search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் அணைகள் இருக்கும் - மத்திய அரசு
    X

    மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் அணைகள் இருக்கும் - மத்திய அரசு

    காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:



    * காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

    * காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

    * அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

    * முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    Next Story
    ×