search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress MLA"

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்ற எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையிலான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். #Gujarat #JaiSamadhi
    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்றனர். ஜவுளி சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

    லலித் வசோயாவுக்கு ஆதரவாக மேலும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் உள்பட பலர் புகி கிராமத்தில் கூடியிருந்தனர். அப்போது போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர்.   #Gujarat #JaiSamadhi   #tamilnews 
    மராட்டிய மாநிலத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
    அமராவதி:

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கான பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மராட்டிய மாநிலம் அமராவதி நகரில் காங்கிரஸ் கட்சியினர் சமீபத்தில் அமைதி பேரணி நடத்தினார்கள்.

    இந்த நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அமராவதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே வீரரேந்திர ஜக்தாப், யாஷ்மோமாதி தாக்குர் என்ற இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். அவர்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கும் முன் போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 
    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்து பீமப்ப நியாம்கவுடு சாலை விபத்தில் உயிரிழந்தார். #KarnatakaAccident #CongressMLADies
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஜாம்கண்டி தொகுயில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்து பீமப்ப நியாம்கவுடு. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கோவாவில இருந்து கர்நாடகாவின் பாகல்கோட் நகருக்கு காரில் வந்துகொண்டிருந்தார். துளசிகேரி அருகே வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் எம்.எல்.ஏ. சித்து உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



    சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜாம்கண்டி தொகுதியில் போட்டியிட்ட சித்து பீமப்ப நியாம்கவுடு, பா.ஜ.க. வேட்பாளர் குர்கர்னி ஸ்ரீகாந்த் சுப்புராவை விட 2795 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி மொத்தம் 78 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது சித்து மறைந்தையடுத்து, சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 77 ஆக குறைந்துள்ளது.  #KarnatakaAccident #CongressMLADies
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 நாட்கள் ரெசார்ட்டு மற்றும் ஓட்டல்களில் தங்குவதற்காக ரூ.5 கோடி செலவாகி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். பின்னர் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதால், பதவியை ராஜினாமா செய்தார். தற்போது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளன. முன்னதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சித்தது.

    இதனால் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட்டு மற்றும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முதலில் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஐதராபாத் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அது முடிந்த பின்பே ஓட்டலில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் சொந்த தொகுதிக்கு செல்ல உள்ளனர்.



    இந்த நிலையில், ஓட்டல் அல்லது ரெசார்ட்டில் ஒரு எம்.எல்.ஏ. தங்குவதற்காக ஒரு நாளுக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு எம்.எல்.ஏ.வின் காலை டிபனுக்கு ரூ.1,300-ம், மதியம் சாப்பாட்டுக்காக ரூ.1,600-ம், இரவு உணவுக்காக ரூ.1,800-ம் செலவு செய்யப்படுவதாக தெரிகிறது. மேலும் ஓட்டல் அல்லது ரெசார்ட்டில் ஒரு படுக்கையை கொண்ட அறைக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.7 ஆயிரமும், 2 படுக்கைகள் கொண்ட அறைக்கு ரூ.14 ஆயிரம் வாடகை கொடுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

    அதே நேரத்தில் ஓட்டலில் பெரிய அரங்கில் எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தியது, எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் வந்து தங்கியதுடன், அவர்கள் சாப்பாட்டுக்கான ஆன செலவு என ஒட்டு மொத்தமாக நேற்று முன்தினம் வரை 8 நாட்களில் ரூ.5 கோடியை காங்கிரஸ் கட்சியினர் செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அந்த பணத்தை யார்? வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேசுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 
    கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி தொடர்பான ஆடியோ போலியானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #KarnataElection2018 #Congress #AudioRelease #ShivaramHebbar

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர், 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

    கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பாஜகவை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், பணம், மந்திரி பதவி மற்றும் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்திக்க வைப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என பாஜக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்தார். 

    அந்த ஆடியோ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாள் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தநாள் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் நேற்று தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி தன்னை பற்றி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது என தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    தன்னையும், தனது மனைவியையும் பாஜகவினர் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்மனைவியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பாஜகவினர் பேசியதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது. அதுபோன்ற எந்தவிதமான தொலைபேசி அழைப்புகளையும் என் மனைவி எதிர்கொள்ளவில்லை. அந்த ஆடியோ டேப்பில் உள்ள பெண்ணின் குரலும் என் மனைவி உடையது அல்ல. இதுபோன்ற ஆடியோ டேப்பை நான் கண்டிக்கிறேன். 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KarnataElection2018 #Congress #AudioRelease #ShivaramHebbar
    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வின் குதிரை பேரம் தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோடியின் பிடியில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார். #KarnatakaElection #CongressMLAMissing
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு இருப்பதோ 104 எம்.எல்.ஏ.க்கள். எனவே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  கூட சில எம்.எல்.ஏ.க்கள் வராமல் இருந்ததால் அவர்களை பா.ஜ.க. வளைத்துப்போட முயற்சி நடக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக சித்தராமையா தெரிவித்தார்.



    இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரசார் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷிடம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிலை குறித்து கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த சுரேஷ், ‘ஆனந்த் சிங் தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கே உள்ளனர். ஆனந்த் சிங் மோடியின் பிடியில் உள்ளார்’ என்றார்.

    இதன் மூலம் ஆள் பிடிக்கும் வேலையை பா.ஜ.க. தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக மற்றும் அமைச்சர்கள் பணியாற்றுவதாகவும், எம்எல்ஏக்களை பாதுகாப்பதுதான் தங்கள் திட்டம் என்றும் குமாரசாமி கூறியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection #CongressMLAMissing
    கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறந்து வரும் நிலையில், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருந்துகளில் மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றனர். #KarnatakaElection #KarnatakaCMRace
    பெங்களூர்:

    கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

    104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    மாலை 5 மணியளவில் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், எடியூரப்பா நாளை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

    எம்.எல்.ஏ.க்களை பாஜக வளைத்துவிடக்கூடாது என்பதற்கான மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதி அவர்களுக்காக புக் செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் 2 பேருந்துகளில் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
    ×