search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court Notice"

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரம் பேசியது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ChiefJusticeRanjanGogoi
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் செக்ஸ் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது.



    இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வக்கீல் ஒரு பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அவர், “தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் அதிர்ச்சியைத் தருகிறது. புகார் கூறியவர் தரப்பில் நான் ஆஜராக விரும்பினேன். ஆனால் வழக்கு தொடர்பாக அஜய் என்பவர் என்னிடம் வந்து தெரிவித்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. உடனே புகார் கூறியவரை (பெண்ணை) சந்திக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு அஜய் சம்மதிக்கவில்லை. நான் திட்டவட்டமாக மறுத்தேன். உடனே தலைமை நீதிபதி மீது வழக்கு போட ரூ.50 லட்சம் லஞ்சம் தர முன்வந்தார். பின்னர் அந்த தொகையை ரூ.1½ கோடி அளவுக்கு உயர்த்தினார். உடனே நான் அவரை வெளியே போகுமாறு கூறி விட்டேன்.

    தலைமை நீதிபதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது. இது குறித்து விசாரிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.இதை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக நாளை (இன்று) வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் நேரில் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.  #SupremeCourt #ChiefJusticeRanjanGogoi
    வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒப்புகை சீட்டை எண்ணி சரிபார்க்க கோரி மனு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ElectionCommission #VVPAT
    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தோடு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு எந்திரம் சில வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம், முறைகேடுகளை தவிர்க்க வழிவகை செய்கிறது.



    எனவே இந்த ஒப்புகை சீட்டு எந்திரத்தை குறைந்தது 30 சதவீத அளவுக்காவது பயன்படுத்த வேண்டும். மேலும் அதில் பதிவாகும் ஒப்புகை சீட்டையும் எண்ணி வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளோடு சரிபார்க்க வேண்டும். குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் இந்த ஒப்புகை சீட்டுகளை கைகளால் எண்ண வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வழிமுறைகளை வகுத்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் 4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #ElectionCommission #VVPAT
    கார்பரேட் அமைச்சக அதிகாரி தற்கொலை விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Bansal #Suicide #SupremeCourt
    புதுடெல்லி:

    மத்திய அரசின் கார்பரேட் நலத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த டெல்லியை சேர்ந்த பன்சால் (வயது 60) என்பவர், மருந்து நிறுவனம் ஒன்றில் இருந்து லஞ்சம் பெற்றதாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.



    இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாக கூறி பன்சாலின் மனைவியும், மகளும் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பன்சாலும், தனது மகனுடன் அதே ஆண்டு செப்டம்பரில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கும் சி.பி.ஐ.தான் காரணம் என அவரும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை, கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

    முடிவில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Bansal #Suicide #SupremeCourt
    ×