search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    X

    போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    • இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    • மாநகர கமிஷனர் சத்யபிரியா அதிரடி

    திருச்சி,

    சென்னை வேளச்சேரியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் திருச்சி காந்தி மார்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த பெண் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், திருச்சியில் தங்கி எம்.எஸ்.சி. கணிதம் படித்து வருவதாகவும், இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும், தனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறி இருந்தார். மேலும் மாமன் மகன் மீது கோட்டை அனைத்து மக்களும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது தனது செல்போனை விசாரணைக்காக அங்குள்ள அதிகாரி வாங்கி வைத்துக் கொண்டதாகவும்,மீண்டும் அந்த வழக்கு தொடர்பாக மாநகர துணை போலீஸ் கமிஷனரை சந்திக்க சென்றபோது காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை கூறினார். வேறு சில போலீசாரும் அவருக்கு உடந்தையாக இருப்பதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை மாநகர போலீஸ் கமிஷனர் சத்ய பிரியா எடுத்துள்ளார்.பாலியல் புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பது காவல்து றை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×