என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cell phone tower"
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள கரிகலவாக்கம் கிராமத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 பேட்டரிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.
இந்த நிலையில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியது அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கிருஷ்ணராஜ், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி கமலா நகரை சேர்ந்த மணிகண்டன், புதுக்கோட்டை மாவட்டம் கொரும்பட்டி கிராமம் நல்லுசாமி, அரும்பாக்கம், என்.ஜி.ஓ. காலனி ஷேக்தா வூத், அசோக்நகர் 11-வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் என்பது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பேட்டரிகளை கைப்பற்றினர். மேலும் திருட்டுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 5 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள பழையகோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேற்று வந்தனர்.
இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் செல்போன் கோபுரங்கள் அமைக்கக்கூடாதென உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டத்திற்கும், நீதிமன்ற தீர்ப்பிற்கு புறம்பாகவும் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதி குடியிருப்புகள், பள்ளி, கோவில்கள் போன்றவை சுற்றியுள்ள பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையான நோய்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். நிலத்தடிநீர் குறையும் என்பது போன்ற பலவகையில் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே பொதுமக்கள் உயிர் பாதுகாப்பிற்காகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க இங்கு செல்போன் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்று மனு அளிக்கவந்ததாக தெரிவித்தனர். பின்னர் தங்கள் மனுவை கோட்டாட்சியர் லியாகத்திடம் அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அவர்கள் நகராட்சி பொறியாளர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இதேபோல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.
நாகையை அடுத்த கீழ்வேளூர் அருகே வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் திலகர் (வயது 32). ம.தி.மு.க. தொண்டர்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் திலகர் ஏறினார். அப்போது கையில் ம.தி.மு.க. கொடியுடன் ஏறி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். பின்னர் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மிரட்டினார்.
இதை பார்த்து இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கீழ்வேளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கு செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த திலகரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்தார். இங்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வந்து தனது கோரிக்கையை ஏற்றால்தான் கீழே இறங்குவேன். டவரில் ஏறி தன்னை பிடிக்க வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று கூறினார்.
இதனால் போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து சென்றனர். இன்று காலை 9 மணிவரையிலும் திலகர் கீழே இறங்காமல் தொடர்ந்து 5 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகிறார்.
தஞ்சை கரந்தை வடவாறு பாலம் அருகே நேற்றுமாலை தமிழ் தேச மக்கள் முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் அருண்சோரி தலைமை தாங்கினார்.
சாலை மறியல் போராட்டம் பற்றி அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேலு தலைமையில் அதிரடி படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது வடவாறு பாலம் அருகே நின்று கொண்டிருந்த 5 இளைஞர்கள் அரசு பஸ்சுக்கு அடியில் படுத்து கொண்டனர். இவர்களை வெளியே வர கூறி அதிரடிபடையினர் வலியுறுத்தினர்.
ஆனால் அவர்கள் பஸ்சுக்கு அடியில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டனர். இதனால் அவர்களை அதிரடிப்படையினர் தரதரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரியும், நேற்று பாபநாசத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.
பாபநாசம் கோர்ட்டு முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கர், தலைமையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜெயக்குமார், வக்கீல்கள் சிவசாமி, சதீஷ், சுரேஷ், கண்ணன், சிவக்குமார், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் அம்பிகா பதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டவரில் செல்போன் சிக்னலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சக்தி வாய்ந்த 15 பேட்டரிகள் திடீரென காணவில்லை. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.
இதுதொடர்பாக அங்கிருந்த பாதுகாவலர் ரவிச்சந்திரன் மேலவளவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 52), ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த செல்வமூர்த்தி (17) ஆகியோர் இந்த பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்