என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Susceptible to Rabies"
- காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலையில் 40 சதவீதமாகவும் இருக்கும்.
- தற்போதைய வானிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய், மடிவீக்க நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
உடுமலை:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை விபரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு.அதிகபட்சம் 30 முதல் 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலையில் 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல், 16 கி.மீ., வேகத்தில் இருக்கும்.தூரல் மழை மட்டுமே எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள், மண்ணின் ஈரப்பதம் பொறுத்து, நீர் பாசனம் செய்யலாம். வறட்சியான பகுதிகளில், பயிர்க்கழிவு மூடாக்கு பயன்படுத்தி மண் ஈரப்பதத்தை காப்பாற்றலாம்.வாழை மரங்களுக்கு தகுந்த முட்டுக்கொடுக்க வேண்டும்.
தற்போதைய வானிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய், மடிவீக்க நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.எனவே பால் கறப்பதற்கு முன், பின் மடியை ஒரு சதவீதம் பொட்டாசியம், பெர்மாங்கனேட் கரைசல் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்