search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepam"

    • ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும்
    • கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்பதால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.

    குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.

    தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

    தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

    கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    • தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது ஆகும்.
    • கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார் இறைவன். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.

    தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது.

    வீடுகளில் தீபத்தை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் சிறந்த பலன்களை கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    • செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும்.

    கருவாழக்கரை காமாட்சியம்மன்

    மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில், 9வது கிலோ மீட்டரில், காவிரியின் வடபகுதியில் கருவாழக்கரையில் காமாட்சி அம்மனின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் நவக்கிரக சேத்திரங்களான சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை அமைந்திருக்கின்றன. எனவே இவர்களுக்கு நடுவே நவக்கிரக தேவியாக ஸ்ரீகாமாட்சி அம்மன் அமைந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். இங்கு ஆடி மாத வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    சிறுவயல் பொன்னழகியம்மன்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது சிறு வயல், இங்கே கோயில் கொண்டுள்ள பொன்னழகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். திருமண அனுக்ரஹ ஸ்தலம். பவுர்ணமியன்று அம்மனைத் தரிசித்து வந்தால்.கண்டிப்பாக குழந்தைப் பேறு கிட்டும். தண்ணீரில் விளக்கு எரிய தனிக் கருணை புரிவாள் எங்கள் அம்பாள் என இங்கு வந்த அரசு உயர் அதிகாரியிடம் ஆலயத் தக்கார் கூறி இருக்கிறார். அதை நிரூபித்துக் காட்டுமாறு அந்த அதிகாரி சொல்ல, புது அகல்களில் நீரை ஊற்றி திரிபோட்டு விளக்கை ஏற்றினார்களாம். தீபம் எரிந்து அம்மன் கருணை வெளிப்பட்டது. ஆடி மாதம் இங்கு சிறப்பு பூஜைகள் உண்டு.

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்

    கோவில்பட்டி செண்பகவல்லிக்கு வளைகாப்பு உத்ஸவம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போலவே நடை பெறுகிறது. முதலில் செண்பகவல்லியை வணங்கிவிட்டு பிறகு பூவன நாதரை வணங்குவது கோவில்பட்டியில் வழக்கம். 7 அடி உயரத்தில் கர்ப்பக்கிரஹத்தில் காட்சி தரும் இவளைத் தரிசித்தால், மெய்சிலிக்கும். தீராப்பிணி தீர்த்து சகல செல்வங்களுக்கும் தரும் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகான பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல்கள், மஞ்சள், குங்குமப்பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

    பெரம்பூர் காமாட்சியம்மன்

    சென்னை, மாதவரம், நெடுஞ்சாலை பெரம்பூர் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில், சிந்தாமணி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காட்சி அளிக்கும் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு உத்ஸவம் நடக்கிறது. அன்றைய தினம், மகப்பேறு வேண்டும் பெண்களின் மடியில் முளைப்பயிறு கட்டிவிடும் பிரார்த்தனையும் நடக்கிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காஞ்சி ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள்

    காசியிலிருந்து காஞ்சிக்கு, சக்தி வந்து இறங்கி அன்னபூரணியாக அன்னதானம், செய்த ஆதிபீடம் இதுவாகும். அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும். இந்த கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் 100 அடி தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்தப் பழமையான கோயிலில், இறைவனை அடைய வேண்டி தவம் இயற்றிய சக்தி, இறைவனோடு கலந்ததைத் தெரிவிக்கும் பொருட்டு லிங்க மேனியில் சக்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்திலும் மாலை நேரத்திலும் வழிபடுவர்களுக்கு வேண்டியது கிடைக்கு மாம்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வருமாம். இழந்த பொருள் கிடைக்குமாம். ஆதியில் காமாட்சி அமர்ந்த இடம் ஆதிபீடம் என்ற வழக்கில், ஆதிபீடா பரமேஸ்வரி என் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.ற பெயர் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
    • தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது.

    நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலங்களிலிருந்து, இன்றைய காலம் வரை தீபமேற்றி வழிபாடு செய்யும் பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடைபிடித்து வருகின்றார்கள். தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது. எல்லா தீப வழிபாட்டிற்கும் முதன்மையாக இருப்பது அந்த அக்னிதேவன் தான். நம்மிடம் இருக்கும் கஷ்டங்களை விளக்கக் கூடிய சக்தி இந்த விளக்கிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீபவழிபாட்டில் முதன்மையாக சொல்லப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த அகண்ட தீப வழிபாடு. இந்த தீபத்தினை நந்தா தீபம், ஜோதி தீபம், அணையா தீபம் என்று கூட சொல்லுவார்கள்.

    நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. நந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.

    சாதாரணமாக ஒரு வீட்டில் அணையா தீபம் எரிந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கெட்ட சக்தி நெருங்குவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. நல்ல தேவதைகள் வீடு தேடி வர, இந்த அணையா தீபம் துணை நிற்கும். சரி இந்த அகண்ட தீபத்தினை நம்முடைய வீட்டில் எப்படி ஏற்றுவது என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோமா?

    அகண்ட தீபம், ஜோதி தீபம், நந்தா தீபம் என்று கேட்டாலே கொஞ்சம் பெரிய அளவில் விளக்குகள் உங்களுக்கு கடைகளில் கிடைக்கும். வீட்டில் அணையா தீபம் ஏற்றிவைக்க வேண்டும் என்றால், அதில் திரி நடுவில் எரிய வேண்டும். அதாவது ஜோதி வடிவத்தில்! சாதாரண விளக்கில் திரியை பக்கவாட்டில் தான் போடுவோம். ஆனால் அணையா தீபத்திற்கு திரி நடுவே எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

    இந்த தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். அணையா தீபம் என்பதால் எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவைப்படும். அதேசமயம் பஞ்சு திரி, நூல் திரி இப்படிப்பட்ட திரிகளை இந்த தீபத்திற்கு பயன்படுத்த கூடாது. கடைகளில் விற்கும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும் காட்டன் துணியை வாங்கி, வெட்டி திரி போல் திரித்து, அதை இந்த அகண்ட தீபத்தில் போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

    24 மணி நேரமும் அணையாமல் தீபம் எரிய வேண்டும் என்பதால் இந்த விளக்கை கொஞ்சம் பெரிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் நீங்கள் ஏற்று போகும் அந்த நாள் நல்ல முகூர்த்த நாளாக (வளர்பிறை) இருக்க வேண்டும். முதலில் இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்க வேண்டும்.

    ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்த்து வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லிவிடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு எவ்வளவு தான் கெட்ட நேரம் இருந்தாலும், அதையும் தாண்டி உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற கூடிய வேலைகளை இந்த அகண்ட தீபம் பார்த்துக் கொள்ளும்.

    குழந்தை வரம் வேண்டுமா? பிறவி முக்தி அடைய வேண்டுமா? திருமணம் கைகூட வேண்டுமா? மனை வாங்க வேண்டுமா? பெருக வேண்டுமா? எண்ணிய காரியம் கைக்கூட வேண்டுமா? இந்த தீபத்தை தொடர்ந்த ஏற்று. உன் கோரிக்கை நிறைவேறும் வரை கடவுளின் காலை விடாதே. இதுவே இந்த தீபத்தின் சிறப்பு

    இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அதை அணையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிறிய தீயில் இந்த தீபத்தை ஒளிர வைத்தால் போதும். எண்ணெய் குறைவாக எடுத்துக் கொள்ளும். எதிர்பாராத சூழ்நிலையில் இந்த தீபம் அணைந்து விட்டால் அது தவறு கிடையாது. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அந்த தீபத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை நீக்கிவிட்டு, மீண்டும் தீபத்தை பொருத்திவிட வேண்டும்.

    திரையில் இருந்து எடுத்த அந்த கருப்பு நிற சாம்பலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு தினம்தோறும் நெற்றியில் இட்டுக்கொண்டால் துஷ்ட சக்தி அண்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றளவும் நிறைய கோவில்கள், பெரிய பெரிய சமாதிகள், பல வீடுகளில் இந்த அகண்ட தீபம் எரிந்து கொண்டுதான் வருகின்றது. இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

    அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும்.

    எந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள்.

    ஜல தீபத்தின் முக்கியத்துவம் முன்னோர்களுக்கு தெரிந்ததால்தான் அந்த காலத்தில் நதிகளில் மற்றும் குளங்களில் முக்கியமான நாட்கள் அன்று ஜலதீபத்தை ஏற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இன்னும் சில கோவில்கள் இந்த பழக்கம் மறக்காமல் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த தீபத்தை ஏற்றி கஷ்டத்தில் இருந்தவர்கள் பலபேர் சுபிட்சம் அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்

    • வார தினங்களில் ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கு துலக்க வேண்டும்.
    • மற்ற நாட்களாகிய செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்க கூடாது.

    விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். ஆகையால் எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும்.

    எனவே திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். மேலும் நேரம் ஆக ஆக விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப்பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே சிறந்த முறை ஆகும்.

    தீபத்தைக் குளிரவைக்கும் முறை

    பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனர். இது தவறு! தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

    மேலும் விளக்கை அணை எனக்கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக்கூடாது. பெண்களே செய்ய வேண்டும்.

    தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

    விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்

    வார தினங்களில் ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கு துலக்க வேண்டும். மற்ற நாட்களாகிய செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்க கூடாது.

    ஞாயிறு விளக்கு துலக்க கண் சம்பந்தமான நோய்கள் தீரும், திங்கள் விளக்கு துலக்க அலைபாயும் மனம் அடங்கி அமைதிபெறும், வியாழன் விளக்கு துலக்க மனக்கவலை தீரும், குரு அருள் கிட்டும். சனிக்கிழமை விளக்கு துலக்க, வாகன விபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.

    விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

    * விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.

    * விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.

    * விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.

    * விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.

    * விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.

    * விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

    * விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

    * விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.

    * வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது.

    திருவிளக்குப் பூஜையில் கவனிக்க வேண்டியவை

    இரு விளக்குகளை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்துத்தான் வணங்க வேண்டும்.

    காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி தினமும் வணங்கினால் செல்வம் பெருகும்.

    காலையிலும், மாலையிலும், குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் செல்வம் வற்றாது பெருகுவதுடன், நம் பாவமும் விலகும்.

    விளக்கை கிழக்கு திசை நோக்கி வைப்பதுதான் சிறப்பு.

    எண்ணெய்யில்லாமல் தானாக விளக்கை அணையவிடக் கூடாது. பூஜை முடிந்து பத்து நிமிடம் கழித்து விளக்கைக் குளிர வைக்க வேண்டும்.

    அன்றாடம் மாலையில் ஒரு முக விளக்காகிய காமாட்சியம்மன் திருவிளக்கின் திருவடியில் தாமரை மலரை வைத்து பாராயணம் செய்வது சிறப்பு ஆகும்.

    திருவிளக்குப் பூஜையில், விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வடுகிலும் வைத்து வர, அவர்களுடைய கணவர்கள் நலமுடன் வாழ்வார்கள்.

    திருவிளக்கு பூஜை செய்யும் குத்து விளக்கை தலை வாழை இலை மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாக வையகத்தில் தழைத்தோங்கி, வாழ்வு பசுமையானதாக அமையும்.

    நாள் தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வர, 108 நாட்களில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நடக்கும்.

    தினசரி வீட்டில் திருவிளக்கு ஏற்றும் போது, திருவிளக்கு அகவல் படித்துவர நன்மை உண்டாகும்.

    திருவிளக்குப் பூஜையின் போது இடது கையால் எந்த மங்கல காரியங்களையும் செய்யக் கூடாது.

    தீபம் ஏற்றும் போது ஒரே முயற்சியில் எரிவது நல்லது.

    தீபச்சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது, மெல்லத்தணிந்து அடங்கக் கூடாது.

    மிகச் சிறியதாக அல்லது மிகப் பெரியதாகச் சுடர் எரியாமல் திருவிளக்கின் அமைப்பிற்கும், அளவிற்கும் தகுந்தபடி எரிய வேண்டும்.

    சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அவற்றிற்குக் காரணமான திரியையோ அல்லது எண்ணெயையோ உடனே மாற்றிவிட வேண்டும்.

    பொதுவாக காமாட்சியம்மன் விளக்கின் திருச்சுடரைக் கொண்டு மற்றொரு விளக்கின் சுடரை ஏற்றமாட்டார்கள்.

    பல அகல் விளக்குகளை அல்லது திருவிளக்குகளை ஏற்ற வேண்டியிருந்தால் முதலில் ஒரு விளக்கின் சுடரை ஏற்றி, அதன் மூலம் அனைத்து விளக்கின் சுடர்களையும் ஏற்றலாம்.

    திருவிளக்கு தொடர்ந்து எரிய வேண்டிய சூழ்நிலையில், விளக்கின் குழியில் எண்ணெயைத் தொடர்ந்து வார்த்துக் கொண்டிருப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

    விளக்கில் குளம் போல் எண்ணெயை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.

    திருவிளக்கு பூஜையில் குத்து விளக்கிற்கு சிகப்பு வண்ண மலர்களைச் சாற்றலாம், லட்சுமி பூஜைக்கு செவ்வந்தி மலர் சாற்றலாம்.

    விளக்கு பூஜையில் விளக்கு ஏற்றியவுடனே சந்தனம், குங்குமம் வைத்து விட வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு மெதுவாக மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு பொட்டு வைக்கக் கூடாது.

    திருச்சுடர் எதிர்பாராத காரணத்தால் தானே அணைவதும், எண்ணெய் இல்லாமல் அணைவதும் குற்றம் ஏற்படுத்தும்,

    பூஜை நடைபெறும் போதும், மங்கலக் காரியங்கள் நடக்கின்ற போதும் லட்சுமிகரமாக எரிகின்ற திரிச்சுடரானது சட்டென்று அணைவது அமங்கலம் ஆகும்.

    திருச்சுடரில் மகாலட்சுமி நிறைந்து, நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது பெரிய குற்றமாகும்.

    அன்புக் காணிக்கையாக ஒரு அரிசியை தீபத்தட்டில் வைத்து, எப்பொழுதும் எம் உள்ளளி பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து திரியை மெதுவாக உள்ளே இழுத்து ஒளியை நெய்யில் மறையச் செய்ய வேண்டும், அல்லது பூக்களால் அணைக்கலாம். அல்லது பால் துளிகளைக் தெளித்தும் திருச்சுடரைக் குளிர வைப்பது (அணைப்பது) மிகவும் பொருத்தமானது ஆகும்.

    அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

    விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும்.

    தீபம் லட்சுமி வாசம் செய்யும் இடம். மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க, எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

    தீபம் வைத்த உடன் முகம் கழுவுதல், தயிர் கடைதல், காய்கறி நறுக்குதல், அரிசி களைதல் போன்றவைகளை செய்யக்கூடாது.

    • விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே! ஜோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே!
    • அன்னையே அருந்துணையே! அருகிருந்து காருமம்மா! வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா!

    வீட்டில் தீபம் ஏற்றி வணங்கும் பெண்கள் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு கீழ்க்காணும் பாடல் வரிகளை, படிக்கவேண்டும். மகாலட்சுமியின் அருள் பூரணமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒவ்வொரு வரிக்கும் ஒரு மலராகத் தூவி வழிபடலாம்.

    அகவல்

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே!

    ஜோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே!

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே!

    காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே!

    பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டு

    குளம்போல எண்ணெய்விட்டுக் கோலமுடன் ஏற்றிவைத்தேன்;

    ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளங்க

    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான்விளங்க

    மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்

    தரணியிலே ஜோதியுள்ள தாயாரைக் கண்டுவந்தேன்

    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!

    சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!

    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா!

    பட்டி நிறையப் பால் பசுவைத் தாருமம்மா!

    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!

    புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா!

    அல்லும்பகலுமென்றன் அண்டையிலே நில்லுமம்மா!

    சேவித் தொழுந்திருந்தேன்; தேவி வடிவம்கண்டேன்

    வச்சிரக் கிரீடங்கண்டேன்; வைடூர்ய மேனி கண்டேன்

    முத்துக் கொண்டை கண்டேன்; முழுப்பச்சை மாலை கண்டேன்

    சவுரி முடிகண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்

    பின்னழகு கண்டேன்; பிறைபோல நெற்றி கண்டேன்

    சாந்துடன் நெற்றி கண்டேன்; தாயார் வடிவங்கண்டேன்

    குறுக்கிடும் நெற்றிகண்டேன்; கோவைக்கனி வாயும் கண்டேன்

    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுங் கண்டேன்

    மார்பில் பதக்கம் மின்ன மாலையனசயக் கண்டேன்

    கைவளையல் கலகலஎனக் கணையாழி மின்னக் கண்டேன்

    தங்க ஒட்டியாணம் தகதகஎன ஜொலிக்கக் கண்டேன்

    காலில் சிலம்புகண்டேன்; காலணி பீலி கண்டேன்

    மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்

    அன்னையே அருந்துணையே! அருகிருந்து காருமம்மா!

    வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா!

    தாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்

    மாதாவேயுன்றன் மலரடியில் நான் பணிந்தேன்.

    இந்த அகவலைப் பாடி முடித்த பின்னர் பதினாறு தடவை கும்பிட வேண்டும். அதன்பின்னர் தீப லட்சுமியிடமிருந்து வேண்டிய வரங்களைத் தந்தருளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

    • தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் முக்கியத்துவம் வாய்ந்தது.
    • எந்த எண்ணெய் தீபம் ஏற்ற உகந்தது என்று அறிந்துகொள்ளலாம்.

    கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.

    இறைவனுக்கு உகந்த எண்ணெய் விபரம் வருமாறு:-

    மகாலட்சுமிக்கு - நெய்

    திருமால், சர்வ தேவதைகளுக்கு - நல்லெண்ணெய்

    விநாயகருக்கு - தேங்காய் எண்ணெய்

    சிவபெருமானுக்கு - இலுப்பை எண்ணெய்

    அம்பாளுக்கு -நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்

    பசு நெய்:- லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.

    நல்லெண்ணெய்:- பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.

    தேங்காய் எண்ணெய்:- லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.

    இலுப்பை எண்ணெய்:- எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.

    விளக்கெண்ணெய்:- தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.

    வேப்ப எண்ணெய்:- குலதெய்வ அருள் கிடைக்கும்.

    மூவகைஎண்ணெய்- நெய், வேப்பஎண்ணை, இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

    • எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது.
    • ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன

    விளக்கு  தத்துவம்

    அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும்.

    இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம்.

    உடலும் தீபமும்:

    விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி! கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம்.

    தொடர்பு ஏற்படுத்தும் தீபம்;

    ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன! விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மா வாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் திகழ்கின்றன! விளக்கின் சுடரை ஏற்றும் மற்றொரு சுடர் இறையருள் ஒளியாக உள்ளது.

    எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவை. அதைப் போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது. இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

    குத்துவிளக்கில் பெண்மை:

    குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன. அவை, அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியவனாகும்.

    விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்:

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்:

    பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச் சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்துச் சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்துச் சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்துச் சிறப்புடையது. அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம். மண் அகல் விளக்குகளை மாடத்தில் வைக்கவும். இவை அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன. மாக்கல் விளக்கை தெய்வ மாடத்தில் ஏற்றலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடு களில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக் கூடாது.

    • விளக்கு ஏற்ற சில விதிமுறைகள் உள்ளன.
    • ஒவ்வொரு எண்ணெய்க்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.

    தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

    நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்

    நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதி கரிக்கும்

    தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்

    இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி

    விளக்கெண்ணெய் - புகழ் தரும்

    ஐந்து கூட்டு எண்ணெய் - அம்மன் அருள்

    விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.

    ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்

    இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்

    மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்

    நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்

    ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண் டாகும்.

    கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

    மேற்கு - கடன், தோஷம் நீங்கும்

    வடக்கு - திருமணத்தடை அகலும்

    தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

    • கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
    • இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.

    திருச்செங்கோடு:

    கொங்கு 7 சிவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக போற்றப்படும் திருச்செங்கோடு மலை மீது அர்த்த நாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலிலிருந்து கிழக்கு புறமாக மலை உச்சிக்கு கரடு முரடான மலைப்பாதை இருக்கிறது. மலை உச்சியில் பங்கஜவல்லி சமேத பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இதை உச்சிப்பிள்ளையார் கோவில் என்று கூறுவர்.

    இந்த உச்சி பிள்ளையார் கோவில் எதிரே உள்ள செங்குத்தான பாதையில் கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது . 600 லிட்டர் நெய் பத்து மூட்டை பருத்தி நூல் கற்பூரம் பயன்படுத்தி மயில் முருகேஷ் சுவாமிகள் திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் அறிவாதீனம் சுவாமிகள் சிவகைலாயம் சதானந்த சுவாமிகள் ஆகியோர் மகா தீபம் ஏற்றி வைத்தனர்.

    நேற்று மூன்றாவது நாளாக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் தீப விழா குழுவினர் மலை உச்சிக்கு சென்று திரிகளை மாற்றி விட்டு மகா தீபம் ஏற்றி வைத்தனர். தலைவர் குமரவேலு பொருளாளர் மனோகரன் துணை செயலாளர் பார்த்திபன் துணை தலைவர் வஜ்ரவேல் செயற்குழு உறுப்பினர்கள் மேஷன் மதன்குமார் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.

    தொடர்ந்து 5 நாட்களுக்கு இந்த தீபம் எரியும். மார்கழி திருவாதிரை தினத்தில் தீபக் கொப்பறையில் எஞ்சி உள்ள நெய் குழம்பு மை சிவகாமி அம்பாள் நடராஜர் சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறினார் .

    • தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும்.
    • திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை மாதம் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக சூரிய உதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

    மாலையில் தீபம் ஏற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மாலையில் வீடு முழுக்க விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகளுக்கு குறையாமல் ஏற்றுவதால் நிறைவான பலன்களைப் பெறலாம்.

    • வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.
    • திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    ஐந்து முகக் குத்து விளக்கைப் பளிச்சென்று துலக்கி ஈரம் போகத் துடைத்து, ஐந்து முகங்களிலும் குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும். பிறகு பீடத்திற்கும் குங்குமம், மஞ்சள், சந்தனப் பொட்டு வைக்க வேண்டும். பிறகு நல்ல வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.

    குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் பூச்சூட்டும் போது ஈன்ற தாயை, பிறந்த வீட்டை, அவர்கள் நலனை வேண்டி பூச்சூட வேண்டும்.

    நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது, கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டை நினைத்து, இல்லறம் நல்லறமாய் இருக்க பிரார்த்தனை செய்து பூச்சூட வேண்டும்.

    உச்சிப் பகுதியில் பூச்சூட்டும் போது, "தீப லட்சுமியே! உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்" என்று மனமுருக வேண்டி பூச்சூட வேண்டும்.

    இவ்வாறு திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    விளக்கிற்கு ஏற்ற ஆசனம்

    விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.

    விளக்கிற்கு பொட்டு இடுதல்!

    விளக்கிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் கீழ் இரண்டும், அதற்கு அடியில் இரண்டுமாக, ஆக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும் அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தீ என்கிற சூரியன், சந்திரன், அக்கினி என்று கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுகள் கைகள் எனவும், கீழே இடும் பொட்டு இரு திருவடிகளாகவும் கருதி, இந்த எட்டு இடங்களிலும் பெட்டிட்டு வழிபட வேண்டும்.

    ×