search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "battery theft"

    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமம் அண்ணாநக ரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31), லாரி உரிமையாளர். இவர் கடந்த 26-ந் தேதி 2 லாரிகளை கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் அருகில் நிறுத்திவிட்டு சென்றார்.

    மறுநாள் வந்து பார்த்தபோது லாரிகளில் இருந்த பெரிய பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தணிகை வேல் மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சேத்துப்பட்டு தாலுகா, மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (30), சிவா (29) ஆகியோர் பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பேட்டரிகள் திருடுவதற்காக பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில் தனியார் நிறுவன ஏ.டி.எம். 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பண்ருட்டி யூனியன் அலுவலகம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் ஏ.டி.எம். இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம். நேற்று இரவு இருண்டு கிடந்தது. இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். இன்று காலை தனியார் நிறுவன ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறமுள்ள கதவை திறக்க முடியவில்லை. அதில் ஏற்கனவே இருந்த பூட்டிற்கு பதிலாக வேறு ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    அந்த அறையில் இருந்த இன்வெட்டர், பேட்டரி போன்ற மின் சாதனப் பொருட்களை காணவில்லை. இதனால் மின் விநியோகம் தடைபடும் போது ஏ.டி.எம்.ல் இருள் சூழ்ந்து பணிசெய்யாமல் போனதை கண்டறிந்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம். கொள்ளை யர்களின் கைவரிசையா? அல்லது பேட்டரி திருடர்கள் இதனை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர்.
    • பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டு க்கூடலூரை சேர்ந்தவர் முருகவேல். விவசாயி. நேற்று இவரது வீட்டில் நிறுத்தப் பட்டிந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர். இதை பார்த்த முருகவேல் மற்றும் கிராம மக்கள் பேட்டரி திருடர்களை மடக்கிபிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

    முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பயிற்சி) ராஜாராம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வடலூர் அடுத்த ராஜாகுப்பம் வடக்கு தெரு தட்சணா மூர்த்தி (வயது 22), கருங்குழி மாரியம்மன் கோவில் தெரு விஜயராகவன் (22) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து இவர்களிடமிருந்து பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல் அருகே பேட்டரி திருட்டில் கைதான மாணவன் வீட்டில் குவியல் குவியலாக வெடி பொருட்கள் கிடைத்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள கருணாநிதி நகரில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ஒரு காரின் பேட்டரியை சிறுவர்கள் சிலர் திருட முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    ஒருவரை மட்டும் பிடித்து சின்னாளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் என்றும் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவர் என்பதும் தெரிய வந்தது.

    போலீசார் விசாரணையில் அந்த மாணவன் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. திருடிய பொருட்கள் அனைத்தையும் தனது அக்காள் வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக மாணவன் தெரிவித்தார். இதனையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு பேட்டரி உதிரி பாகங்கள், கரி மருந்து, திரி என ஏராளமான வெடி பொருட்கள் குவியல் குவியலாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தன்னுடன் சேர்ந்து மேலும் சில மாணவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை திண்டுக்கல் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஜஸ்டின் பிரபாகரன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர்.

    சோதனையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் கோவில் விழா மற்றும் திருவிழா காலங்களில் வெடிக்க பயன்படுத்தக்கூடியவை என தெரிய வந்தது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும் புறநகர் பகுதிக்கு கொண்டு சென்று அளித்தனர்.

    பிடிபட்ட 4 மாணவர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பின்புலமாக வேறு யாரேனும் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். ஏனெனில் பணத்துக்காக திருட்டு தொழிலில் ஈடுபடும் மாணவர்கள் வெடி பொருட்களை திருடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இவர்களை இயக்குவது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெங்கல் அருகே செல்போன் டவரில் பேட்டரி திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள கரிகலவாக்கம் கிராமத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 பேட்டரிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

    இந்த நிலையில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியது அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கிருஷ்ணராஜ், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி கமலா நகரை சேர்ந்த மணிகண்டன், புதுக்கோட்டை மாவட்டம் கொரும்பட்டி கிராமம் நல்லுசாமி, அரும்பாக்கம், என்.ஜி.ஓ. காலனி ஷேக்தா வூத், அசோக்நகர் 11-வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பேட்டரிகளை கைப்பற்றினர். மேலும் திருட்டுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 5 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வண்ணாரப்பேட்டை, ராயபுரத்தில் ஏடிஎம் மையங்களில் பேட்டரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    ராயபுரம், ஆக. 10-

    வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதியில் கடந்த 2-ந்தேதி 2 ஏ.டி.எம். மையங்களில் பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக ராயபுரம், செட்டித்தோட்டம், பகுதியை சேர்ந்த ரமேஷ், விவேக் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து பேட்டரிகள், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×