search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CCV"

    செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அரவிந்த் சாமி, மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார். 

    அதன்பின் அரவிந்த் சாமி பேசும்போது, நான் மணி ரத்னத்தின் 6 படங்களில் நடித்திருக்கிறேன். இருவர் படத்தில் பாடி இருக்கிறேன். உயிரே படத்தில் ஷாருக்கானுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறேன். மொத்தம் 8 படங்களில் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய எல்லா படத்தில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். மேலும் அவர் இயக்கிய மற்ற 12 படங்களில் என்னை ஏன் நடிக்க வைக்க வில்லை என்றும் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

    அதிதி ராவ் பேசும்போது, காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் லக்கி. அரவிந்த்சாமியுடன் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம்’ என்றார்.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படம், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றுள்ளார் என்று ஏ.ஆர்.ரகுமான் பேசியிருக்கிறார். #CCV #ARRahman ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.

    அதன் பிறகு பேசிய அவர், இந்தப் படம் மணிரத்னம் சார், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றிருக்கிறார் என்று பேசினார்.
    சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் சேலத்தில் பேட்டியளித்துள்ளார். #TRajendar #Simbu
    சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்நிலையில், ‘அரசன்’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்து, நடிக்காமல் இருக்கிறார் என்று பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.



    இதுகுறித்து சிம்புவின் அப்பாவும், நடிகரும் லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் கூறும்போது, ‘சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் அப்பீல் செய்து சட்டப்படி நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    அடுத்ததாக படத்தின் இசை வருகிற 5-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை கச்சேரியும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    படத்தில் சேநாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மாபெரும் தொழிலதிபராக வருகிறார். அவரது மூன்று மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகிய மூன்று பேரும் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர். மறுமுனையில் போலீஸ் அதிகாரியான விஜய் சேதுபதி, தனது நண்பனான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாக தெரிகிறது. 

    மொத்தத்தில் உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே, அப்போ யுத்தம் தான் உள்ளிட்ட காரசாரமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்பு ஜோடியாக டயானா எரப்பாவும் வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கவிடும் பின்னணி இசையுடன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் டிரைலர்  படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் கூட்டியுள்ளது. படம் செப்டம்பர் 28-ஆம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam

    செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர்:

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
    காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    முன்னதாக படத்தில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும், அவர்களது ஜோடிகளையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வந்தது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

    தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #ChekkaChivanthaVaanam #CCV

    ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள நான்கு நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தில் பெயர் வெளியாகிய நிலையில், அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அதன்படி அரவிந்த்சாமி வரதன் என்ற கதாபாத்திரத்திலும், அருண் விஜய் தியாகு என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ரசூல் என்ற கதாபாத்திரத்திலும், சிம்பு எதி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    இந்த நிலையில், படத்தின் போஸ்டர் நாளை காலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV
    செக்கச்சிவந்த வானம், மாநாடு படத்தை அடுத்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குவது யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #STR #Simbu
    சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுடன், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பல செய்திகள் வந்தது. இதையடுத்து சிம்பு அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.



    திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அட்டரின்டிகி தரேதி' என்ற படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வரதன் முதல் பார்வை நேற்று வந்த நிலையில், இன்று தியாகு வெளியாகி இருக்கிறது. #ChekkaChivanthaVaanam #CCV
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் 4 நட்சத்திரங்களின் 4 முதற்பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.

    ஆனால், அரவிந்த்சாமியின் கதாபாத்திரமான வரதன் முதல் பார்வை மற்றும் வெளியானது. இன்று அருண் விஜய்யின் தியாகு கதாபாத்திரன் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது. நாளை விஜய் சேதுபதி அல்லது சிம்பு கதாபாத்திரத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV
    ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நட்சத்திரங்களின் முதல்பார்வை போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் 4 நட்சத்திரங்களின் 4 முதற்பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV

    பிரபல இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Maniratnam
    பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இறுதியாக ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி நாயகனாகவும், அதிதி ராவ் நாயகியாகவும் நடித்திருந்திருந்தார்கள்.

    இப்படத்தை அடுத்து தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வந்தது. ஆனால், அது வதந்தி என்றும், சாதாரண உடல் பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றார் என்றும் மணிரத்னம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது அவர் படத்தில் நடித்தது வரம் என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh #CCV
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய் என்று 4 கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன்.

    ஜோதிகா என்னிடம் ’உங்களோட படங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன். தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் நன்றாக நடிப்பதாக பாராட்டினார். இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகும் போது மிகவும் பயந்தேன். மணிரத்னம் எப்படி படப்பிடிப்பில் இருப்பார் என்று பயம் இருந்தது. 



    அவரைப் பார்க்கும் போது எப்போதும் கண்டிப்பாக இருப்பது போலவே இருக்கும். அவர் எவ்வளவு கூலான நபர் என்று நடித்து முடித்த பிறகு தான் புரிந்தது. அவருடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. எந்த ஒரு இடத்திலும் கோபப்படவே இல்லை. கஷ்டமே இல்லாமல் வேலை வாங்கினார். அவர் படத்தில் நடித்தது வரம்’ என்று கூறி இருக்கிறார்.
    ×