search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM battery theft"

    • இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
    • பொதுமக்கள் பேட்டரி திருடியவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் நால்ரோட்டில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று பயணிகள் ஆட்டோவில் 3 ஆசாமிகள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41), திருப்பூர் சத்யாநகரை சேர்ந்த ஹக்கீம் (34), மங்கலம் சாலையை சேர்ந்த முகமது யூசுப் (31) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பேட்டரிகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்–த–னர்.

    வண்ணாரப்பேட்டை, ராயபுரத்தில் ஏடிஎம் மையங்களில் பேட்டரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    ராயபுரம், ஆக. 10-

    வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதியில் கடந்த 2-ந்தேதி 2 ஏ.டி.எம். மையங்களில் பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக ராயபுரம், செட்டித்தோட்டம், பகுதியை சேர்ந்த ரமேஷ், விவேக் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து பேட்டரிகள், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×