search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழக முதல்வர் குறித்து பேசுவதை புதுவை கவர்னர் நிறுத்த வேண்டும்
    X

    கோப்பு படம்.

    தமிழக முதல்வர் குறித்து பேசுவதை புதுவை கவர்னர் நிறுத்த வேண்டும்

    • கென்னடி எம்.எல்.ஏ. கண்டனம்
    • மத்திய அரசின் சுகாதாரத்துறை 2 நாட்களுக்கு முன்பு முதுநிலை மருத்துவ படிப்பில் தகுதி இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ மாணவர்கள் சேரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க.துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்பில் மருத்துவ மாணவர்கள் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜிய பர்சன்டைல் அடிப்படையில் குறைத்து பணம் வைத்திருக்கும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் தேசிய மருத்துவ கழகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

    தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை யடிக்கின்ற முயற்சிகளுக்கு துணை போகும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தேசிய மருத்துவ கழகம் எடுத்த நடவடிக்கைகளை கண்டிக்கின்ற வகையில் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அதனை கண்டிக்கின்ற வகையில் புதுச்சேரி கவர்னர் தமிழக அரசியலில் மூக்கை நுழைத்து தேவையற்ற சர்ச்சைகளை தொடர்ந்து உருவாக்கி, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணை போவது மிகவும் மோசமான செயலாகும்.

    மருத்துவ படிப்பில் தரத்தை உயர்த்துகிறேன் என்ற போர்வையில் "நீட்"எனும் கொடிய விஷக்கொல்லி மருந்தினை இந்தியா முழுவதும் ஆளும் பா.ஜனதா அரசு 2017 ஆம் ஆண்டில் இருந்து தூவி, பல மாணவர்களை பலிகடா ஆக்கியிருக்கிறது.

    சமீபத்தில் கூட ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறை 2 நாட்களுக்கு முன்பு முதுநிலை மருத்துவ படிப்பில் தகுதி இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ மாணவர்கள் சேரவில்லை.

    இதனால் மருத்துவ முதுநிலை படிப்பில் ஏராளமான காலி இடங்கள் தனியார் கல்லூரிகள் நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்கள் நிரம்பாததால் அந்த தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வண்ணம் கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்து வசதி படைத்தவர் அனைவரும் எந்தவிதமான தகுதி இல்லாமல் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வழிவகை செய்திருக்கிறது.

    இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதேபோல பாஜக கூட்டணி கட்சியான பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் தேசிய மருத்துவ கழகத்தின் இந்த முடிவினை ஒரு வரலாற்றுப் பிழை என்று தெரிவித்திருந்தனர். இவர்களுக்கெல்லாம் பதில் கூறுவதை தவிர்த்து, தமிழக முதல்வர் கூறிய கருத்தை கண்டிக்கின்ற வகையிலே நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் கூறி இருப்பதை தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×