என் மலர்
உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- 500 ஆண்டுகள் பழமையானது
- அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கு தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அதிமுக மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்கராஜா, நிர்வாகிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






