search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister"

    • தீக்குளித்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
    • போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு போலீஸ்நி லையத்தில் தீக்குளித்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இத்தகவல் கலைச்செல்வியின் குடும்பத்தினர், உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு காவல்நிலையம் அருகே ஒன்று கூடி மறியல் போராட்டத்துக்கு தயாராகினர். தகவலறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்எல்ஏ அங்கு வந்தார். அவர்களிடம் கோரிக்கைகளை முதல அமைச்சரிடம் தெரிவியுங்கள் என கூறினார். அதற்கு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.

    காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளை ச்சாவடி, கனகசெட்டிகுளம் ஆகிய 4 மீனவ கிராம பஞ்சாயத்தார் சட்டசபைக்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சரை சந்திக்க கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ அறையில் அவர்கள் காத்திருந்தனர். மதியம் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்தார்.

    எம்.எல்.ஏ.வோடு முதல்-அமைச்சர் ரங்கசாமியை  சந்தித்தனர். அப்போதும் தீக்குளிப்பை போலீசார் தடுக்காததோடு அந்த பெண்ணுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்த்திற்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    முடிவு தெரியும் வரை பிணத்தை பெற மாட்டோம் என கூறினர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ முதல்-அமைச்சருடன் பேசி தகவல் தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்று மீனவ பஞ்சாயத்தார் சட்டமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.இதனிடையே காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. கண்டனம்
    • மத்திய அரசின் சுகாதாரத்துறை 2 நாட்களுக்கு முன்பு முதுநிலை மருத்துவ படிப்பில் தகுதி இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ மாணவர்கள் சேரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க.துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்பில் மருத்துவ மாணவர்கள் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜிய பர்சன்டைல் அடிப்படையில் குறைத்து பணம் வைத்திருக்கும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் தேசிய மருத்துவ கழகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

    தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை யடிக்கின்ற முயற்சிகளுக்கு துணை போகும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தேசிய மருத்துவ கழகம் எடுத்த நடவடிக்கைகளை கண்டிக்கின்ற வகையில் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அதனை கண்டிக்கின்ற வகையில் புதுச்சேரி கவர்னர் தமிழக அரசியலில் மூக்கை நுழைத்து தேவையற்ற சர்ச்சைகளை தொடர்ந்து உருவாக்கி, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணை போவது மிகவும் மோசமான செயலாகும்.

    மருத்துவ படிப்பில் தரத்தை உயர்த்துகிறேன் என்ற போர்வையில் "நீட்"எனும் கொடிய விஷக்கொல்லி மருந்தினை இந்தியா முழுவதும் ஆளும் பா.ஜனதா அரசு 2017 ஆம் ஆண்டில் இருந்து தூவி, பல மாணவர்களை பலிகடா ஆக்கியிருக்கிறது.

    சமீபத்தில் கூட ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறை 2 நாட்களுக்கு முன்பு முதுநிலை மருத்துவ படிப்பில் தகுதி இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ மாணவர்கள் சேரவில்லை.

    இதனால் மருத்துவ முதுநிலை படிப்பில் ஏராளமான காலி இடங்கள் தனியார் கல்லூரிகள் நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்கள் நிரம்பாததால் அந்த தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வண்ணம் கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்து வசதி படைத்தவர் அனைவரும் எந்தவிதமான தகுதி இல்லாமல் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வழிவகை செய்திருக்கிறது.

    இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதேபோல பாஜக கூட்டணி கட்சியான பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் தேசிய மருத்துவ கழகத்தின் இந்த முடிவினை ஒரு வரலாற்றுப் பிழை என்று தெரிவித்திருந்தனர். இவர்களுக்கெல்லாம் பதில் கூறுவதை தவிர்த்து, தமிழக முதல்வர் கூறிய கருத்தை கண்டிக்கின்ற வகையிலே நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் கூறி இருப்பதை தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
    • பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

    திருவண்ணாமலை:

    தமிழ்நாட்டு மக்களுக்காக 24 மணிநேரமும் தனது உடலை வருத்தி தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடையூர் மற்றும் அத்தியந்தால் ஆகிய கிராம ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு மனுக்களை பெற்றார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    கிராமப்புற மக்களுக்கு தேவையான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. மக்களின் தேவை அறிந்து திட்டங்களை தீட்டி அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

    குறிப்பாக இந்த ஆட்சியில் பெண்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்கள் அதிக அளவில் நிறைவேற்றப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15-ந் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்காக 24 மணிநேரமும் தனது உடலை வருத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் உத்தமர் தலைமையிலான நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து துறை அலுவலர்களுடன் இங்கு வந்துள்ளேன்.

    நீங்கள் அளிக்கும் மனுக்கள் உங்களுக்கு ஆணைகளாக கிடைக்கும். தமிழ்நாடு இன்று சுபிட்சமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சப் - கலெக்டர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், மெய்யூர் சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் கொள்கிறார்.
    • குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.58 கோடி மதிப்பில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் தலைமை யிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு புதிய திட்டங்களையும் தமி ழகத்தில் சிறப்பாக செயல்ப டுத்தி வருகி றார்கள்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமன்றி, வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும், தேர்தல் வாக்குறுதியிணை நிறைவேற்றிடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அதனையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

    இதுபோன்று பொதுமக்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பயனுள்ள வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலு வலர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரி வித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வக்கீல், தி.மு.க. மாநில மாணவரணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி. இவர் தி.மு.க. செய்தி தொடர்பா ளராகவும் இருந்து வருகி றார்.

    தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை 2.0 என்ற பெயரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதனை சிறப்பாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னி லையில் இரா.ராஜீவ் காந்திக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்த நிலையில் நேற்று இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நினைவுப்பரிசை வழங்கி வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தார்.

    மண்டபம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் (மேற்கு) வாலாந்தரவை பிரவீன் குமார் (மத்திய), தேர்போகி முத்துக்குமார், (கிழக்கு), புதுமடம் நிலோபர் கான் உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல் தி.மு.க. அயலக பொறியாளர் அணி செயலாளர் முத்துப்பேட்டை சபரிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.

    • கடந்த 30 ஆண்டாக பதவி உயர்வு இன்றி பணிபுரிந்துவருகின்றனர்.
    • பதவி உயர்வு வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கிராமப்புற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களாக பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    கடந்த 30 ஆண்டாக பதவி உயர்வு இன்றி பணிபுரிந்துவருகின்றனர். பதவி உயர்வு கோரி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேளாண் பட்டதாரி அலுவலர் சங்கத்தினர் வேளாண் இயக்குநரகம் முன்பு கூட்டம் நடத்தினர். சங்கத்தலைவர் சங்கர்தாஸ் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அவர்களிடம் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர்களை முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் அழைத்துச்சென்று கோரிக்கை மனு அளித்தார். அப்போது, வேளாண்துறை பட்டதாரி அலுவலர்களுக்கு துணை இயக்குநர் பதவி உயர்வு வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    வேளாண்துறை செயலரை அழைத்துப் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, பட்டதாரி அலுவலர்கள் பதவி உயர்வுக்கான நடவடிக்கையை சட்டரீதியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    • அ.தி.மு.க.வலியுறுத்தல்
    • சென்டாக் கவுன்சிலை நடத்த கவர்னர், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவெடுத்து அதிகார பூர்வமான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் முடிவை எடப்பாடி பழனிச்சாமியை பின்பற்றி புதுவை மாநில அ.தி.மு.க.வும் வரவேற்கிறது.

    மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதல்-அமைச்சரும், கவர்னரும் 2 மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க இன்னும் சுமார் 40 தினங்கள் உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று சென்டாக் கவுன்சிலை நடத்த கவர்னர், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவெடுத்து அதிகார பூர்வமான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

    அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, உள்ளிட்ட தேசிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து 3-வது கூட்டத்தை கூட்டியு ள்ளனர். இந்த கூட்டம் அரசியல் லாபத்திற்காக மட்டுமே கூட்டப்பட்டது. இதில் இந்தியா வளர்ச்சி குறித்து எதுவும் பேசப்பட வில்லை.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணைச்செயலாளர் திரு நாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தது
    • ஊராட்சி குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் காந்தி நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சந்திரயான்- 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியமைக்காக இஸ்ரோவிற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
    • ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    தஞ்சாவூர்: 

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் , கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தியும் கடந்த 268 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவ ட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக இன்று தஞ்சை வழியாக மயிலாடுதுறை செல்லும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சாலியமங்கலத்தில் வைத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் ஏராளமான விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில், திருஆரு ரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடியும், அதேபோல் விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் ரூ.300 கோடி கடன் பெற்றுள்ளது.

    அந்த கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை உணவு விரிவாக்க திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
    • இதன் மூலம் 53 ஆயிரத்து 375 மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் 16 பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சியில் 21 பள்ளிகளிலும் என 37 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2445 மாணவ- மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று ஏற்கனவே முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி நாளை ( வெள்ளிக்கிழமை ) நாகை மாவட்டம் திருக்குவளையில் விரிவுபடுத்தப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதல் -அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

    அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் ,பேரூராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 1111 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சி உடன் சேர்க்கப்பட்டுள்ள சுவாமிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 1112 அரசு தொடக்கப் பள்ளிகளில் 2-ம் கட்டமாக காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 53 ஆயிரத்து 375 மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.

    இந்த திட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்களை கொண்டு அந்தந்த சத்துணவு மையங்களில் காலை உணவு தயார் செய்து வழங்கப்பட உள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆலங்குளம் தொழிலதிபர் டி.பி.வி.வைகுண்டராஜா நேரில் சந்தித்து வணிகர்களின் குறைகளை எடுத்துரைத்தார்.
    • வணிகர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் நீக்கி, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு துணையாக நிற்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கூறினார்.

    ஆலங்குளம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொழிலதிபரும், வியாபாரிகள் சங்கத் தலைவருமான டி.பி.வி.வைகுண்டராஜா நேரில் சந்தித்து வணிகர்களின் குறைகளை எடுத்துரைத்தார். அதன் விவரங்கள் குறித்து வியாபாரிகள் சங்க தலைவர் வைகுண்டராஜா கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வணிகர்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

    இதுகுறித்தும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அத்துமீறல் குறித்தும் முதல்- அமைச்சரிடம் தெரிவித்து ள்ளோம். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறைக்கு சொந்தமான கடை வாடகை விகிதங்கள் குறித்தும், நுகர்வோர் அமைப்பு என்னும் பெயரில் தேவையில்லாமல் வழக்குகள் போட்டு வணிகர்களை அலைக்கழிப்பது பற்றியும் தெரியப்படுத்தினோம்.

    இன்னும் ஒரு மாதத்திற்குள் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தி தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். வணிகர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் நீக்கி, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு துணையாக நிற்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டி மீனவர்கள் நன்றி கூறினர்.
    • மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தொண்டி

    தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக ராமநாதபுர மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்று மண்டபத்தில் நடந்த மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மீனவர்கள் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை உயர்நீதி மன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியி னைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முனைவர் எஸ்டியார் சீனிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் ராமேஸ்வரம் வில்லாயுதம், துணை அமைப்பாளர் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் துணை தலைவர் பால் மாஸ், அமைப்பாளர் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார், ராமநாதபுரம் துணை அமைப்பாளர்கள் மலைச்சாமி, உப்பூர் துரை பாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோரப் பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

    ×