search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் நன்றி"

    • புதிய திட்டங்கள் அறிவிப்புக்கு முதல்-அமைச்சருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
    • மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    தொண்டி

    கடந்த வாரம் ராமநாத புரத்தில் நடந்த மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டுப்போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் 33 படகு களின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொண்டி பகுதி மீனவர்கள் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் மதுரை உயர் நீதி மன்ற கிளையின் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் டாக்டர் சீனிராஜன், ராமேசுவம் வில்லாயுதம் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் பால் மாஸ் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார் ராமநாதபுரம் மலைச்சாமி, உப்பூர் துரைபாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோர பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டி மீனவர்கள் நன்றி கூறினர்.
    • மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தொண்டி

    தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக ராமநாதபுர மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்று மண்டபத்தில் நடந்த மாநாட்டில் ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மீனவர்கள் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை உயர்நீதி மன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியி னைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முனைவர் எஸ்டியார் சீனிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் ராமேஸ்வரம் வில்லாயுதம், துணை அமைப்பாளர் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் துணை தலைவர் பால் மாஸ், அமைப்பாளர் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார், ராமநாதபுரம் துணை அமைப்பாளர்கள் மலைச்சாமி, உப்பூர் துரை பாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோரப் பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

    ×