search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Centre"

    கார்பரேட் அமைச்சக அதிகாரி தற்கொலை விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Bansal #Suicide #SupremeCourt
    புதுடெல்லி:

    மத்திய அரசின் கார்பரேட் நலத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த டெல்லியை சேர்ந்த பன்சால் (வயது 60) என்பவர், மருந்து நிறுவனம் ஒன்றில் இருந்து லஞ்சம் பெற்றதாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.



    இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாக கூறி பன்சாலின் மனைவியும், மகளும் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பன்சாலும், தனது மகனுடன் அதே ஆண்டு செப்டம்பரில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கும் சி.பி.ஐ.தான் காரணம் என அவரும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை, கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

    முடிவில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Bansal #Suicide #SupremeCourt
    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம் வகுக்க மத்திய துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும், அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்தும், அணை உடைந்தால் அது தொடர்பான இழப்பீட்டை எந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    இதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.

    இதில் மத்திய பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்துறை, தொலைதொடர்பு துறை, வேளாண்மை துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக, கேரள அரசு அதிகாரிகள் இடம்பெற்றனர்.

    இந்த துணைக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுரை முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியம் ஆகியோரும், கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்படும் அமைப்பிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CauveryIussue #CauveryDraftScheme #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது.  குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய நீதிமன்றம், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.



    அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் இன்று 2 பக்க அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

    இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #CauveryIussue #CauveryDraftScheme #CauveryManagementAuthority
    காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:



    * காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

    * காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

    * அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

    * முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் இன்று வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரியில் ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழ் நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு “ஸ்கீம்” தயாரித்து தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    ஆனால் ஸ்கீம் என்பது எதை குறிக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உருவானது.

    ஸ்கீம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பது காவிரி மேலாண்மை வாரியத்தை குறிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஸ்கீம் என்பதற்கு வாரியம் அமைக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்று தெரிவித்தது.

    இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்று தமிழ்நாடு-கர்நாடகாவில் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிரமாக பிரசாரம் நடந்ததால் மத்திய அரசு தனது முடிவை அறிவிப்பதில் தாமதம் செய்தது.

    சுப்ரீம்கோர்ட்டில் அடுத்தடுத்து 3 தடவை மத்திய அரசு மனு செய்து கால அவகாசம் பெற்றது. கடைசியாக கடந்த 8-ந்தேதி காவிரி நதிநீர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிபதிகள் மிகவும் கண்டிப்பான உத்தரவு ஒன்றை வெளியிட்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “14-ந்தேதி கண்டிப்பாக காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம் மத்திய நீர்வளத் துறை செயலாளர் அவசியம் கோர்ட்டுக்கு வர வேண்டும். இந்த வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் எதையும் பெற தேவை இல்லை” என்று கூறி இருந்தனர்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 11 மணிக்கெல்லாம் இதில் விடை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 வழக்குகளுக்கு பிறகு காவிரி வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    இதனால் சற்று தாமதமாக காவிரி வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார்.

    அவர் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். சீலிடப்பட்ட கவரில் வைத்து அந்த வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அதில் மத்திய அரசு என்ன கூறி இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அதில் வழிவகை செய்துள்ளதா? அல்லது ஆணையம் அமைக்க கூறி உள்ளதா? அல்லது குழு ஒன்று அமைக்க பரிந்துரை செய்து உள்ளதா? என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சில விளக்கங்கள் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்ள 10 பேர் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அந்த அமைப்பில் மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இடம் பெறுவார்.

    அந்த அமைப்பில் ஒரு தலைவர், ஒரு நிரந்தர உறுப்பினர். 2 பகுதி நேர உறுப்பினர்கள், 2 முழு நேர உறுப்பினர்கள், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

    அந்த அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கும் வகையில் செய்யலாம்.

    இந்த அமைப்பானது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவைகளையும் இந்த அமைப்பு அமல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

    காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்வதற்கு வாரியம் அல்லது அமைப்பு எதுவாக இருந்தாலும் அது சுமூகமாக செயல்பட வேண்டியது முக்கியம் ஆகும். அதை 10 பேர் கொண்ட குழு செய்யும்.

    இந்த 10 பேர் குழுவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகள் 40 சதவீத சம்பளம் வழங்க வேண்டும். கேரளா அரசு 15 சதவீதமும், புதுச்சேரி மாநில அரசு 5 சதவீதமும் சம்பளம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளன.



    காவிரி வரைவு திட்டம் தாக்கல் மற்றும் மத்திய அரசின் விளக்கத்தை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு திருப்தி அடைந்துள்ளது. மத்திய அரசு சீல் வைத்து கொடுத்துள்ள கவரில் உள்ள தகவல்களை 2 நாட்களில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

    அதன் பிறகு நீதிபதிகள் தங்களது முடிவுகளை வெளியிடுவார்கள். அதற்கு வசதியாக இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (16-ந்தேதிக்கு) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    அன்றைய தினம் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அந்த அமைப்புக்கு காவிரி நீர் திறப்பு உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது.

    எனவே காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் அதற்கு இணையான ஒரு நிர்வாகத்தை அமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு உருவாக்கி இருப்பதால் உரிய பலன்கள் கிடைக்கும் தெரிகிறது. #CauveryMangementBoard #CauveryDraftScheme 
    சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் ஆகும் காவிரி வரைவு செயல்திட்டத்தில் தங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக விவசாயிகள் காத்து இருக்கிறார்கள். #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் வரைவு செயல்திட்டம் (‘ஸ்கீம்’) ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி, மார்ச் 29-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்க வேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது.

    இந்த வழக்கு கடந்த 7-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரி புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தது.

    8-ந் தேதி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிரதமரும், மற்ற மந்திரிகளும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் மந்திரிசபை கூட்டம் நடைபெறவில்லை என்றும், மந்திரிசபை கூட்டத்தில் வரைவு செயல்திட்டத்துக்கு ஒப்புதலை பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் தேவை என்றும் கூறினார்.

    இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் அதை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றும், மீண்டும் காலதாமதம் செய்தால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி, வரைவு செயல் திட்டத்தை 14-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    அதன்படி, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    வரைவு செயல்திட்டம் தயாராகி விட்டதாகவும், 14-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், மேலும் கால அவகாசம் கேட்கப்படமாட்டாது என்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி அவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்கிறார்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால், மத்திய அரசுக்கு இருந்து வந்த நெருக்கடி தீர்ந்தது. எனவே, மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்காமல் வரைவு செயல்திட்டத்தை இன்று தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது. அதில் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்த விரிவான அம்சங்கள் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று தீர்ப்பு கூறியதோடு, எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதையும் நிர்ணயித்து இருக்கிறது.

    ஆனால் கடந்த காலங்களில் நடுவர் மன்ற தீர்ப்பின் படியோ, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியோ கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது இல்லை. காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கு ஏற்கனவே 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த 177.25 டி.எம்.சி. தண்ணீரும் முறைப்படி ஒழுங்காக கிடைப்பது வரைவு செயல் திட்டத்தை பொறுத்தே அமையும். எனவே வரைவு செயல் திட்டத்தின் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்போடு தமிழக விவசாயிகள் காத்து இருக்கிறார்கள். #CauveryMangementBoard #CauveryDraftScheme
    லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான ஆவணங்கள் எங்கே? என மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். #LalBahadurShastri #Death #Records
    புதுடெல்லி:

    இந்தியாவின் 2-வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ம் ஆண்டு அப்போதைய சோவியத் ரஷியாவுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள தாஷ்கண்ட் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். பாகிஸ்தானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட சில மணி நேரங்களில் இந்த சோகம் நிகழ்ந்தது.

    லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 1977-ல் ராஜ் நரேன் கமிட்டி அமைக்கப்பட்டது. ஜனதா கட்சியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை.

    இந்த அறிக்கை தொடர்பான ஆவணங்கள் எங்கே? என மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், நரேன் கமிட்டி அறிக்கை தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளார்.

    தங்களுக்கு பிரியமான தலைவரின் மரணத்துக்கு பின்னால் உள்ள உண்மைகளை அறிய மக்கள் விரும்புவதாக ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.  #LalBahadurShastri #Death #Records
    உச்ச நீதிமன்றத்தில் 14-ம் தேதி காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார். #CauveryIssue #SupremeCourt #DraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளதால் மே14-ம் தேதி மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், கூடுதல் அவகாசம் கேட்கலாம் என்றும் பேசப்பட்டது.

    ஆனால், 14ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது மேற்கொண்டு அவகாசம் கேட்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். #CauveryIssue #SupremeCourt #DraftScheme

    ×