என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cows"
- 14 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.
- மாடுகளின் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்குபதிவு செய்திட அறிவுறுத்தப்படும்.
சீர்காழி:
சீர்காழியில் பிரதான சாலைகள் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மாடுகள் சுற்றி திரிந்து வருகிறது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுதோடு சில நேரங்களில் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துக்களும் ஏற்பட்டது.
சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதுவரை சுமார் 14 மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி குடிநீர் மேல்நிலைநீர் தேக்கதொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.
மாடுகளை மீட்கவரும் கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ .2ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் அடுத்தமுறை மீண்டும் மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்திட அறிவுறு த்தப்படும் என நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தெரிவித்தார்.
- பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.
- தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் திரியும் கால் நடைகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
காய்கனி, உணவுப் பொருட்களை வாங்கி வாகனங்களில் வைத்து விட்டு அடுத்த கடைக்கு செல்வதற்குள் மாடுகள் அத்துமீறி வாகனத்தில் வைத்துள்ள பொட்ட லங்களை கடித்து சாலையில் வீசி மேய்ந்து விடுகிறது.மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நீண்ட தூரம் செல்லும் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து மற்றும் சுற்றுலா வாக னங்களும் சாலையின் குறுக்கே செல்லும் கால்ந டைகளால் விபத்தில் சிக்குகிறது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாட்டு உரிமை யாளர்கள் பொது சாலையில் போக்கு வரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக திரியும் தங்களது கால்நடை களை அக்டோபர் மாதம் 8-ந் தேதிக்குள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் 9-ந் தேதி முதல் சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்கப்பட்டு, மீட்க வரும் கால்நடை உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் 3 தினங்களுக்குள் மீட்கப்படாத கால்நடை களை பொது ஏலம் விடப்படும் என தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
- நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்
காங்கயம்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.
இதன்படி சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து மாட்டு சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் உள்ள 68 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 36 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன், 2 பல் கொண்ட காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
மொத்தம் ரூ.14 லட்சத்திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- தெற்கு மாசி வீதி, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் மாடுகளால் பொதுமக்களை அவதிப்பட்டு வருகின்றனர்.
- மதுரை மாநகராட்சியில் கமிஷனர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை
தமிழகத்தில் நகர் பகுதியில் வளர்க்கப்படும் மாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே நகரில் மாடுகளை வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகளின் மெத்தனத்தால் மாடுகள் சாலையில் சர்வ சாதரணமாக சுற்றி திரிகின்றன.
மேலும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றன. சில இடங்களில் சாலைகளின் நடுவே மாடுகள் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்கின்றன.
மதுரையில் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் ரோடு, தெற்கு மாரட்வீதி, மாசி வீதிகளில் மாடுகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படு கிறது. குறிப்பாக தெற்கு கிருஷ்ணன்கோவில் தெரு, தெற்கு மாசி வீதி 24 மணி நேரமும் மாடுகள் முகாமிட்டு சாலையை ஆக்கிரமிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்வோர்கள் கடும் அவதியடைகின்றனர்.
சில நேரங்களில் மாடுகள் ஆக்ரோசமாக மோதி கொள்வ தால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சமடை கின்றனர். மாட்டின் உரிமை யாளர்கள் தொழுவத்தில் அடைக்காமல் பால் கறந்துவிட்டு வெளியில் விட்டு விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் சென்னையில் மாடு முட்டியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதை யடுத்து மாநகராட்சி கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையா ளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியிலும் கமிஷனர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலையில் 40 சதவீதமாகவும் இருக்கும்.
- தற்போதைய வானிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய், மடிவீக்க நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
உடுமலை:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை விபரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு.அதிகபட்சம் 30 முதல் 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலையில் 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல், 16 கி.மீ., வேகத்தில் இருக்கும்.தூரல் மழை மட்டுமே எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள், மண்ணின் ஈரப்பதம் பொறுத்து, நீர் பாசனம் செய்யலாம். வறட்சியான பகுதிகளில், பயிர்க்கழிவு மூடாக்கு பயன்படுத்தி மண் ஈரப்பதத்தை காப்பாற்றலாம்.வாழை மரங்களுக்கு தகுந்த முட்டுக்கொடுக்க வேண்டும்.
தற்போதைய வானிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய், மடிவீக்க நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.எனவே பால் கறப்பதற்கு முன், பின் மடியை ஒரு சதவீதம் பொட்டாசியம், பெர்மாங்கனேட் கரைசல் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
- மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.
சென்னை:
உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியுடன் அலெர்ட் அறக்கட்டளை இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயிர் காக்கும் தானியங்கி வெளிப்புற 'டிபிபிரி லேட்டர்' கருவியின் செயல்பாட்டை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி அவசியமானது. மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்படும். மக்கள் கூடும் பொது இடங்களில் இக்கருவி அமைக்கப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பு பலகையும் மக்களுக்கு தெரிவிக்கப்படும். சுகாதாரத்தை மக்கள் தேடி செல்ல வேண்டும்.
வேதனையான சம்பவம் சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி ஒருவர் குடல் கிழிந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் மயிலாப்பூர், திருவான்மியூர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., நங்கநல்லூர், பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.
நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் வீட்டுக்குள்ளேயே வளர்க்க வேண்டும். சாலையில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களிடம் இனிமேல் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்.
மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் பிடிக்கப்படுகிற மாடுகளை பேணி காக்க கால்நடை வளர்ப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வயலில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
- மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அக்ரவர்த்தி பகுதியை சேர்ந்தவர் ராசு.
இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி இளங்காடு செல்லும் சாலை அருகில் இருந்த வயலில் மேய்ச்சலுக்கு சென்றன.
அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அந்த வயலில் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்தது.
இந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.
இதில் மின்சாரம் தாக்கி 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- ரூ.60 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 27 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், 20 மாடுகள் ரூ.7 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- நகராட்சி பிடித்துசென்ற மாடுகள் நாளை ஏலம் விடப்படுகிறது.
- மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
கீழக்கரை
கீழக்கரையில் பொது மக்களுக்கு இடையூறாக பராமரிப்பின்றி சுற்றித்தி ரியும் மாடுகளை பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கீழக்கரையில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். அவை நகராட்சி அலுவலகம் அருகே தனியார் இடத்தில் அடைக்கப் பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அனுமதி இன்றி மாடுகள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இது அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதை யடுத்து மாடுகளை பாது காப்பதற்கு நியமிக்கப்பட்ட முருகேசன் என்பவர் நகராட்சி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் நாளை (10-ந் தேதி) காலை 11 மணிக்கு அந்த மாடுகள் ஏலம்விடப் படவுள்ளன. ஒரு மாட்டிற்கு ஏலத் தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப் பட்டது. இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறியதாவது:
ஏலத்திற்கான காப்புத் தொகையினை குறித்த காலத்திற்குள் டிமாண்ட் டிராப்டாக ஆணையாளர் கீழக்கரை நகராட்சி என்ற பெயரில் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்திற்கான காப்பு தொகை செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள். ஏலத்தின் போது ஆணை யாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஒவ்வொரு மாட்டிற்கான ஆரம்ப ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்படும்.
இதற்காக பல்வேறு நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இதே போல் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.
- மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பழையகோட்டையில் காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 47 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ரூ.12 லட்சத்துக்கு 35 மாடுகள் விற்பனையாயின. அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.
- பழையகோட்டையில் 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
- 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான இந்த பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.79 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது.
- கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.
திருப்பூர் :
ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. பாரம்பரியமான இச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது. இந்த வாரம் சந்தை துவங்குவதற்கு முன்பாக 8 மணிக்கே ஆட்டோக்கள் பெருந்தொழுவு ரோட்டில் நீண்ட வரிசையில் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு காத்திருந்தது.வழக்கமாக மதியத்துக்குள் வாகனங்கள் வருகை முடிந்து விடும். சந்தை முடிவு தருவாயை எட்டும் வரை தொடர்ந்து ஆட்டோ, வேன்களில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
1,100 மாடுகள் வரத்தாக இருந்தது. சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் கடந்த வாரம் 8முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. 40 முதல் 42 ஆயிரம் விற்ற மாடுகள் 46 முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மாடுகள் விலை 2,000 முதல் 4,000 வரை உயர்ந்ததால் சந்தை ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் ரூ. 1.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்