search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "change"

    • விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சின்னவாடியில் பணிபுரிந்த சின்ன மூப்பன் பட்டிக்கும், பெரிய பேராளி ராம்கார்த்திக்ராஜா முத்துராமன்பட்டிக்கும், கோட்டையூர் சிவகுமார் அல்லம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அப்பையநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் ரோசல்பட்டிக்கும், சிவஞானபுரம் பாண்டிய ராஜன் விருதுநகருக்கும், புளியங்குளம் அருணகிரி கோட்டைபட்டிக்கும், ஏ.புதுப்பட்டி விவேக் கூரைக்குண்டுவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூரைக்குண்டுவில் பணியாற்றிய கருப்பசாமி ஏ.புதுப்பட்டிக்கும், கோட்டையூர் உமா கணேசன் பெரியபேராளிக்கும், விருதுநகர் ராஜூ அப்பையநாயக்கன் பட்டிக்கும், ரோசல்பட்டி சந்திரசேகர் கோட்டையூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சுதா ராணி புளியங்குளத்திற்கும், முத்துராமன்பட்டி ராஜ லட்சுமி சின்னவாடிக்கும், சின்ன மூப்பன்பட்டி செல்வி சிவஞான புரத்துக்கும் என 14 கிராம நிர்வாக அதிகாரிகள் விருதுநகர் தாலுகா அளவில் இட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

    இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    • அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டு உள்ளது
    • நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல்

    பெரம்பலூர்,

    அரியலூர் மாவட்ட மின் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் நிர்வாக காரணங்களுக்காக பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் பிரிவு அலுவலகம் மற்றும் மருதையான் கோவில் பிரிவு அலுவலகம் ஆகியவற்றுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.இதன்படி மருதையான் கோவில் பிரிவு அலுவல கத்துக்கு நகரம், மங்கலம், குறிஞ்சிப்பாடி, ஆதனூர், கரம்பியம், மதுராகுடிக்காடு, பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி ஆகிய கிராமங்களும், கொளக்கா நத்தம் பிரிவு அலுவல கத்துக்கு கீழ் நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர், ஜமீன் பேரையூர், பி.கூத்தூர், பிலிமிசை, கொட்டரை, ராமலிங்கபுரம், ரகலாபாத், ஜமீன் ஆத்தூர், பாலம்பாடி ஆகிய கிராமங்களும் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன.அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றம்எனவே மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தேவைகளுக்கு கொளக்காநத்தம் பிரிவு உதவி மின் பொறியாளர் 9445853665, சிறுவாச்சூ உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் - 9445853645 மற்றும் மருதையான் கோவில் பிரிவு உதவி மின் பொறியாளர் - 9445853686, குன்னம் உபகோட்டம் செயற்ெபாறி யாளர் - 9445853648 ஆகியோைர தொடர்பு கொள்ளலாம் என மின்வாரி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    • மாநகர கமிஷனர் சத்யபிரியா அதிரடி

    திருச்சி, 

    சென்னை வேளச்சேரியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் திருச்சி காந்தி மார்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த பெண் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், திருச்சியில் தங்கி எம்.எஸ்.சி. கணிதம் படித்து வருவதாகவும், இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும், தனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறி இருந்தார். மேலும் மாமன் மகன் மீது கோட்டை அனைத்து மக்களும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது தனது செல்போனை விசாரணைக்காக அங்குள்ள அதிகாரி வாங்கி வைத்துக் கொண்டதாகவும்,மீண்டும் அந்த வழக்கு தொடர்பாக மாநகர துணை போலீஸ் கமிஷனரை சந்திக்க சென்றபோது காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை கூறினார். வேறு சில போலீசாரும் அவருக்கு உடந்தையாக இருப்பதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை மாநகர போலீஸ் கமிஷனர் சத்ய பிரியா எடுத்துள்ளார்.பாலியல் புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பது காவல்து றை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு,
    • 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.

    தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சங்ககிரி ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். 4 மற்றும் 5-ந் தேதிகளில், சங்ககிரி ரவுண்டானாவில் இருந்து வேலூர் மற்றும் ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேலம் ரோடு, மலை சுத்தி ரோடு, வாலரைகேட் வழியாக செல்ல வேண்டும். வாலரை கேட்டிலிருந்து நாமக்கல், சேலம், சங்ககிரி செல்லும் வானங்கள் மலைசுத்திரோடு வழியாக செல்ல வேண்டும்.

    தேர் திருவிழாவின் போது நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருச்செங்கோடு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பழமை வாய்ந்த திருத்தேரின் நன்மையைக் கருதி, பக்தர்கள் தேரின் மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியவில்லை.

    எனவே பக்தர்கள் அனைத்து பூஜைகளையும், திருத்தேரின் முன்பாக செய்து, சாமி தரிசனம் செய்து அருள்பெருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பெங்களூரு ரெயில் நிலையத்தில் புதிய சரக்கு ெரயில் முனையம் அமைக்கும் பணி நடப்பதால் உதய், இன்டர்சிட்டி ரெயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
    • மறுமார்க்கமாக 29, 30, 31-ந் தேதி பெங்களூருவுக்கு பதில் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.

    திருப்பூர்:

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் புதிய சரக்கு ெரயில் முனையம் அமைக்கும் பணி நடப்பதால் உதய், இன்டர்சிட்டி ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.அறிவிப்பின்படி எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) இன்று, நாளை 29 மற்றும் 30ந்தேதி ஆகிய 3நாட்கள் சேலம் வரை மட்டும் இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர், பெங்களூரு ெரயில் நிலையங்களுக்கு செல்லாது. மறுமார்க்கமாக 29, 30, 31-ந் தேதி பெங்களூருவுக்கு பதில் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.

    கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) கிருஷ்ணராஜபுரம் வரை மட்டும் இயக்கப்படும்.பெங்களூரு செல்லாது. வருகிற 31-ந் தேதி, கோவை - லோகமான்யதிலக் (மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் (எண்:11014) தர்மபுரி, ஓசூர், பெங்களூரு நிலையங்களுக்கு பதில், திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக ஏலங்கா நிலையம் செல்லும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இஞ்சி கிலோ ரூ.175 ஆக உயர்ந்தது
    • பருவம் தவறிய மழையால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் விலை நிர்ணயம் நிலையற்ற தன்மையில் இருந்தது

    திருச்சி,

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தினமும் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பத்தின் தாக்கம் உயர்ந்தது. இதற்கிடையே கீழடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தது. இதனால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் சந்தையில் நாட்டு காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக மழையினால் காய்கறிகள் வரத்து குறைந்து சில்லரை விலையில் மாற்றம் ஏற்பட்டது. கனமழை காரணமாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் உருவானது.தொடர்ந்து மழை பெய்து வருவதால், இஞ்சி, கொத்தமல்லி தழைகள் சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் சில்லறை விலையில் நாள்தோறும் மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலான காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயராத நிலையில், விலை வீழ்ச்சி அடைந்தது. கத்தரிக்காய், முள்ளங்கி, முள்ளங்கி, பாகற்காய் போன்றவைகளின் சில்லறை விலை உறுதியற்ற தன்மையில் நீட்டித்து வருகிறது.

    வெங்காயம், தக்காளி விலை தவிர மற்ற காய்கறிகளின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.மலை, காவல்காரன்பட்டி, தோகைமலை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் நாட்டு காய்கறிகள் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் அளவையும், விற்பனை விலையையும் மழையே தீர்மானிக்கிறது. வரத்து சாதாரணமாக இருந்தால், விலை நியாயமானதாக இருக்கும் என்று காய்கறி வியாபாரி கலைவாணன் தெரிவித்தார்.இருப்பினும், வியாபாரிகளுக்கு தேவையான அளவு காய்கறிகள் கிடைக்கவில்லை என்றால், விலை தானாகவே அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், மழையின் போது பூக்கள் உதிர்ந்து உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயரும் என்றும் கலைவாணன் கூறினார்.மேலும் தேனி, ஊட்டி, கொடைக்கானல், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் இஞ்சி, மழையால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 60 கிலோ எடையுள்ள இஞ்சியின் விலை பொதுவாக 79,000-க்கு விற்கப்படும். ஆனால் தொடர் மழையால் தற்போது ஒரு மூட்டைக்கு ரூ.10,500 ஆக அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ 150 ஆக இருந்த இஞ்சி விலை நேற்று ரூ.175-க்கு விற்கப்பட்டது.

    • பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.
    • கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    நீண்ட தூரம் பயணிக்க கூடிய அகல்யாநகரி, ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், பயணிகள் பாதுகாப்பு கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி , நிஜாமுதீனுக்கு ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (எண்:12643) வாராந்திர சிறப்பு ெரயிலாக இயக்கப்படுகிறது.கொச்சுவேலி ெரயிலில் வருகிற செப்டம்பர் 9ம் தேதி முதலும், நிஜாமுதீன் ெரயிலில் செப்டம்பர் 5-ந்தேதி முதலும் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    இது குறித்து ெரயில்வே பொறியியல் பிரிவினர் கூறியதாவது:-

    அகல்யா நகரி, ஸ்வர்ண ஜெயந்தி ெரயில்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடிய ெரயில்களின் பட்டியலில் உள்ளதால் பாதுகாப்பு, பயணிகள் சவுகரியம் கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.நவீன தொழில்நுட்பத்தை கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளை பொருத்துவதால் அதிவேகத்தில் ெரயில்கள் பயணிக்கும் போதும் அதிர்வுகள் பெரிய அளவில் உணரப்படாது. கூடுதல் இடவசதி, பயோடாய்லெட் வசதி கொண்ட இப்பெட்டிகள் விபத்தின் போது எளிதில் கவிழாத வகையில் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    கோவை- மங்களூர் இடையே இயக்கப்படும் ெரயில், பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி கோவை - மங்களூர் (22610) ெரயில், காலை 6 மணிக்கு புறப்படுகிறது. பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.

    அதே போல், கோவை - மங்களூர் (16323) ெரயில், கோவையிலிருந்து காலை 7:50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 18-ந் தேதி சர்வாத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    அரக்கோணம்- காட்பாடி ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ெரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ெரயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ெரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

    கோவை சந்திப்பு - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12680), கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். அதே போன்று சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் இருந்து கோவை சந்திப்பு வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12679) காட்பாடியில் இருந்து தான், கோவை புறப்படும்.இந்த மாற்றம் நாளை 9 மற்றும் 10 -ந்தேதிகளில் அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
    • சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    வீரபாண்டி:

    திருப்பூா் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தில் இருந்து காளிகுமாரசாமி கோவிலுக்கு செல்லும் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.இந்தத் சாலையானது தாராபுரம் சாலைக்கு சென்றடைவதால் வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது.

    காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனா். மேலும் பகல் நேரங்களில் சாலையோரம் அமா்ந்து மது அருந்துவதால் இந்த சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண் 16159) ஏப்ரல் 27, 29-ந் தேதிகளில் திருச்சி கோட்டை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் வழியாக செல்வதற்கு பதிலாக திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக செல்லும்.

    ஜார்கண்ட் மாநிலம் ,தன்பாத்திலிருந்து கேரளத்தின் ஆலப்புழா செல்லும் விரைவு (ரெயில் வண்டி எண் 13351) ஏப்ரல் 26, 28 தேதிகளில் ஈரோடு, திருப்பூர், கோவை, வழியாக செல்வதற்கு பதிலாக சேலம், நாமக்கல், கருவூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.

    ஈரோடு- பாலக்காடு நகரம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் ( வண்டி எண்கள் : 06818/06819) ஏப்ரல் 28 , 30-ந் தேதிகளில் கோவையுடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்ேபால மதுரை சென்றடையும்.

    கண்ணூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு ரெயில் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16608/16607) ஏப்ரல் 28, 30 -ந் தேதிகளில் போத்த னூருடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து பிற்பகல் 2.34 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல கண்ணூர் சென்றடையும்.

    கேரள மாநிலம் சொரனூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் (வண்டி எண்கள் 06804/06805) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல சொரனூர் சென்றடையும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
    • செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது.இதனை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைப் படித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • கோனியம்மன் கோவில் தேரோட்டம்
    • போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆணடுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    தேர் முகூர்த்தக்கால் நடும் விழா கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் திருவிழா தொடங்கியது.

    20-ந் தேதி கிராம சாந்தி, 21-ந் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீரூற்றி வழிபட்டு வருகின்றனர்.

    திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகன திருவீதி உலா நடந்தது.

    இன்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. பிற்பகல் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜ வீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். மார்ச் 3-ல் தெப்பத்திருவிழாவும், 4-ந் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.

    மார்ச் 6-ந் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் கோனியம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி.

    செட்டி வீதி, சலிவன் வீதிக ளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

    வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்து மாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம்.

    மருதமலை தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மருதமலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.

    கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப் பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை.

    இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், நான்கு சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

    • திருச்சி டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்
    • ஆபாச பட விவகாரத்தில் சிக்கியவர்

    திருச்சி

    திருச்சி சரக காவல்துறையினருக்கு என தனி வாட்ஸ் அப் குரூப் செயல்பட்டு வருகிறது. இதில் காவல்துறை தொடர்பான செய்திகள் படங்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தக் குழுவில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருடன்,

    ஜீயபுரம் டி.எஸ்.பி. யாக பணியாற்றி வரும் பர வாசுதேவன் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டது. இதை கண்ட காவலர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த குழுவில் இணைந்திருக்கும் பெண் காவலர்கள் பலரும் டிஜிபிக்கு புகார்களை அனுப்பினர். இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து இது குறித்த விசாரணை அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    மேலும் டிஎஸ்பி பரவாசு தேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தர விட்டுள்ளார். டிஎஸ்பி பரவாசுதேவன் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் ஜீயபுரம் டிஎஸ்பிஆக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.

    ×