search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dams"

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மலையோர பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 26.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சிற்றாறு-1 அணைக்கு 179 கனஅடி தண்ணீரும், மாம்பழத் துறையாறு அணைக்கு 26 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-18.2, சிற்றாறு 1-16, சிற்றாறு 2-11, நாகர்கோவில்-2.4, பூதப்பாண்டி-1, ஆரல்வாய் மொழி-6, பாலமோர்-10.8, திற்பரப்பு-12.6.திற்பரப்பு அருவியில் விடுமுறை தினமான நேற்று அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இந்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பல குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக பாபநாசம் அணை, குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    ராதாபுரம் கடற்கரை பகுதியிலும், பாளை நகர் பகுதிகளிலும் அதிகளவு மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக நாங்குநேரி பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சிவகிரி பகுதியில் 20 மில்லி மீட்டரும், பாளையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை இல்லாவிட்டாலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. சேர்வலாறு மலைப் பகுதியில் 8 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 285.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வரும் 604 கன அடி தண்ணீர் அப்படியே பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 13 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கும் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது. இன்று காலை அணைகளின் நீர்மட்டம் கடனாநதி-63.10, ராமநதி -47.25, கருப்பாநதி-57.66, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பி யாறு-19.94, கொடு முடியாறு-32.50, அடவிநயினார்-86 அடிகளாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மெயினருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் இதமாக கொட்டுகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாங்குநேரி-31, சிவகிரி-20, கருப்பாநதி-16, பாளையங்கோட்டை-12.4, அடவிநயினார்-11, சேர்வலாறு-8, செங்கோட்டை-6, சேரன்மகாதேவி-4.4, கடனாநதி-4, தென் காசி-3, சங்கரன் கோவில்-3, ஆய்க்குடி-2.8, நெல்லை-2.7, ராமநதி-2, மணிமுத்தாறு-1.2, குண்டாறு-1.
    ரூ.3,466 கோடியில் 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது. #Cabinet #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு ஒரு திட்டத்தை உலக வங்கி உதவியுடன் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.3,466 கோடி செலவாகும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது.



    இதில் ரூ.2,628 கோடியை உலக வங்கி வழங்கும். ரூ.747 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தரும். எஞ்சிய ரூ.91 கோடியை மத்திய நீர் ஆணையம் அளிக்கும்.

    இதில் தமிழக அணைகள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.543 கோடி ஆகும்.

    அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுகிற ஊழியர்கள் சம்பளம் ரூ.2 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும் மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.250-ம் வழங்கப்படும். இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 
    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
    காந்தல்:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கேரளா வெள்ளத்தில் மிதக்கிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதி நீலகிரி மாவட்டத்தை ஒட்டி உள்ளது. அப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி, கூடலூர், குன்னூர் கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஊட்டியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை மின்சாரம் வந்தது. ஆனாலும் அடிக்கடி நிறுத்தப்பட்டது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள். பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மழை கோட்டு அணிந்தபடி சென்றனர். தொடர் மழை, குளிர் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    குன்னூர்- 2, ஜி. பஜார்- 45, கே. பிரிட்ஜ்-25, கேத்தி -5, கோத்தகிரி -5, நடுவட்டம் -62, ஊட்டி - 40.20, கல்லட்டி - 20, கிளர் மோர்கன் - 80, அப்பர் பவானி - 135, எமரால்டு - 57, அவிலாஞ்சி - 158, கெத்தை - 9, கின்னக்கொரை- 1, தேவலா- 68.

    நீலகிரி மாவட்டத்தில் அவிலாஞ்சியில் அதிகபட்சமாக 158 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    தென்மேற்கு பருவமழை எதிரொலியால் ஊட்டியில் அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. இதில் 3 அணைகள் நிரம்பின.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. சுற்றுலா நகரமான ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ஊட்டியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்கின்றது.

    குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, கோரிசோலா அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஊட்டியில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்த நிலையில் காணப்பட்டது.

    ஆனால், இந்த ஆண்டு ஊட்டி நகரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

    ஊட்டியில் பெய்த தென்மேற்கு பருவமழை எதிரொலியால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. கோடப்பமந்து அப்பர் அணை தனது முழு கொள்ளளவான 12 அடி, தொட்டபெட்டா லோயர் அணை 14 அடி, கிளன்ராக் அணை 7 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளன. அந்த 3 அணைகள் நிரம்பி உள்ளன.

    முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்து உள்ளது. மார்லிமந்து அணை தனது 23 அடி முழு கொள்ளளவில் 12.5 அடியை எட்டி உள்ளது. தற்போது அந்த அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. கோடப்பமந்து லோயர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    ஊட்டியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஊட்டி நகராட்சியில் வசித்து வரும் மற்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை. இதுகுறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறும்போது, ஊட்டி நகராட்சியில் தென்மேற்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது. சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். 
    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள குண்டாறு அணையில் 57 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. செங் கோட்டை நகர பகுதியில் 33 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 28 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    பாபநாசம், கொடுமுடியாறு அணை பகுதியிலும் அதிக மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 27 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 42 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதனால் அணைக்கு வினாடிக்கு 272 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இன்றைய நீர்மட்டம் 72.80 அடியாக உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 48.60 அடியாக இருந்தது. இன்று 1 அடி உயர்ந்து 49.50 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 57.50 அடியாக உள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் நேற்று 17.88 அடியாக இருந்தது. ஒரே நாளில் இங்கு 5 அடி உயர்ந்து இன்று 22.38 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 12 அடியாக உள்ளது. இது போல அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையில் கடந்த மார்ச் மாதம் முதல் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருவதால் அணையில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு விட்டது. தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே பழுது பார்க்கும் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 522.43 கன அடி தண்ணீர் செல்கிறது.

    ஆனால் அதிகாரிகள் அந்த தண்ணீர் முழுவதையும் ஆற்றில் திறந்து விட்டு விடுகிறார்கள். இதனால் அணையில் தண்ணீர் இல்லாமல் சகதி தண்ணீர் மட்டும் 19.68 அடிக்கு உள்ளது. உடனடியாக சேர்வலாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவை நிறுத்தி அணையில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    நெல்லை, பாளை உள்பட மாவட்டத்தில் பரவலாக இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு    - 57
    செங்கோட்டை - 33
    கொடுமுடியாறு - 30
    தென்காசி    - 28
    பாபநாசம்     - 27
    அடவிநயினார் - 20
    சேர்வலாறு - 19
    கடனா அணை - 15
    ராமநதி - 15
    கருப்பாநதி - 12
    ராதாபுரம்    - 11
    மணிமுத்தாறு - 9.2
    ஆய்க்குடி - 7.2
    அம்பை - 4.2
    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    ராமநதி அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 1 மில்லி மீட்டர், அம்பையில் 2.2. மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவியில் இன்று சற்று கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இது போல அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணையில் இருந்து அனைத்து தண்ணீரும் பாபநாசம் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 205 கனஅடி தண்ணீர் வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.86 அடியாக உள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 34.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் அங்கு 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையில் குறைந்தபட்ச அளவான 19.68 அடியில் சகதி மட்டும் உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை சற்று உயர்ந்து 72.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது போல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.


    ×