search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consecrated"

    • கோவிலுக்குச் சொந்தமாக 650 ஏக்கா் நிலம் உள்ளது.
    • மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில்:

    திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் மயில்ரங்கம் ஈஸ்வரன் கோவிலில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளன.

    மயில்ரங்கம் அமராவதி ஆற்றங்கரையில் கல்வெட்டுத் தகவல்படி, விஜய நகரப் பேரரசா் கிருஷ்ண தேவராயா் ஆட்சியில் கி.பி. 1532ம் ஆண்டு தையல் நாயகி உடனமா் வைத்திய நாதேஸ்வரா் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் 490 ஆண்டுகள் பழமையானது. கோவிலின் பல கோடி ரூபாய் மதிப்புடைய பல ஐம்பொன் சிலைகள் அறநிலையத் துறை வசம் உள்ளன. கோவிலுக்குச் சொந்தமாக 650 ஏக்கா் நிலம் உள்ளது.

    தற்போது சிதிலமடைந்து கிடக்கும் இக்கோவிலைப் புனரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9.9.1985க்கு பிறகு 37 ஆண்டுகளாக கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. இந்நிலையில் வெள்ளக்கோவில் மற்றும் சேனாபதிபாளையம் கிராமப் பொதுமக்கள் சாா்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் கோவிலில் நடைபெற்றது.

    இதில் திருப்பணிக்குழு அமைக்கவும், அறநிலையத் துறை அதிகாரிகள், அரசு ஸ்தபதியை வரவழைத்து ஆலோசனை பெறவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கோவில் செயல் அலுவலா் ராமநாதன் உள்பட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா். 

    • 4-ம் கால யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திங்களூர் கிராமத்தில் பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கி முடிந்தது.

    இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேக விழா முதல் யாகசாலை கலா கர்ஷசனம் அக்னி மிதனம் அக்னி பிராணாயணம் யாகசாலை பிரவேசம் பூர்ணாஹூதியுடன் பூஜை துவங்கியது.

    நேற்று காலை நான்காம் யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடை பெற்று மஹாதீபாரதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து வேதபாராயணங்கள் நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் முழங்க புறப்பட்டு சன்னதியின் பிரகாரங்கள் உலா வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள், தாயார் சன்னதி, ராஜகோபுரம் கலசங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலர் சக்திவேல், ஆய்வாளர் குணசுந்தரி, கணக்கர் செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள், சேவா ர்திகள் செய்திருந்தனர்.

    • திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
    • 11 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை அடுத்து திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    இதனிடையே கோவிலில் உள்ள பரிவார மூர்த்தி தெய்வ சன்னதிக ளுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

    ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், காழிபுரீஸ்வரர், காழி கணநாதர், மண்டப குமாரர், 63 நாயன்மார்கள், நவக்கிரக சன்னதி, திருஞானசம்பந்தர் ஆர்ச் உள்ளிட்ட சுமார் 11 பரிவார மூர்த்தி சன்னதிக ளுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் சங்க தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி.நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருமுல்லைவாசல் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 500 ஆண்டுகள் பழமையானது
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கு தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அதிமுக மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்கராஜா, நிர்வாகிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் ஸ்ரீ வன காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட 4 அம்மனுக்கு கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மங்கல இசை சிறப்பு பூஜை வாஸ்து சாந்தி முதல் கால யாக பூஜை மற்றும் தீப ஆராதனையும் நடைபெற்றது.

    அதன் பிறகு திருப்பத்தூர் சிவா ஸ்ரீ ரவி குருக்கள் மற்றும் சுவாமி நாத மகேஷ் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் அம்மையார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அடுத்த, சப்தலிபுரம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் 2 நாட்களுக்கு முன்பாகவே அமைக்கப்பட்ட யாகசாலையில் 6 கால பூஜைகள் செய்து, யாகங்கள் வளர்க்கப்பட்டது.

    மேலும் அங்கு வைக்குப்பட்டு இருந்த 208 கலசத்திற்க்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசத்தை தலைமீது ஏந்தி மேல தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மீது அமைந்துள்ள விமான கலச கோபுரத்தின் மீது ஊற்றினர். பின்னர் பக்தர்கள் புனித மீது தெளிக்கப்பட்டது.

    இதன் பின்பு மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, அலங்கரித்து தீபாராதனை நடைெபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு பூஜைகள் நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே முருகர்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை கிராமத்தில்மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விநாயகர், முருகர், பரிவாரதேவதைகள், சக்திவேல், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்தும், கலசங்கள் அமைக்கப்பட்டும் யாக பூஜைகள் நடந்தது.

    சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத பூஜைகள் நடத்தப்பட்டு, மேள தாளத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, தீபாரனை செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில், மூலவர் முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சக்திவேல், காவடி, உற்சவதிருத்தேர், செடல் ஊர்வலம் என பக்தர்கள் ராயம்பேட்டை கிராமத்தில் வீதி உலா வந்தனர்.

    நிகழ்ச்சியில், அருணை குழுமம் எ.வ.வே.கம்பன், கீழ்பென்னாத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி எ.எஸ்.ஆறுமுகம், அதிமுக ஒன்றிய செயலாளர் தொப்பளான் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், திருப்பணி குழுவினர்கள், விழாக்குழுவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கொடி மரங்களில் தங்கமுலாம்
    • பக்தர்கள் உதவி செய்ய வேண்டுகோள்

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோவில் சுமார் 400 ஆண்டுகள் வழிபாட்டில் இல்லாமல் இருந்தது.

    வேலூர் சத்துவாச்சாரியில் இருந்த ஜலகண்டேஸ்வரர் சிலையை கோவிலில் வைத்து வழிபட முடிவா னது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவிலில் சிலை வைக்கும் பணிக்காக ஜலகண் டேஸ்வரர் கோவில் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது.

    இந்த குழுவின் திட்டப்படி அப் போதைய கலெக்டர் கங்கப்பா வழி காட்டுதலின்படி கடந்த 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வேலூர் கோட்டையில் இருந்த கோவில் கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதன்பிறகு தொல்லியல் துறையால் சிலையை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. கோவிலின் முதல் கும்பாபிஷேக விழா கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-10 தேதியும், 2-வது கும்பாபிஷேகம் விழா 1997- ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும், மூன்றாவது

    கும்பாபிஷேக விழா 2011-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடத்தப்பட்டது.

    இந்நிலையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலின் நான் காவது கும்பாபிஷேகம் விழா நடத்தப்படவுள்ளது. இது வளாகத்தில் விழாக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. சண்முகம் கூறும்போது, "வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நான்காவது கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    யாகசாலை பூஜை வரும் ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். வரும் ஜூன் 25-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவை யொட்டி பொதுமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கலாம்.

    கும்பாபிஷேக விழா வின் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் இருக்கும் அனைத்து கலசங்கள் மற்றும் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விநாயகர் பூஜை, தீபாராதனை, கோபூஜை, 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது.
    • கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    மதுக்கூர்:

    பட்டுகோட்டை அருகே அருள்மிகு பூர்ணாம்பிகா புஷ்கலாம்பிகை சமேத அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் மற்றும் பிடாரி அம்பிகையின் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட பெரியக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு பூர்னாம்பிகா, புஷ்கலாம்பிகை அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் பிடாரி அம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.

    இந்த திருக்கோயில் சிலை ஒரே கல்லில் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு யாகசாலை உள்ளிட்ட விநாயகர் பூஜை மஹகணபதி ஹோமம் விநாயகர் பூஜை தீபார்த்தனை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கலச நீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

    இந்த புனித நீரை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்தபடி கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சியை பெரிய கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் இருந்த பொதுமக்கள் நிறைய பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமானோர் தரிசனம்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    சோளிங்கர்

    சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ சவுந்தரநாயகி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கோ பூஜை கலசபூஜை யாக பூஜை பூர்ணாஹீதி நடைப்பெற்றது.தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கோவில் கோபுர கலசத்திற்கும் மூலவர் சுந்தரேஸ்வரர், சவுந்தரநாயகி சாமிக்கு பூஜை செய்யப்பட்ட கலச புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, தொழிலதிபர் பூபாலன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • கொட்டும் மழையில் ஏராளமானோர் தரிசனம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் சுமார் 1747 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பரமேஸ்வரர் ஆலயம் 2-ம் நந்திவர்மன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும் இதனை கிராம பொதுமக்கள் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையும் மற்றும் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் இரண்டு நாள் காலை மாலை யாக பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை யாகசாலை பூஜை முடிவுற்றவுடன் அலங்கரிக்கப்பட்ட கலசங்களில் சேகரிக்கப்பட்ட புனித நீர் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அருள் சித்தர் அன்பு செழியன் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாமந்தி பார்த்திபன், கவுன்சிலர் சுமதி முனுசாமி, ஆலய உறுப்பினர்கள் சரவணன், ரமேஷ் மோகன்வேல், மோகன், பாஸ்கரன், குமார், நாகப்ப ரெட்டி, ராஜ்குமார், பாண்டியன் நாட்டார், கோவிந்தசாமி, பாபு மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    மழை பெய்தாலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கோபுர கலசம் நிறுவுதல், சுவாமி சிலைகள் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடந்தது.

    இதனைத் தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பின்னர் ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதீப்பாஞ்சம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×