search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை காங்கிரசார் போராட்டம்
    X

    கோப்பு படம்

    புதுவை காங்கிரசார் போராட்டம்

    • இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
    • சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

    புதுச்சேரி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை தொடர்ந்து சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.

    இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் (வியாழக்கிழமை)போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுவை காங்கிரஸ் சார்பில் 10 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் அயராத உழைப்பால் 2 முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவந்தார். 2004-ல் பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்து மன்மோகன்சிங்கிற்கு வழங்கினார். எந்த ஆட்சி பதவியும் வகிக்காத சோனியா மீது அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இதைகண்டித்து காங்கிரஸ் சார்பில்நடைபெறும் போராட்டத்தில் காங்கிரசார் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×