search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepam"

    • அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.
    • கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.

    "பஞ்ச" என்றால் ஐந்து என்று பொருள்.

    பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி

    கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி

    நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

    இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது "ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

    இப்படி செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

    • அண்ணாமலையாரை தரிசித்தால் உயிர்களைப் பற்றியுள்ள கொடிய வினைகள் அனைத்தும் நீங்கும்.
    • திருக்கார்த்திகையன்று, ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவன் கூட முக்தி அடைகிறான்.

    1. அண்ணாமலையாரை தரிசித்தால் உயிர்களைப் பற்றியுள்ள கொடிய வினைகள் அனைத்தும் நீங்கும்.

    2. அண்ணாமலையாரை நேரில் வந்து தரிசித்தாலும் தூரத்தில் இருப்போர் மனத்தால் நினைத்தாலும் போதும் வேதாந்தத்தின் உண்மைப் பொருளான ஆத்ம ஞானம் கிடைக்கும்.

    3. திருவண்ணாமலையில் வசிப்பவர்களுக்கு குருவினுடைய தீட்சை முதலிய எதுவும் இல்லாமலேயே இறைவனோடு இரண்டறக் கலக்கும் முக்தி கிடைக்கும்.

    4. திருவண்ணாமலை தீபத்தை ஒருதரம் பக்தியுடன் பார்த்தவன் சந்ததி தழைக்கும். அவனுக்கும் மறுபிறப்பும் இல்லை.

    5. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுதை கண்டவர்களின் மானிடத் தன்மை நீங்கி ருத்ர தன்மை உண்டாகிறது. அவன் பாக்கியவான் ஆகிறான்.

    6. கார்த்திகை தீபத்தன்று காமம் முதலான குணங்களை விட்டு பெரும் முயற்சி செய்தாவது தீபத்தை தரிசிக்க வேண்டும்.

    7. திருக்கார்த்திகை தினத்தன்று ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவன் கூட முக்தி அடைகிறான்.

    8. தீப தரிசனத்தால் கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.

    9. கர்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான்.

    அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தெய்வ பலனும் கிடைக்கும்.

    10. திருவண்ணாமலையில் கிரி வலம் வருவது பேறுகள் எல்லாவற்றையும் தருவதாகும்.

    சென்ற ஜென்மங்களில் செய்த பாவங்கள் கிரிவலம் செய்கிற ஒவ்வொரு அடியிலும் நசிந்து விடும்.

    • பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.
    • குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    பழங்காலத்து வீடுகளில் விளக்கு வைப்பதற்கு என்றே தனி மாடங்கள் அமைக்கப்பட்டன.

    வாசல்படியின் இருபுறங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதற்கு என மாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

    கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும்.

    பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.

    குத்து விளக்கு

    குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    இதன் அடிப்பாகம் பிரம்மா, தண்டு பாகம் விஷ்ணுவையும், தகழி சிவனையும்,

    திருவிளக்கின் ஐந்து முகம் பஞ்ச பூதங்களையும், எண்ண நாத தத்துவத்தையும்,

    குடம் லட்சுமியையும், ஒளி சரஸ்வதியையும், ஒளியால் பிறக்கின்ற சூடு சக்தியையும் குறிக்கும்.

    • தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை “தீபலட்சுமி”யாக பரிணமிக்கிறாள்

    தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை "தீபலட்சுமி"யாக பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன.

    அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம் வருமாறு:

    ஆதிலட்சுமி,

    சவுந்தரிய லட்சுமி,

    சவுபாக்கிய லட்சுமி,

    கீர்த்தி லட்சுமி,

    வீர லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    சந்தான லட்சுமி,

    மேதா லட்சுமி,

    வித்யா லட்சுமி,

    துஷ்டி லட்சுமி,

    புஷ்டி லட்சுமி,

    ஞான லட்சுமி,

    சக்தி லட்சுமி,

    ராஜ்யலட்சுமி,

    தான்யலட்சுமி,

    ஆரோக்கிய லட்சுமி

    ஆகியோராவர்.

    • விடியற்காலை இந்த நேரத்திற்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
    • குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்

    குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது.

    பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது.

    எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக்கூடாது.

    அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

    • விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.
    • எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை நெய் விட்டு ஏற்றுவதே நல்லது.

    விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.

    தீபத்திற்கு பஞ்சு திரியிடுவது சிறப்பானது.

    தாமரைத் தண்டுத்திரி, வாழைத்தண்டு நூல், வெள்ளெருக்கு பட்டை, புது மஞ்சள், துணி,

    புதுவெள்ளை வஸ்திரம் ஆகியவையும் உபயோகிக்கலாம்.

    காலையில் அதிகாலை நேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல், ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.

    • பலவாகக் காணும் உலகமானது ஐம்பூதங்களில் ஒடுங்கி, அதுவும் முக்குணங்களில் ஒடுங்கி, ஒன்றுபட்டு
    • முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து,கற்பூரம் போல் பரம்பொருளில் மறைகிறது.

    கோவில்களில் தீப ஆராதனையின்போது வரிசையாக முதலில் அலங்கார தீபமும், அடுத்து ஐந்து முகதீபம்,

    மூன்று முக தீபம், ஏகமுக தீபம், கற்பூர தீபம் என அடுத்தடுத்துக் காட்டுவார்கள்,

    பலவாகக் காணும் உலகமானது ஐம்பூதங்களில் ஒடுங்கி, அதுவும் முக்குணங்களில் ஒடுங்கி, ஒன்றுபட்டு

    முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து,

    கற்பூரம் போல் நிர்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பதே மேற்கண்ட தீப ஆராதனைகளின் தத்துவ விளக்கம் ஆகும்.

    • தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.
    • குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும்.

    தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

    குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2வது வடக்கே உள்ள திரியையும்,

    3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.

    ஊதி அணைக்க கூடாது.

    மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்  தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி 

    எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.

    குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    குத்துவிளக்கும் குடும்பப்பெண்ணும்

    குத்துவிளக்கின் 5 முகங்களிலும் தீப ஒளி பிரகாசிப்பதுபோல, குலவிளக்காகத் திகழும் குடும்பப் பெண்ணும்

    அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதபுத்தி, சகிப்புத்தன்மை என்னும் 5 குணங்களுடன்

    சிறப்பாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணம் ஆகி மறுவீடு வந்ததும் மணப்பெண்ணை

    முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது நடைமுறையில் வழக்கமாக உள்ளது.

    • 108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும்.
    • சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும்.

    ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும்,

    தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

    இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.

    நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

    108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும்.

    "ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி

    ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா"

    சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும்.

    உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும்,

    எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களை தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

    இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்.

    • 108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
    • 508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.

    1 தீபம்: மன அமைதி

    9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.

    12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.

    18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.

    27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது கிட்டும்.

    48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.

    508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.

    1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.


    • கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும்.
    • பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும்.

    கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம், மறுநாள் கார்த்திகை தீபம்,

    கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும்.

    வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பவுர்ணமி முதல் மூன்று நாட்களாவது

    தங்களுடைய வீட்டில் வரிசையாக தீபம் ஏற்ற வேண்டும்.

    தீபம் எங்கெல்லாம் பிரகாசமாக ஜொலிக்கின்றதோ அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும்.

    வசதிக்கேற்றபடி நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தீபங்கள் ஏற்றலாம்.

    • கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
    • எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதில் எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:

    2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.

    3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

    4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

    5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.

    6 விளக்கு- நோய்கள் குணமாகும்.

    7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.

    8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.

    9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.

    10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.

    11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.

    12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.

    14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.

    15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.

    16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.

    17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.

    27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.

    48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.

    508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.

    1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

    ×