search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction work"

    • சோழவந்தான் அருகே காடுபட்டியில் ஊராட்சி செயலக கட்டுமான பணி தொடக்கப்பட்டது.
    • தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊராட்சி வளாக கட்டுமான பணிகள் தொடங்கியது.

    இதில் பி.டி.ஓ. கதிரவன், உதவிப் பொறியாளர் பூம்பாண்டி, வி.ஏ.ஓ., மணிவேல், ஊரா.சி தலைவர் ஆனந்தன்.செயலர் ஓய்யணன். பணியாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் போலீசார் காடுபட்டியில் பயன்பாடின்றி இருந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

    • ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.
    • திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப்பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    அவினாசி:

    அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகப்பேறு மருத்துவப் பிரிவு கட்டுமானப் பணியை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.மகப்பேறு மருத்துவப் பிரிவில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களும், 16 அறைகளில் 64 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது அங்கு வந்த சோலை நகா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள், அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.தற்காலிக நடவடிக்கையாக நாள்தோறும் வெளியாகும் கழிவுநீா் லாரிகள் முலம் வெளியேற்றப்படும் என்று ஆ.ராசா உறுதியளித்தாா்.

    ஆய்வின்போது பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப் பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
    • குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு க்கான கட்டுமான பணிகள் துவங்கின. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடையவுள்ள சூழலில் பயனாளிகள் யார், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

    வீட்டு வசதி வாரிய அதிகாரிஒருவர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் 60 சதவீதம்வரை நிறைவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்க ப்படும். மொத்தமுள்ள 432 குடியிருப்புகளுக்கு, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஏற்க னவே பெறப்பட்டுள்ளன. குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வரும் சூழலில் கலெக்டர் உத்தர வின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

    • அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது.
    • கட்டுமான பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அரசு கால்நடை மருந்தகத்தில் ரூ.1 கோடியில் புதிய மருந்தக கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜபாளையம் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் சேத்தூரை தலைமை இடமாக கொண்டு கால்நடைகளுக்கு ஆண்டாண்டு காலமாக மருத்துவம் பார்த்து கால்நடைகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவியது சேத்தூர் கால்நடை மருத்துவமனை ஆகும்.

    இந்த மருத்துவமனை குறித்து கால்நடைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவமனை வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் ராஜராஜேசுவரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப் பொறியாளர் பால சுப்பிரமணியன், பேரூர் சேர்மன் பால சுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச் செல்வம் மற்றும் பேரூர் கவுன்சி லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஊராட்சி ஏரியூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையலறை கட்டுமான பணியை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகள் விரைந்து கட்டவும் தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்.

    ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை உயர்ந்த மலைப் பகுதியில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக உள்ளது.

    இந்நிலையில் புங்கனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பின்பு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நேற்று ஏலகிரி புங்கனூர் பகுதியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க ஊராட்சி மன்றம் சார்பில் பணியை தொடங்கி வைத்தார்.

    ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜவ்வாது மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவனேசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டப்படுகிறது
    • பூமி பூஜை போடப்பட்டது

    சோளிங்கர்:

    சோளிங்கர் ஒன்றியம் வாங்கூர் ஊராட்சியில் எடையந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிய சமையலறை ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டும் பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.

    வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன் கரடிகுப்பம் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கனகராஜ் சமூக சேவகர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரமேஷ் கோதண்டராமன் பிரபு மற்றும் இடையதாங்கல் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • தேவிபட்டணம் ஊராட்சியில் தையல் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தையல் கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் பொன் செந்தில்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமணி, பொன்ராஜ், நிர்வாகிகள் பரமேஸ்வரன், பொன்னுச்சாமி, பால்துரை, டேவிட், வைரசாமி, பாலகிருஷ்ணன், தங்கராஜ், இசக்கிமுத்து, மகாலிங்கம், விஜய்குட்டி, சின்னப்பராஜ், உள்ளார் விக்கி மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • டி.பி. சோலார் நிறுவன கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டு தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் டி.பி. சோலார் நிறுவன (தி டாடா பவர் நிறுவனம்) கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

    இதில் டி.பி. சோலார் நிறுவன கட்டுமான பணியிடத்தின் 100 தொழிலாளர்கள், நெல்லை தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), டாடா புரொ ஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு நிபுணர் கலந்து கொண்டனர். இதில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலா ளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழி லாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவரின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இத்தகவலை நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சஜின் தெரிவித்தார்.

    • மாநிலம் முழுவதும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு) த.ச.சஜின் தலைமையில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரிவாக்க கட்டுமான பணி வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் மேற்கண்ட கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரரான பிரியா என்ஜினீயரிங் புரோஜெக்ட்ஸ் நிறுவனத்தின் 100 தொழிலாளர்களும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    • அரியலூரில் ரூ.7.80 கோடியில் மத்திய பேருந்து நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்குகிறது
    • கடைகளை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக திகழும் அரியலூர் 2010 முதல் 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகின்றது. 18 வார்டுகளை கொண்ட நகராட்சியின் பரப்பளவு 7.62 சதுர கிலோ மீட்டர் ஆகும். 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இங்கு 1975-ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக் கப்பட்டது.சுமார் 25 பேருந்து வழித்தடங்களில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வரு–கின்றது. சுமார்30 கி.மீ. சுற்றளவு பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

    48 ஆண்டுகால பழைய கட்டிடங்கள் என்பதால் மழைக்காலங்களில் பயணி கள் நனைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி வெயில் காலங்களில் ஒதுங்ககூட போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இங்கு சுமார் 60 கடைகள் ஏலம் விடப்பட்டாலும், 100 கடை–கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பய–ணிகள், பொதுமக்கள் நிற்கவோ, ஒதுங்கவோ மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே மத்திய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அரியலூ–ரில் மத்திய பேருந்து நிலை–யம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவ–டைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.இதற்கிடையே தற்போது பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் கடை–களை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட் டீஸ் வழங்கியுள்ளது. அது–வரையில் தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர்-திருச்சி பூறவழிச்சாலை தனியார் இடத்தில் செயல்படவுள்ளது. கட்டு–மான பணிகள் முடிந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும்.

    அரியலூர் நகரில் நவீன வசதிகளுடன் மத்திய பேருந்து நிலையம் அமைக் கப்படுவதற்கு பொது–மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நக ராட்சி நிர்வாகம் சார்பில் கேட் டுக்கொள்ளப்பட்டு உள் ளது. அரியலூர் நகரில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு அரியலூர் நகரரை அழகுபடுத்தும் பணியிலும் நகராட்சி நிர் வாகம் ஈடுபட்டுள்ளது.மத்திய பேருந்து நிலை–யத்தின் கட்டுமான பணி–களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. வாரசந்தை பூதிய கட்டுமான பணிகளும் தொடங்கியுள்ளதால் அங்கு பழைய கட்டிடங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி துவங்கியது.


    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
    • நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் வினீத் தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 62 நபர்களுக்கு 24.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஆணையாளர் ராமர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×