என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திங்களூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- 4-ம் கால யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த திங்களூர் கிராமத்தில் பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கி முடிந்தது.
இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேக விழா முதல் யாகசாலை கலா கர்ஷசனம் அக்னி மிதனம் அக்னி பிராணாயணம் யாகசாலை பிரவேசம் பூர்ணாஹூதியுடன் பூஜை துவங்கியது.
நேற்று காலை நான்காம் யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடை பெற்று மஹாதீபாரதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து வேதபாராயணங்கள் நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் முழங்க புறப்பட்டு சன்னதியின் பிரகாரங்கள் உலா வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள், தாயார் சன்னதி, ராஜகோபுரம் கலசங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலர் சக்திவேல், ஆய்வாளர் குணசுந்தரி, கணக்கர் செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள், சேவா ர்திகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்