என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பதவி உயர்வு வழங்கக்கோரி வேளாண்துறை ஊழியர்கள் முதல்-அமைச்சரிடம் மனு
    X

    கோப்பு படம்.

    பதவி உயர்வு வழங்கக்கோரி வேளாண்துறை ஊழியர்கள் முதல்-அமைச்சரிடம் மனு

    • கடந்த 30 ஆண்டாக பதவி உயர்வு இன்றி பணிபுரிந்துவருகின்றனர்.
    • பதவி உயர்வு வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கிராமப்புற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களாக பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    கடந்த 30 ஆண்டாக பதவி உயர்வு இன்றி பணிபுரிந்துவருகின்றனர். பதவி உயர்வு கோரி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேளாண் பட்டதாரி அலுவலர் சங்கத்தினர் வேளாண் இயக்குநரகம் முன்பு கூட்டம் நடத்தினர். சங்கத்தலைவர் சங்கர்தாஸ் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அவர்களிடம் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர்களை முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் அழைத்துச்சென்று கோரிக்கை மனு அளித்தார். அப்போது, வேளாண்துறை பட்டதாரி அலுவலர்களுக்கு துணை இயக்குநர் பதவி உயர்வு வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    வேளாண்துறை செயலரை அழைத்துப் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, பட்டதாரி அலுவலர்கள் பதவி உயர்வுக்கான நடவடிக்கையை சட்டரீதியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×