search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மின் கோட்ட இணைப்பில்  இருந்த கிராமங்கள்  பெரம்பலூருக்கு மாற்றம்
    X

    அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றம்

    • அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டு உள்ளது
    • நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல்

    பெரம்பலூர்,

    அரியலூர் மாவட்ட மின் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் நிர்வாக காரணங்களுக்காக பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் பிரிவு அலுவலகம் மற்றும் மருதையான் கோவில் பிரிவு அலுவலகம் ஆகியவற்றுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.இதன்படி மருதையான் கோவில் பிரிவு அலுவல கத்துக்கு நகரம், மங்கலம், குறிஞ்சிப்பாடி, ஆதனூர், கரம்பியம், மதுராகுடிக்காடு, பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி ஆகிய கிராமங்களும், கொளக்கா நத்தம் பிரிவு அலுவல கத்துக்கு கீழ் நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர், ஜமீன் பேரையூர், பி.கூத்தூர், பிலிமிசை, கொட்டரை, ராமலிங்கபுரம், ரகலாபாத், ஜமீன் ஆத்தூர், பாலம்பாடி ஆகிய கிராமங்களும் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன.அரியலூர் மின் கோட்ட இணைப்பில் இருந்த கிராமங்கள் பெரம்பலூருக்கு மாற்றம்எனவே மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தேவைகளுக்கு கொளக்காநத்தம் பிரிவு உதவி மின் பொறியாளர் 9445853665, சிறுவாச்சூ உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் - 9445853645 மற்றும் மருதையான் கோவில் பிரிவு உதவி மின் பொறியாளர் - 9445853686, குன்னம் உபகோட்டம் செயற்ெபாறி யாளர் - 9445853648 ஆகியோைர தொடர்பு கொள்ளலாம் என மின்வாரி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×