search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் செல்போன் டவரில் பேட்டரிகள் திருட்டு - 2 பேர் கைது
    X

    மதுரையில் செல்போன் டவரில் பேட்டரிகள் திருட்டு - 2 பேர் கைது

    மதுரையில் செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த டவரில் செல்போன் சிக்னலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சக்தி வாய்ந்த 15 பேட்டரிகள் திடீரென காணவில்லை. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.

    இதுதொடர்பாக அங்கிருந்த பாதுகாவலர் ரவிச்சந்திரன் மேலவளவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 52), ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த செல்வமூர்த்தி (17) ஆகியோர் இந்த பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×