முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தது ஊராட்சி குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் காந்தி நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சந்திரயான்- 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியமைக்காக இஸ்ரோவிற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com