search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி
    X

    மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி

    • இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வயலில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
    • மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அக்ரவர்த்தி பகுதியை சேர்ந்தவர் ராசு.

    இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி இளங்காடு செல்லும் சாலை அருகில் இருந்த வயலில் மேய்ச்சலுக்கு சென்றன.

    அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

    அந்த வயலில் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்தது.

    இந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.

    இதில் மின்சாரம் தாக்கி 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×