஆட்சியை சிறப்பாக நடத்தும் திறனும் டி.கே.சிவக்குமாருக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை கர்நாடகத்தில் குறிப்பாக தென் கர்நாடகத்தில் பலமாக இருக்கும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை பலவீனப்படுத்தி காங்கிரசை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டவர் டி.கே.சிவக்குமார். அதனால் தான் இந்த முறை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டையை தகர்த்து அங்கு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

    முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதை பார்ப்போம்.

    குருபா சமூகத்தை சேர்ந்த சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்தார். அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், 'அஹிந்தா' (தலித், ஓ.பி.சி., சிறுபான்மையினர்) தலைவராக பார்க்கப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள அவருக்கு கர்நாடகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயர் எடுத்துள்ள அவர் மீது எந்த விதமான ஊழல் வழக்குகளோ அல்லது சொத்து குவிப்பு வழக்குகளோ கிடையாது.

    அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அவருக்கு ஆட்சி நிர்வாகத்திலும் அதே அளவுக்கு அனுபவம் உள்ளது. நகைச்சுவை, கேலி, கிண்டல் கலந்த சித்தராமையாவின் பேச்சு மக்களை சுண்டி இழுப்பதாக உள்ளது. சாதி, மதம், கட்சி ஆகியவற்றை தாண்டி பொதுக்கூட்டங்களில் அவரது பேச்சை கேட்பதற்கே பெருங்கூட்டம் கூடுவது வழக்கம். மாற்று கட்சியினரும் அவரது பேச்சை ரசித்து கேட்பது உண்டு. ஆனால் சித்தராமையா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவ்வளவாக தீவிரமாக செயல்பட கூடியவர் இல்லை. கரடு முரடாக பேசும் அவர் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக எதிர்த்து பேசக்கூடியவர்.

    சித்தராமையா ஏற்கனவே 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள அனுபவம் கொண்டவர். பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை வலுவாக எதிர்க்கும் திறன் கொண்டவர். அதே நேரத்தில் அவரது பலவீனம் என்னவெனில், நல்லாட்சி வழங்கினாலும் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தவறியது, காங்கிரசில் இன்னும் சில தலைவர்கள், சித்தராமையா வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்று சொல்வது, அவருக்கு தற்போது 75 வயது ஆவது போன்றவை அவருக்கு பலவீனமாக உள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமார், 1985-ம் ஆண்டு தனது 25-வது வயதிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்து சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மாணவர் காங்கிரசில் நிர்வாகியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று அவர் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

    கட்சியை வலுப்படுத்துவதிலும், வியூகம் வகுப்பதிலும் சிறந்து விளங்கும் அவர், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மெல்ல உருவாகி வருகிறார். தென் கர்நாடகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வட கர்நாடகத்தில் அவ்வளவாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். காங்கிரசின் "டிரபல் சூட்டர்" என்று சொல்லப்படும் டி.கே.சிவக்குமார், கட்சி மேலிடம் கூறும் பணிகளை அப்படியே அச்சு பிசகாமல் செய்து முடிப்பவர்.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது குதிரை பேரத்திற்கு பயந்து அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அந்த எம்.எல்.ஏ.க்களில் சிலரை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தபோதும், அது முடியாமல் போனது. அந்த நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட பலரது மந்திரிசபையில் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பணியாற்றியுள்ளார். கட்சியை வலுப்படுத்தும் திறன் கொண்ட டி.கே.சிவக்குமாருக்கு மாநிலம் முழுவதும் சம அளவில் மக்கள் செல்வாக்கு இல்லை. ஒக்கலிகர் சமூகத்தின் பலமான தலைவராக கருதப்படும் அவர் பிற சமூகங்களுக்கான தலைவராக மற்றவர்கள் பார்ப்பது இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

    டி.கே.சிவக்குமாா் கட்சிக்கு விசுவாசமிக்கவர், சோனியா காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக பழகக்கூடியவர், ஒக்கலிகர் சமூகம் அவரை ஆதரிப்பது, வயது போன்ற விஷயங்கள் பலமாக அமைந்துள்ளன. மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பதால் அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். இதற்கு முன்பு எஸ்.எம்.கிருஷ்ணா, வீரேந்திர பட்டீல் போன்ற தலைவர்கள் மாநில தலைவர்களாக இருந்து முதல்-மந்திரி பதவியை அடைந்தவர்கள். கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது. ஆனால் சித்தராமையாவின் அனுபவம், மக்கள் செல்வாக்கு, அவருக்கு இருக்கும் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, வழக்குகள் போன்றவை டி.கே.சிவக்குமாருக்கு தடையாக உள்ளன. அவரது பலவீனம் என்று சொன்னால், டெல்லியில் சிறையில் இருந்தது, பிற சமூகங்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக இல்லாதது போன்றவை ஆகும்.

    மேலும் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அமைப்புகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரும் நாட்களில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா போல் அந்த வழக்குகளில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இவை டி.கே.சிவக்குமாருக்கு பலவீனமாக உள்ளது.

    எதுவாக இருந்தாலும், இருவருமே பலமான, உறுதியான தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×