என் மலர்

    நீங்கள் தேடியது "Deepam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார்.
    • வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு அருகில் வீதியில் உயரமான தீபம் ஏற்ற வேண்டும். அல்லது வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துக்கு ஆகாச தீபம் என்று பெயர்.

    இதன் ஒளியானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். இன்று (புதன்கிழமை) மாலை சூரியன் மறைந்த பின் தீபம் ஏற்றி சுவாமி சன்னதியில் சங்கல்பம் செய்து கொண்டு மண்அகல் விளக்கில் நல்லெண்ணை விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள கோவிலோ தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தீபம் வைத்து வணங்க வேண்டும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் ஆகாச தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி 3 நாட்களில் (நவம்பர் 21, 22, 23) ஏற்றலாம். ஒரு நாளாவது ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம் சென்று தீபம் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார். இதனால் மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து தீபம் ஏற்றுபவர்களின் அனைத்து துன்பங்களையும், கடனையும் விலக செய்வார் என்பது நம்பிக்கையாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் உடனாகிய அபிராமி கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

    ஏகதின லட்சார்ச்சனை 108 கலசங்களுடன் அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கோவிலில் 108 கலசங்கள் வைத்து ஏகாதின லட்சார்ச்சனை அபிராமி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. அபிராமிக்கு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டியும், மக்கள் கொடுர நோய்களிலிருந்து விடுதலை பெறவேண்டி மகேஷ் குருக்கள், சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் சிறப்பு யாகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்கவும் காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இன்றி பரமத்தி வேலூர் காசிவிஸ்வநாதர் ஆலய காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்கவும் காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இன்றி பரமத்தி வேலூர் காசிவிஸ்வநாதர் ஆலய காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நாடும்,நாட்டு மக்களும் நலம் பெறவும்,விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பொழியவும் வேண்டி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து மோட்ச தீபம் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி புதிய பாலத்தில் இருந்து மோட்ச தீபத்தை பார்த்து ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என பயபக்தியுடன் பொதுமக்கள் வழிபட்டனர்.

    மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் ஏராளமான போலீசார் காவிரி கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.
    • இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுபவது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.

    இதனையொட்டி மகுடேசுவரர், வடிவுடையநாயகி அம்பாள், வீர நாராரயணப் பெருமாள், ஶ்ரீ தேவி-பூதேவி, உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து வீதி உலா வர முன்பாக சிவன் தீபத்தை கோவில் முதன்மை சிவாச்சாரியார் பாபுசுவாமிகள், பிரபு சுவாமிகள் எடுத்து வந்தனர்.

    பெருமாள் தீபத்தை கோவில் முதன்மை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் முன்னிலையில் ராஜா சுவாமிகள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்தார். ஆற்றங்கரை ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    காவிரி ஆற்றங்கரைப் பகுதிக்கு பொது மக்கள், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.

    புதிய படித்துறை, பழைய படித்துறை இரண்டுக்கும் இடையில் உள்ள கொம்பனை என்ற இடத்தில் முதலாவதாக சிவன் தீபத்தை பாபு சிவாச்சாரியார் பக்தர்களின் கரகோசத்துக்கிடையே ஆற்றில் விட்டார். அதனை தொடர்ந்து ராஜா பட்டாச்சாரியார் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோசத்துக் கிடையே பெருமாள் தீபத்தை ஆற்றில் விட்டார். தீபம் ஆற்றில் மிதந்து செல்வதை பக்தர்களும், பொதுமக்களும் தொலைவில் நின்று வணங்கி வழிபட்டனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடக்கு திசை நோக்கி ஏற்றினால் தாமத திருமணம் நீங்கும்.
    • தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்லப்படுகிறது.

    * வீடு தூய்மையாக இருந்தால் எல்லா வளங்களும் நாம் அடையாளம். வீட்டை தூய்மையாகவும் நல்ல அதிர்வலைகளோடு இருப்பதற்கு மிக எளிமையான வழி விளக்கு ஏற்றுவது. விளக்கின் ஒளி வீட்டிற்குள் இருக்கும் தீய சக்திகளை அழிக்கும். விளக்கு எந்த எண்ணெயில் ஏற்ற வேண்டும். எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்; எத்தனை முகம் கொண்ட விளக்கு ஏற்ற வேண்டும்.விளக்கு ஏற்றும் முறை பற்றி பார்ப்போம்.

    * விளக்கேற்றும் நல்லெண்ணையோடு பச்சை கற்பூரத்தை பொடியாக்கி சேர்த்து ஏற்றினால் மிக நல்ல பலன்களை கொடுக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்; மஹாலட்சுமி உங்கள் வீட்டில் தங்குவாள். வீட்டில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும்; தீய மனிதர்கள் வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்; செல்வ வளம் பெருகும். மனதில் அமைதி, மகிழ்ச்சி உண்டாக்கும்; குடும்ப உறவுகள் மேம்படும்.

    * விளக்கு ஏற்ற மிக சிறந்தது நெய், நல்லெண்ணெய், ஐந்து எண்ணய் (நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய்) கூட்டு.

    * கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் இன்பம் பொங்கும்; குடும்ப உறவுகள் மேம்படும். வடக்கு திசை நோக்கி ஏற்றினால் தாமத திருமணம் நீங்கும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் விரைவாக கடன் அடைபடும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்லப்படுகிறது.

    * ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் வாழ்க்கைக்கு தேவையான எல்லா வளங்களும் கிடைக்கும். நான்கு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும்; மூன்று முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகும்; இரண்டு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் குடும்ப உறவுகள் மேம்படும்; ஒரு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் விரும்பிய காரியம் வெற்றி அடையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
    • பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.

    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

    1. தேங்காய் - குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி - நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

    3. கொடை மிளகாய் - புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

    4. கொய்யா பழம்/ கத்திரிக்காய் - நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

    5. பீட்ருட் - ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    6. பாகற்காய் - சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

    7. வில்வபழம்/ மாதுளம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

    8. ஆரஞ்சு பழம் - தொழில் விருத்தி ஏற்படும்.

    9. அன்னாசிப்பழம் - சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    10. பப்பாளி பழம் - திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    11. இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

    12. வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கை அமையும்.

    13. மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும்.
    • மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும்.

    பிரம்ம முகூர்த்தம் என்பது, அதிகாலை நேரமான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலகட்டமாகும். இந்த நேரத்தில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது மிகுந்த பலனைக் கொடுக்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.

    பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் பூஜை மற்றும் ஹோமங்களுக்கு நல்ல நாள் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது இறைவனுக்கான நேரம் என்பதால் அந்த நேரத்திற்கு தீட்டு எதுவும் கிடையாது. பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டில் தீபம் ஏற்றி தெய்வங்களை வழிபாடு செய்தால், வீட்டில் சர்வ மங்களமும் கிடைக்கப்பெறும்.

    தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து திருநீறு இட்டு இறைவனை வேண்டி வாங்கி வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் கூறுவதுண்டு.

    பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிடுவது சிறந்தது. அடுத்து பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சிவ மந்திரம் சொல்லலாம். அப்படி சொல்லச் சொல்ல, உள்ளுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கார்த்திகை தீபத்திருநாளான இன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.
    கார்த்திகை தீபத்திருநாளான இன்று சிவ வழிபாடு செய்வோம். இன்று இல்லத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அப்போது விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

    தீபம் ஜோதி பரப்பிரம்மம்
    தீபம் சர்வ தமோபஹம்
    தீபனே சாத்யத சர்வம்
    சந்த்யா தீப நமோஸ்துதே!

    இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது விசேஷம். இயலாதவர்கள் 11 முறை அல்லது 9 முறை அல்லது மூன்று முறை எனச் சொல்லலாம். கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். சிவபார்வதியை தம்பதி சமேதராக வணங்குங்கள். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வீடு மனை யோகம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
    திருவிளக்கு பூஜை நடைபெறும் பொழுது, பஞ்சமுக விளக்கேற்றி வைத்து, அந்த விளக்கிற்கே தீபம் காட்டச் சொல்லி வழிபாடு செய்வார்கள். ஜோதிக்கே ஜோதி வழிபாடு என்பதை நாம் உணர முடியும்.

    இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு ஆகும். இருள்மயமான சூழ்நிலையை மாற்றி ஒளிமயமான வாழ்விற்கு உத்திரவாதம் தருவது, இந்த ஜோதி வழிபாடுதான். அதனால் தான் வள்ளலார் என்று அனைவராலும் அறியப்படும் ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார்.

    ஆலயங்களில் கூட சிவனுக்குப் பின்னால் பிம்ம விளக்கு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.
    உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதேபோல் நமது உடலும் பஞ்ச சக்தியான எலும்பு, தோல், முடி, நரம்பு, தசையால் இயங்கி வருகிறது. இதேபோல் இந்த உலகம் பஞ்ச உலோகம், பஞ்சபூத சக்தி, பஞ்ச சக்தி, பஞ்சகிரியா சக்தி, பஞ்சமுகம் ஆகிய பஞ்ச சக்தியாலும், ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய ஐந்து சக்திகளாகவும் இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.

    இதையொட்டி கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிக்கும் முதலாவது குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு துவங்குவது காலம் காலமாக நடந்து வரும் வழக்கம். குத்துவிளக்கில் கிழக்கு முகமாக விளக்கேற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக விளக்கேற்றினால் கிரக தோஷம், பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக விளக்கேற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும், திரண்ட செல்வம் உண்டு.

    தெற்கு முகமாக விளக்கேற்றினால் அபசகுனம், பெரும் பாவம் உண்டாகும். குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலனாக இருக்கும், இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமையுடன் இருக்கும், மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தியாகும், நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும் என்பது ஐதீகமாகும். இதேபோல் தாமரை தண்டில் திரியால் தீபமேற்றினால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத்தண்டு நூல் திரியால் தீபமேற்றினால் குலதெய்வக் குற்றம், சாபம் நீங்கும். புது மஞ்சள் சேலை துண்டு திரியால் தீபமேற்றினால் தாம்பத்ய தகராறு நீங்கும்.

    புதுவெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு திரியால் தீபமேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். நெய்விளக்கு ஏற்றினால் லட்சுமி வாசம் செய்வாள். இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தியுண்டாகும். விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பழந்தமிழர் வழக்கம். விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.
    பூஜை அறை என்பது ஒரு புனிதமான அறை. தெய்வப் படங்களை அதில் வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டின் பூஜை அறையில் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பழந்தமிழர் வழக்கம். அங்ஙனம் விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

    குறிப்பாக விளக்கேற்றிய பிறகு அடுத்தவர்களுக்கு பால், மோர், உப்பு, அரிசி, சுண்ணாம்பு போன்ற வெள்ளைப் பொருட்கள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. விளக்கேற்றியதும் வீட்டைக் கூட்டக் கூடாது. துணி துவைக்கக் கூடாது.