search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collectorate"

    • தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்று வருகின்றனர்.
    • மனுவைப்பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி . இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தாய் சுந்தராம்பாள், மகள் மகாலட்சுமி மற்றும் பேத்தி சவுரபி ஆகியோருடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்று வருகின்றனர் .இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள். இதனால் எங்களுக்கு நீதி வேண்டும் என கோரியிருந்தனர்.மனுவைப்பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மராட்டிய மாநிலத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
    அமராவதி:

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கான பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மராட்டிய மாநிலம் அமராவதி நகரில் காங்கிரஸ் கட்சியினர் சமீபத்தில் அமைதி பேரணி நடத்தினார்கள்.

    இந்த நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அமராவதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே வீரரேந்திர ஜக்தாப், யாஷ்மோமாதி தாக்குர் என்ற இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். அவர்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கும் முன் போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 
    ×