search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress protest"

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்றது

    அரியலூர்:

    விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்நடை பெற்றது. இதன்படி அரியலூர் பேருந்துநிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன் அழகானந்தம், மாவட்ட பொறுப்பாளர்கள் அமானுல்லா, பாலசிவகுமார், தியாகராஜன், அழகானந்தம், ரவிச்சந்திரன், சகுந்தலா தேவி, பழனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டன்.

    இதைபோல் ஜெயங்கொண்டம் நகரத்தில் சிதம்பரம் சாலையிலிருந்து நான்கு ரோட்டில், அரியலூர் மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள்தா.பழூர் சரவணன் ஜெயங்கொண்டம் வடக்கு சக்திவேல், தெற்குகண்ணன், ஆண்டிமடம் வடக்கு சாமிநாதன், தெற்கு வேல்முருகன், உடையார்பாளையம் நகர காங்கிரஸ் தலைவர் அக்பர் அலி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ஆனந்தராஜ்,

    மாவட்ட சிறுபான்மை தலைவர் குருசாமி,ஜெயங்கொண்டம் வட்டார நிர்வாகிகள்பன்னீர்செல்வம், தர்மலிங்கம், ராமச்சந்திரன், ஜம்பு, ரெங்கநாதமூர்த்தி, அந்தோனி டேவிட், ஜெயங்கொண்டம் நகர நிர்வாகிகள்ஜெ கநாதன், சந்திரசேகரன், தங்கராசு, ரமேஷ், காளிமுத்து, மற்றும் உடையார்பாளையம் ஆண்டிமடம் இலையூர் நிர்வாகிகள்இளைஞர் காங்கிரஸ்மா வட்டதுணைத்தலைவர் சிற்றரசன், ஜெயப்ரகாஷ்தீபன், மதன் உள்ளிட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வத்தலக்குண்டுவில் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    விலைவாசி உயர்வவை குறைக்க வேண்டும். அமலாக்கத்துறை மூலம் காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வத்தலக்குண்டுவில் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் காமாட்சி தலைமை வகித்தார்.

    காங்கிரஸ் நகர தலைவர்அப்துல் அஜீஸ்,மாநில செயற்குழு உறுப்பினர் கோபால்,மாவட்ட நிர்வாகி அஜிஸ்,மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர்ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பட்டிவீரன்பட்டி நகர செயலாளர் பிரசன்னா, தம்பி,மகாதேவன், சேவுகம்பட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர்நாகராஜ்,வட்டார பொதுச் செயலாளர் பாஸ்கரன்,வத்தலகுண்டு வட்டார அவைத்தலைவர் ராஜா,செயலாளர் கணேசன்,நிர்வாகி பழனிமுத்து உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    • ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரவி சங்கர் பிரசாத் பதிலடி

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது என்றும், இந்தியாவே அதை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

    காங்கிரசின் இந்த போராட்டம், காந்தி குடும்பத்தை ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

    இதுபற்றி பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் வெட்கக்கேடான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை கூறுகிறார். ராகுல் காந்தியின் பாட்டியும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திதான் எமர்ஜென்சியை விதித்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தார். மக்கள் உங்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்கும் போது நீங்கள் ஏன் ஜனநாயகத்தை குறை கூறுகிறீர்கள்? உங்கள் கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறதா?

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. இரண்டு காந்திகளுக்கு 76 சதவீத பங்குகள் உள்ள யங் இந்தியன் நிறுவனம் எப்படி ரூ.5,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள நேசனல் ஹெரால்டு சொத்துக்களை வெறும் ரூ.5 லட்சம் முதலீட்டில் வாங்கியது என்பது குறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்.

    அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய நீதித்துறை மறுத்துவிட்டது. இப்போது அவர் விசாரணை அமைப்புகளை குற்றம் சாட்டுகிறார். ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என்று சாக்குபோக்கு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத்தில் இருந்து வீதிக்கு வந்து காங்கிரஸ் நடத்திய பேராட்டங்களால், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலவரத்தை மாற்ற முடியாது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

    • அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை ரெயில் முன்பு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 163 பேரை கைது செய்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் கோவை ரெயில் முன்பு ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார், கவுன்சிலர்கள் சங்கர், கிருஷணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட நிர்வாகிகள் போஸ், ராம நாகராஜ், தமிழ்செல்வன், ஜெயபால், இருகூர் சுப்பிரம ணியன், சுரேஷ்குமார், தாமஸ் வர்க்கீஸ், ஈஸ்வர மூர்த்தி,மோகன்ராஜ், கே.கே.சந்தோஷ், அரிமா ஆறுமுகம், காந்தகுமார், ரங்கநாதன், சுப்பு காமராஜ், சர்க்கிள் தலைவர்கள் ஜேம்ஸ், அசோக்குமார், சேக் முகம்மது, கணேசன், ராமன், சக்திவேல், முருகன், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி, திலகவதி, வக்கீல்ல்கள் செந்தில், தமிழ்செல்வன், மற்றும் டென்னிஸ் செல்வராஜ், அணீஸ், ராம்நகர் சீனிவாசன், முஸ்தபா, இஸ்மத், ராமகிருஷ்ணன், சின்னசாமி, மருதாசலம், ரமேஷ்குமார், மோசஸ், சங்கனுர் கோபால், முத்துசாமி செட்டியார், சுந்தரம், சண்முகானந்தம், இளைஞர் காங்கிரஸ் வினோத், கிளிண்டன், கோவை தாமஸ், குமார், சிவபெருமாள், கிக்கிஸ் சேகர், தமிழ்மணி, சகாயம், பர்வேஸ், மெட்டல் சலீம், அஸ்மத்துல்லா, பாலு, முரளி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் 7 பெண்கள் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பார்க்கில் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர்கள் அழகு ஜெயபால், நவீன்கு மார் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட 35 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பச்சை முத்து, கவுன்சிலர் சரவணகுமார், ராம்கி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    அரிசி, பால், தயிர் போன்ற உணவு பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஏமாற்றம் என மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    இதற்காக மிஷன் வீதி மாதா கோவிலில் இருந்து காங்கிரசார் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    ஊர்வலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், கார்த்திகேயன், அனந்தராமன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ரகுமான், சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, கலைவாணன், சடகோபன், வக்கீல் சாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆம்பூர் சாலைக்கு வந்தனர். அங்கு போலீசார் பேரிகார்டுகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.

    அங்கு போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளின் மீது ஏறி தடையை தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைதுசெய்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் கைது செய்யப்பட்டார்.

    • ஜி.எஸ்.டி உயர்வுக்கு எதிர்ப்பு
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேலும் ஜி.எஸ்.டி உயர்வு எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் எடுத்துரைக்கபட்டடன.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற மாணவர் அணி தலைவர் பொன்னையன் எஸ்.டி.செல்வம் பிரபு உதயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்பு.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • திண்டுக்கல்லில் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், ராகுல்காந்தி, சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மச்சக்காளை, முகமதுசித்திக், ரோஜாபேகம், கிழக்கு மண்டலதலைவர் கார்த்திக், ஜெகநாதன், வேங்கைராஜா, ஷாஜகான், அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கத்துறை மூலமாக 3-வது நாளாக விசாரணைக்கு அழைத்த மத்திய அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், மகாத்மா காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர் சிவாஜி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், பொருளாளர் இளையராஜா, வட்டார தலைவர்கள் நல்லேந்திரன், லால்குடி சுப்பிரமணியன், கே.பி.ராஜா, கோட்டத்தலைவர் ராஜ்மோகன், வில்ஸ் முத்துக்குமார்,

    ஹெலன், அமிர்தவள்ளி, டேவிட், கிரேசி, ஜார்ஜ், நிஜவிரப்பா, கதிரேசன், முரளி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, அண்ணாசிலை விக்டர், மாவட்ட செயலாளர்கள் ராஜா டேனியல் ராய், பிலால், அனந்த பத்மநாபன், பட்டேல், ஜீவா நகர் ராஜா,

    எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவி ஜோதி, மாநில மகளிர் அணி செயலாளர் வக்கீல் மோகனாம்பாள், பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, தியாகராஜன், ஸ்ரீரங்கம் கோட்ட நிர்வாகிகள் செல்வி, குமரன், கதர் ஜெகநாதன், அணில் மாதவன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் உறையூர் கிருஷ்ணா, ஜெயம் கோபி, ஸ்ரீரங்கம் கிருஷ்ணா,

    வார்டு தலைவர்கள் முருகன், செளந்தர், சக்தி, வெங்கடேஷ், வடிவேலு, தீலிபன் பன்னை சரவணன், பிரியங்கா பட்டேல், அய்யா கண்ணு, அல்லூர் எழிலரசன் அன்பில் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.
    • காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஜெயமீனா முருகானந்தம், மாநில செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் நத்தம் தொகுதி தலைவர் சுடர்வண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோனியாகாந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராகுல் தலைமையில் காங்கிரசார் போராட்டம்.
    • பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை விஜய்சவுக் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர். ராகுல்காந்தி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடக்கு நீருற்று பகுதி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 6 மணி நேரத்திற்கு பின்னர் ராகுல்காந்தி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபாத் உள்ளிட்டவை குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டுள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து புகார் தெரிவித்தார்.

    பாராளுமன்றத்திற்கு உள்ளே விவாதம் நடத்த அனுமதி அவர்கள் மறுப்பதாகவும், வெளியே எங்களை அவர்கள் கைது செய்கிறார்கள் என்றும் ராகுல் கூறினார்.  தாம் போலீசார் காவலில் வைக்கப்பட்டாலும், மக்களுக்காக குரல் எழுப்புவதை அவர்கள் குற்றம் என்று சொன்னாலும், ஒருபோதும் எங்கள் உறுதிபாட்டை அவர்களால் உடைக்க முடியாது என்றும் ராகுல் குறிப்பிட்டார். 

    • நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்க துறை ராகுல் காந்தியை சுமார் 54 மணி நேரமாக விசாரணை நடத்தியது.
    • ஏற்கனவே ராகுல் காந்தியை 5 முறை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    நெல்லை:

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்க துறை ராகுல் காந்தியை சுமார் 54 மணி நேரமாக விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இன்று 2-வது நாளாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை கண்டித்து இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட அலுவலகம் முன்பு அற வழி போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஏற்கனவே ராகுல் காந்தியை 5 முறை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இன்று 2-வது நாளாக சோனியா காந்தியையும் அழைத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி விட்டு இது போன்ற செயல்களை செய்து வருகிறது.

    ஏற்கனவே கோர்ட்டு சோனியா காந்தி மீது தவறு இல்லை என்று கூறிவிட்டது. ஆனாலும் மத்திய அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அதிகளவு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டத்தின் போது கவுன்சிலர்கள் அனுராதா சங்கர பாண்டியன், அம்பிகா மற்றும் பொதுச் செயலாளர் சொக்க லிங்க குமார், உதயகுமார், வெள்ள பாண்டி, மாவட்ட துணை தலைவர் கவிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
    • சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

    புதுச்சேரி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை தொடர்ந்து சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.

    இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் (வியாழக்கிழமை)போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுவை காங்கிரஸ் சார்பில் 10 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் அயராத உழைப்பால் 2 முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவந்தார். 2004-ல் பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்து மன்மோகன்சிங்கிற்கு வழங்கினார். எந்த ஆட்சி பதவியும் வகிக்காத சோனியா மீது அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இதைகண்டித்து காங்கிரஸ் சார்பில்நடைபெறும் போராட்டத்தில் காங்கிரசார் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×