என் மலர்
உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் ஸ்ரீ வன காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட 4 அம்மனுக்கு கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மங்கல இசை சிறப்பு பூஜை வாஸ்து சாந்தி முதல் கால யாக பூஜை மற்றும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
அதன் பிறகு திருப்பத்தூர் சிவா ஸ்ரீ ரவி குருக்கள் மற்றும் சுவாமி நாத மகேஷ் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் அம்மையார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






